search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CM with people"

    • தி.மு.க. அரசு பொறுப்பேற்றது முதல் மக்கள் நலப்பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.
    • மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டம் கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கப்பட்டது.

    சென்னை:

    தி.மு.க. அரசு பொறுப்பேற்றது முதல் மக்கள் நலப்பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. அதன் அடிப்படையில் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு விரைவில் தீர்வு காணும் வகையில் மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.

    இந்தத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த டிசம்பரில் கோவையில் தொடங்கி வைத்தார்.

    இந்நிலையில், மக்களுடன் முதல்வர் திட்டத்தின் இரண்டாவது கட்டம் ஜூலை மாதம் தொடங்கி செப்டம்பர் 15-ம் தேதி வரை நடைபெற உள்ளது. சுமார் 2,500 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது.

    இந்த முகாமில் பெறும் மனுக்களுக்கு ஆகஸ்ட் 15 முதல் அக்டோபர் 15-ம் தேதிக்குள் தீர்வு காணப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×