search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    ஜி20 மாநாட்டில் பங்கேற்க ரஷிய அதிபர் புதின் இந்தியா வருகிறார்
    X

    ஜி20 மாநாட்டில் பங்கேற்க ரஷிய அதிபர் புதின் இந்தியா வருகிறார்

    • ஜி20 மாநாட்டில் பங்கேற்க ரஷிய அதிபர் புதின் இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
    • உக்ரைன் மீதான போருக்கு மத்தியில் ரஷிய அதிபர் புதின் ஜி20 மாநாட்டில் பங்கேற்றால் அது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும்.

    மாஸ்கோ:

    இந்தியாவில் வருகிற செப்டம்பர் 9, 10-ந்தேதிகளில் ஜி20 நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற உள்ளது.

    இதில் உலக தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். தற்போது இந்தியாவின் பல்வேறு இடங்களில் ஜி20 அமைப்பின் கூட்டங்கள் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் ஜி20 மாநாட்டில் பங்கேற்க ரஷிய அதிபர் புதின் இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    இது தொடர்பாக ரஷியாவின் கிரெம்ளின் மாளிகை செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் செப்டம்பர் மாதம் இந்தியாவில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் புதின் பங்கேற்பது பரிசீலிக்கப்படுகிறதா என்று கேள்வி கேட்கப்பட்டது.

    அதற்கு அவர் பதில் அளித்து கூறும்போது, அதை நிராகரிக்க முடியாது. ஆனால் இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஜி20 வடிவத்தில் ரஷியா அதன் முழு பங்கேற்பை தொடர்கிறது. நாங்கள் அதை தொடர விரும்புகிறோம் என்றார்.

    ரஷிய அதிபர் புதினின் இந்திய வருகை குறித்து அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. உக்ரைன் மீதான போருக்கு மத்தியில் ரஷிய அதிபர் புதின் ஜி20 மாநாட்டில் பங்கேற்றால் அது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும்.

    கடந்த ஆண்டு இந்தோனேசியாவின் பாலியில் நடந்த ஜி 20 மாநாட்டில் ரஷிய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தலைமையிலான குழு பங்கேற்றது 2020 மற்றும் 2021-ம் ஆண்டு நடந்த மாநாட்டில் புதின் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×