search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ஆன்லைனில் விபச்சார அழகியை தேடி பணத்தை இழந்த வாலிபர்
    X

    ஆன்லைனில் விபச்சார அழகியை தேடி பணத்தை இழந்த வாலிபர்

    • ஒரு பெண்ணை வாலிபர் தேர்ந்தெடுத்த நிலையில் ரூ.10 ஆயிரத்தை செலுத்துமாறு கூறியுள்ளார்.
    • சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் ஆன்லைன் மோசடியில் ஏமாறுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எவ்வளவுதான் போலீசார் வழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் சிலர் ஏமாறுவதை தடக்க முடியவில்லை.

    இதில் பெண் ஆசை காட்டி அதிகளவில் மோசடிகள் நடக்கிறது. புதுச்சேரி கல்மண்டபம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் உல்லாசமாக இருக்க ஆன்லைனில் பெண்கள் விவரங்களை தேடியுள்ளார். அப்போது அதில் குறிப்பிட்டு இருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

    எதிர்முனையில் பேசிய நபர் சில பெண்களின் புகைப்படங்களை அனுப்பி அதில் தேவையான பெண்ணை தேர்ந்தெடுக்குமாறு கூறியுள்ளார்.

    ஒரு பெண்ணை வாலிபர் தேர்ந்தெடுத்த நிலையில் ரூ.10 ஆயிரத்தை செலுத்துமாறு கூறியுள்ளார். அதன்படி அவரும் ஆன்லைன் மூலம் பணத்தை அனுப்பியுள்ளார்.

    எதிர்முனையில் பேசிய மர்ம நபர் புதுச்சேரி பஸ் நிலையம் அருகே உள்ள பிரபல ஓட்டலில் அந்த பெண் இருப்பதாகவும் அங்கு செல்லுமாறு கூறியுள்ளார். அதை நம்பி அங்கு சென்ற வாலிபருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

    அந்த ஓட்டலில் அவர் தேடி வந்த பெண் இல்லை. இதனால்தான் மோசடி செய்யபட்டதை உணர்ந்த அந்த வாலிபர் சைபர்கிரைம் போலீசில் புகார் செய்துள்ளார்.

    இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×