search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருப்பூரில் கலைஞர் நூற்றாண்டு நூலகம்: அமைச்சர் நாளை திறந்து வைக்கிறார்
    X

    திருப்பூரில் கலைஞர் நூற்றாண்டு நூலகம்: அமைச்சர் நாளை திறந்து வைக்கிறார்

    • காலை 9 மணிக்கு மங்கலத்தில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறப்பு விழா மற்றும் தி.மு.க. கொடியேற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருப்பூர் வருகை தர உள்ளதால் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

    திருப்பூர்:

    தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை (சனிக்கிழமை) திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள தி.மு.க. கட்சி மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். காலை 9 மணிக்கு மங்கலத்தில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறப்பு விழா மற்றும் தி.மு.க. கொடியேற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

    பின்னர் காலை 11 மணிக்கு திருப்பூர் அங்கேரிபாளையம் ஜெகா கார்டன் முத்துகிருஷ்ணன் திருமண மண்டபத்தில் நடக்கும் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 265 ஊராட்சிகளில் உள்ள வீரர், வீராங்கனைகளுக்கு 33 வகையான விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

    பாராளுமன்ற தேர்தல் வெற்றிக்கு பிறகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருப்பூர் வருகை தர உள்ளதால் திருப்பூர் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். மேலும் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர்.

    Next Story
    ×