என் மலர்
நீங்கள் தேடியது "Imran Khan"
- சட்டப்பிரிவு 370வது பிரிவு நீக்கப்பட்ட பிறகு, காஷ்மீரில் இந்திய ஒடுக்குமுறை இன்னும் அதிகரித்துள்ளது.
- மோடியின் போர் வெறியையும், பிராந்திய அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் அவரது ஆபத்தான லட்சியங்களையும் பாகிஸ்தான் கண்டிக்கிறது.
பஹல்காம் தாக்குதல் குறித்து மோடி அரசை பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் விமர்சித்துள்ளார்.
ஊழல் வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் இம்ரான் கான் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பஹல்காம் சம்பவத்தில் ஏற்பட்ட உயிர் இழப்பு மிகவும் கவலையளிக்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
புல்வாமா சம்பவம் நடந்தபோது, நாங்கள் இந்தியாவிற்கு சாத்தியமான அனைத்து ஆதரவையும் வழங்கினோம், ஆனால் இந்தியா எந்த உறுதியான ஆதாரத்தையும் வழங்கத் தவறிவிட்டது.
2019 இல் நான் கணித்தது போல, பஹல்காம் சம்பவத்திற்குப் பிறகும் அதேதான் நடக்கிறது. சுயபரிசோதனை மற்றும் விசாரணைக்கு பதிலாக, மோடி அரசாங்கம் மீண்டும் பாகிஸ்தானைக் குறை கூறுகிறது.
நவாஸ் ஷெரீப் மற்றும் ஆசிப் சர்தாரி போன்ற சுயநலவாதிகளிடமிருந்து எந்தவிதமான கடுமையான நிலைப்பாட்டையும் எதிர்பார்ப்பது முட்டாள்தனம். அவர்களின் சட்டவிரோத சொத்து மற்றும் வணிக நலன்கள் வெளிநாட்டில் இருப்பதால் அவர்கள் ஒருபோதும் இந்தியாவுக்கு எதிராகப் பேச மாட்டார்கள்.
1.5 பில்லியன் மக்கள் வசிக்கும் நாடாக இந்தியா இருப்பதால், குழப்பமடைவதற்குப் பதிலாக பொறுப்புடன் செயல்பட வேண்டும். அமைதியே எங்கள் முன்னுரிமை, ஆனால் அதை கோழைத்தனம் என்று தவறாகக் கருதக்கூடாது.
2019 ஆம் ஆண்டில், முழு நாட்டின் ஆதரவுடன் எனது அரசாங்கம் செய்தது போல், எந்தவொரு இந்திய ஆக்கிரமிப்புக்கும் தகுந்த பதிலடி கொடுக்கும் முழு திறனையும் பாகிஸ்தான் கொண்டுள்ளது. ஐ.நா. தீர்மானங்களால் உத்தரவாதம் அளிக்கப்பட்டபடி, காஷ்மீரிகளின் சுயநிர்ணய உரிமையின் முக்கியத்துவத்தை நான் எப்போதும் வலியுறுத்தி வருகிறேன்.
ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தால் இந்தியா இந்த பிராந்தியத்திற்கு மட்டுமல்ல, அதற்கு அப்பாலும் கடுமையான அச்சுறுத்தலாக உள்ளது. சட்டப்பிரிவு 370வது பிரிவு நீக்கப்பட்ட பிறகு, காஷ்மீரில் இந்திய ஒடுக்குமுறை இன்னும் அதிகரித்துள்ளது. இது காஷ்மீர் மக்களின் சுதந்திரத்திற்கான விருப்பத்தை மேலும் அதிகரித்துள்ளது.
மோடியின் போர் வெறியையும், பிராந்திய அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் அவரது ஆபத்தான லட்சியங்களையும் பாகிஸ்தான் ஒரு நாடாக வன்மையாக கண்டிக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
- தெற்காசியாவில் அமைதியை மேம்படுத்துவதற்கான முயற்சிகளுக்காக இம்ரான் கான் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
- கடந்த ஜனவரியில் அவருக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்திற்கான பங்களிப்புகளுக்காக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
நார்வே நாட்டின் அரசியல் கட்சியான பார்ட்டியேட் சென்ட்ரம் உடன் இணைந்த ஒரு வழக்கறிஞர் குழுவான பாகிஸ்தான் வேர்ல்ட் அலையன்ஸ் அமைப்பினர் இம்ரான் கானின் பெயரை பரிந்துரைத்துள்ளனர்.
இதுதொடர்பாக பார்ட்டியேட் சென்ட்ரம் கட்சி தனது அதிகாரபூர்வ எக்ஸ் பதவில், பாகிஸ்தானில் ஜனநாயகத்தை மேம்படுத்துவதில் இம்ரான் கான் ஆற்றிய பணிக்காக அவர் அங்கீகரிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.
