search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வாலிபால் போட்டியில் தோல்வியடைந்ததால் மாணவர்களுடன் சேர்ந்து தண்டால் எடுத்த கலெக்டர்
    X

    வாலிபால் போட்டியில் தோல்வியடைந்ததால் மாணவர்களுடன் சேர்ந்து 'தண்டால்' எடுத்த கலெக்டர்

    • விறு விறுப்பாக நடைபெற்ற போட்டியில் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையிலான அணி தோல்வியடைந்தது
    • அதிகாரிகள், பொதுமக்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியது.

    திருப்பூர்:

    உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் பல்லடம் வட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

    ஆய்வின் ஒரு பகுதியாக பல்லடம் அரசு மேல்நிலை ப்பள்ளி மாணவர் விடுதியை ஆய்வு செய்தார். அப்போது அங்கு மாணவர்கள் வாலிபால் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களுடன் கலெக்டர் கிறிஸ்துராஜ் கலந்துரையாடினார். அப்போது மாணவர்கள் தங்களுடன் வாலிபால் விளையாட வருமாறு அழைத்தனர்.

    மாணவர்கள் வற்புறுத்தலின் பேரில் கலெக்டர் போட்டியில் பங்கேற்றார். கலெக்டர் தலைமையில் ஒரு அணியும், மற்றொரு அணியும் மோதின. போட்டி தொடங்குவதற்கு முன்பாக மாணவர்களிடம் பேசிய கலெக்டர், இப்போட்டியில் தோல்வியடைந்தால் 10 தண்டால் எடுக்க வேண்டும் என்று சவால் விடுத்தார். அதனை 2 அணி மாணவர்களும் ஏற்றுக்கொண்டனர்.

    இதையடுத்து போட்டி தொடங்கியது. விறு விறுப்பாக நடைபெற்ற போட்டியில் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையிலான அணி தோல்வியடைந்தது. இதையடுத்து கலெக்டர் தனது அணி மாணவர்களுடன் சேர்ந்து 10 தண்டால் எடுத்தார். இது அங்கிருந்த அதிகாரிகள், பொதுமக்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×