என் மலர்
தமிழ்நாடு

வைகுண்டர் அவதார தினத்தில் மதுக்கடைகளை மூடவேண்டும்-அண்ணாமலை

- நாளை அய்யா வைகுண்டரின் 193-வது அவதார தினம்
- ஏற்றத் தாழ்வை நீக்கி, சமத்துவமும், சமாதானமும் நிலவ வேண்டும்.
சென்னை:
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-
சமூகத்தில், ஏற்றத் தாழ்வை நீக்கி, சமத்துவமும், சமாதானமும் நிலவ வேண்டும் என்பதை போதித்த அய்யா வைகுண்டரின் 193-வது அவதார தினம், நாளை (4-ந் தேதி) கொண்டாடப்படுகிறது.
அய்யா வைகுண்டர் அவதார தினத்துக்காக, ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களுடன், அய்யா வைகுண்டரின் பக்தர்கள் அதிகம் உள்ள தென் மாவட்டங்களில் ஒன்றான விருதுநகர் மாவட்டத்துக்கும், அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டு மென்று, தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.
மேலும், அன்பையும், ஆன்மீகத்தையும், வலி யுறுத்திய அய்யா வைகுண்டரின் அவதார தினத்தன்று, மதுக்கடைகளை மூட வேண்டும் என்றும், அய்யா வைகுண்டரின் பக்தர்கள் சார்பாக, தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.