search icon
என் மலர்tooltip icon

    உலகம் (World)

    இலங்கை பாராளுமன்றம் இன்று கலைக்கப்படுகிறது?
    X

    இலங்கை பாராளுமன்றம் இன்று கலைக்கப்படுகிறது?

    • அனுர குமார திசநாயக நேற்று அதிபராக பதவி ஏற்றுக் கொண்டார்.
    • பாராளுமன்றத்தை கலைத்து உத்தரவு பிறப்பிக்க உள்ளதாக தகவல்.

    கொழும்பு:

    இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் கட்சி தலைவர் அனுர குமார திசநாயக வெற்றி பெற்றார். அவர் நேற்று அதிபராக பதவி ஏற்றுக் கொண்டார்.

    இதற்கிடையே பிரதமராக இருந்த தினேஷ் குணவர்தனே தனது பதவியை ராஜினாமா செய்தார். புதிய அதிபர் தலைமையில் புதிய அரசு அமைவதற்கு வசதியாக பதவியை ராஜினாமா செய்ததாக தினேஷ் குணவர்தனே தெரிவித்தார். இதனையடுத்து அவரது தலைமையிலான அமைச்சரவையும் பதவி விலகியது.

    இந்த நிலையில் அதிபர் அனுர குமார திசநாயக தலைமையில் 4 இடைக்கால அமைச்சர்கள் பதவியேற்க உள்ளனர்.


    மேலும் இன்று இரவு இலங்கை பாராளுமன்றத்தை கலைத்து அதிபர் அனுர குமார திசநாயக உத்தரவை பிறப்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    இலங்கையில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டால் 55 முதல் 66 நாட்களுக்கு தேர்தல் நடத்தப்பட வேண் டும். இதனால் இலங்கை பாராளுமன்றத்துக்கு வருகிற நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் பொதுத் தேர்தல் நடைபெறும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

    Next Story
    ×