search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Agni Sthalam"

    • முக்தி என்று சொன்னாலே ஈசனின் திருவடியை அடைவது தான்.
    • சிவபெருமானுக்கு உரிய தளங்களில் அக்னி தளமாகவும் உள்ளது.

    உலகம் தோன்றிய காலத்தில் இருந்து திருவண்ணாமலை இருப்பதாகவும் கூறப்படுகிறது. வெவ்வேறு யுகங்களில் இந்த மலை வெவ்வேறு விதமாக தோன்றியதாகவும் புராணங்களில் கூறப்பட்டுள்ளன.

    முதன்முதலாக கிருதா யுகத்தில் திருவண்ணாமலை அக்னி சொரூபமாக அக்னி மலையாக நெருப்பு பிழம்பாக இருந்ததாம். அடுத்ததாக மாணிக்கம் மலையாக திரேதா யுகத்திலும், தாமிர மலையாக துவாபர யுகத்திலும் கூறப்படுகிறது. தற்போது கல் மலையாகவும் உள்ளது.

    முக்தி என்று சொன்னாலே ஈசனின் திருவடியை அடைவது தான். அதேபோல அண்ணாமலையாரே நினைத்தாலே முக்தி. சிவபெருமானே மலையாக வைத்திருக்கும் தளம் தான் திருவண்ணாமலை. சிவபெருமானுக்கு உரிய தளங்களில் அக்னி தளமாகவும் உள்ளது. அதே போல சித்தர்களின் சொர்க்க பூமி திருவண்ணாமலை. இதற்கடுத்து தான் அண்ணாமலை என்று பெயர் உருவானது.

    அண்ணுதல் என்றால் நெருங்குவது என்று அர்த்தமாகும். இதற்கு எதிர்மறையான அர்த்தம் கொண்டது, அண்ணாமலை அதாவது நெருங்க முடியாதது என்ற அர்த்தமாகும். அடி முடி காணா அண்ணாமலையார் என்ற புகழ்பெற்ற பிரம்மன் மற்றும் விஷ்ணுவின் கர்வம் அழித்த புண்ணித தலம் இதுதான்.

    மேலும் சித்தர்களுக்கு எல்லாம் சித்தர் சிவபெருமான் தான். இதனால் தான் 18 சித்தர்களும், அவர்களின் சீடர்களான188 சித்தர்களும் அரூபமாக திருவண்ணாமலையில் இருக்கிறார்க்ள். அதேபோல திருவண்ணாமலை 14 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட மலைப்பகுதியில் பல்வேறு சித்தர்களின் சமாதிகளும் உள்ளன.

    ×