search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Harur accident"

    தருமபுரி மாவட்டம் அரூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் திருப்பூர் போலீஸ்காரர் படுகாயமடைந்தார்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் அரூரை அடுத்த ஈட்டியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 40). இவர் திருப்பூர் ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். தீபாவளிக்காக விடுமுறையில் ஊருக்கு வந்து இருந்தார்.

    நேற்று இரவு 6 மணிக்கு ஈட்டியம்பட்டியில் இருந்து அரூர் அருகே உள்ள புறாக்கள் குட்டை பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிரே வந்த இன்னொரு மோட்டார் சைக்கிள் இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அவரை தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்து உள்ளனர்.

    இந்த விபத்து குறித்து அரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
    ×