என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
குடும்ப தலைவிக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டம்: கவர்னர் தமிழிசை 23-ந்தேதி தொடங்கி வைக்கிறார்
- தொடர்ந்து பல துறைகளில் அரசின் உதவி பெற்ற பெண்கள் பட்டியல் பெற்று உதவி பெறாத குடும்ப தலைவிகளின் பட்டியல் கணக்கிடப்பட்டது.
- பலர் தகுதியானவர்களாக கண்டறியப்பட்டனர். இதனால் பயனாளிகளை 50 ஆயிரம் பேராக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவை அரசின் மாதாந்திர உதவித்தொகை பெறாத 21 முதல் 55 வயதிற்குட்பட்ட ஏழை குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 நிதியுதவி வழங்கப்படும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.
இந்த திட்டத்திற்கான மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை கோப்புக்கு கவர்னர் தமிழிசை கடந்த 12-ந்தேதி ஒப்புதல் அளித்தார். தொடர்ந்து பல துறைகளில் அரசின் உதவி பெற்ற பெண்கள் பட்டியல் பெற்று உதவி பெறாத குடும்ப தலைவிகளின் பட்டியல் கணக்கிடப்பட்டது. பலர் தகுதியானவர்களாக கண்டறியப்பட்டனர். இதனால் பயனாளிகளை 50 ஆயிரம் பேராக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு மாதம் ரூ.5 கோடி கூடுதல் செலவாகும். முதல்கட்டமாக 17 ஆயிரம் பேருக்கு உதவித்தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை வருகிற 23-ந் தேதி கதிர்காமம் இந்திராகாந்தி அரசு கல்லூரி வளாகத்தில் கவர்னர் தமிழிசை, முதல்-அமைச்சர் ரங்கசாமியால் தொடங்கி வைக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை முழுவீச்சில் செய்து வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்