search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    வெளிமாநில தொழிலாளர்களுக்கு மருத்துவ அடையாள அட்டை- கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் உத்தரவு
    X

    வெளிமாநில தொழிலாளர்களுக்கு மருத்துவ அடையாள அட்டை- கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் உத்தரவு

    • மக்களுக்கு சுகாதாரம், உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை அதிகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
    • மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ்கள் வழங்குவதற்கான நடை முறை சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் குப்பை கழிவுகளால் பரவும் நோய் களைக் கட்டுப்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் கவர்னர் மாளிகையில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி பேசியதாவது:-

    புதுச்சேரி மாநிலத்தில் யானைக்கால் நோய் முற்றிலுமாக ஒழிக்கப்பட்ட நிலையில் வெளிமாநிலங்களில் இருந்து புதுச்சேரிக்கு வேலைசெய்ய வரும் பணியாளர்களுக்கு கால முறையில் யானைக்கால நோய் பாதிப்பு மற்றும் தொற்று நோய் அறிகுறிகள் குறித்து பரிசோதனைகள் நடத்த எற்பாடு செய்ய வேண்டும். அவர்களுக்கு மருத்துவ அடையாள அட்டை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். அதற்கான பதிவேடுகளை பராமரிக்க வேண்டும்.

    மருத்துவர்களும் வல்லுநர்களும் சுழற்சி முறையில் கிராமப்புறங்களுக்கு சென்று கிராமப்புற மக்களின் சுகாதாரமான சூழ்நிலையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். புதுச்சேரி அரசு சுகாதாரத் துறையில் பணியாற்றும் அலுவலர்கள் ஊழியர்க ளுக்கு சுழற்சி முறையில் பயிற்சி அளிக்க கோரிமேடு நோய் ஒழிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து செயல்பட வேண்டும்.

    மக்களுக்கு சுகாதாரம், உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை அதிகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பள்ளி-கல்லூரி மாணவர்களிடையே தூய்மை மற்றும் சுகாதாரமான சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை எற்படுத்த வேண்டும்.

    மக்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உடல்பருமன், சர்க்கரை நோய் போன்ற வாழ்வியல் நோய்களைக் கட்டுப்படுத்தவும் புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளி விளையாட்டு மைதானங்களை மக்கள் நடைப்பயிற்சி செய்வதற்கு ஏதுவாக திறந்து விடுவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய வேண்டும்.

    புதுச்சேரியில் யானைக் கால் நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ்கள் வழங்குவதற்கான நடை முறைசாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×