2019 ஆம் ஆண்டில், தெற்காசியாவில் அமைதியை மேம்படுத்துவதற்கான முயற்சிகளுக்காக இம்ரான் கான் அமைதிக்கான நோபல் பரிசுக்கு முதன்முதலில் பரிந்துரைக்கப்பட்டார். தற்போது இரண்டாவது முறையாக அந்த பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

ஆனால் ஒவ்வொரு ஆண்டும், நார்வே நோபல் குழு நூற்றுக்கணக்கான பரிந்துரைகளைப் பெறுகிறது, அதன் பிறகு அவர்கள் எட்டு மாத கால செயல்முறைக்கு பிறகு வெற்றியாளரைத் தேர்ந்தெடுக்கிறார்கள்
முன்னாள் கிரிக்கெட் வீரரான இம்ரான் கான் 1996 இல் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சியை தொடங்கினார். கடந்த 2018 முதல் 2022 வரை பாகிஸ்தான் பிரதமராக இருந்தார்.
அவரது பதவிக்காலத்தில் நடைபெற்ற ஊழல் தொடர்பான வழக்குகளில் கடந்த 2023 முதல் சிறையில் உள்ளார். கடந்த ஜனவரியில் அவருக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
- இம்ரான் கானை ஆதரித்ததாக அமீர் ஜமாலுக்குப் பாகிஸ்தான் ரூபாயில் 1.4 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.
- இதன் காரணமாகத்தான், நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியில் அமீர் ஜமால் சேர்க்கப்படவில்லை.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான அமீர் ஜமால், தனது டெஸ்ட் தொப்பியில் '804' என்ற எண்ணை எழுதியதற்காக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தானிய ரூபாய் மதிப்பில் அவருக்குச் சுமார் 1.4 மில்லியன் அபராதம் விதித்திருக்கிறது.
முன்னதாக, கடந்த ஆண்டு அக்டோபரில் இங்கிலாந்துக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின்போது, அமீர் ஜமால் 804 என்ற நம்பர் எழுதியிருந்த தொப்பியை அணிந்திருந்தார். இந்த 804 என்ற எண்ணானது, சிறையிலிருக்கும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தானுக்கு ஒருநாள் உலகக் கோப்பையை வென்று கொடுத்த முன்னாள் கேப்டனுமான இம்ரான் கானின் கைதி நம்பரைக் குறிக்கிறது.
இதனால், கிரிக்கெட்டில் அரசியலைக் கொண்டுவந்து இம்ரான் கானை ஆதரித்ததாக அமீர் ஜமாலுக்குப் பாகிஸ்தான் ரூபாயில் 1.4 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாகத்தான், நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியில் அமீர் ஜமால் சேர்க்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், தங்கள் வீரர்கள் மீது இவ்வாறு ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது இது முதல் முறையல்ல.
கடந்த ஆண்டு, ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது தாமதமாக வந்ததற்காக சைம் அயூப், சல்மான் அலி அகா, அப்துல்லா ஷஃபிக் உட்படப் பல பாகிஸ்தான் வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், இந்த ஆண்டு தொடக்கத்தில் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தின்போது, தாமதமாக வந்ததற்காக சுபியான் முகீம், அப்பாஸ் அஃப்ரிடி, உஸ்மான் கான் ஆகியோருக்குத் தலா 200 டாலர் அபராதம் விதிக்கப்பட்டது.
- இம்ரான்கான், நவம்பர் 4 ஆம் தேதி இஸ்லாமாபாத்திற்கு வர திட்டமிட்டுள்ளார்.
- பாகிஸ்தானில் பிரமாண்ட பேரணியை நடத்திய இம்ரான்கான் இந்தியாவை மீண்டும் பாராட்டி பேசினார்.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கடசி தலைவருமான இம்ரான்கான் மற்றும் பிற கட்சி நிர்வாகிகள் லாகூரில் உள்ள லிபர்ட்டி சவுக்கிலிருந்து இஸ்லாமாபாத்திற்கு மிகப் பெரும் பேரணியை தொடங்கினர். இந்த பேரணிக்கு நாட்டின் உண்மையான சுதந்திரத்திற்கான போராட்டம் என பெயரிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் தலைமையிலான கூட்டணி அரசு அமைதியை நிலைநாட்ட விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது, அதே நேரத்தில் சட்டம்-ஒழுங்கு நிலைமையை உருவாக்கும் எந்த முயற்சியும் இரும்புக்கரம் கொண்டு எதிர்கொள்ளப்படும் எனவும் எச்சரித்துள்ளது.
லிபர்ட்டி சவுக்கில் ஆதரவாளர்களிடம் பேசிய இம்ரான்கான் தனது முதல் உரையில் இந்தியாவின் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையைப் பாராட்டி பேசினார். தொடர்ந்து இம்ரான்கான் பேசியதாவது:
எனக்கு நிறைய விஷயங்கள் தெரியும், ஆனால் நான் என் நாட்டிற்கு தீங்கு விளைவிக்க விரும்பவில்லை என்பதால் அமைதியாக இருக்கிறேன். முன்னேற்றத்திற்காக ஆக்கபூர்வமான விமர்சனங்களை செய்கிறேன். இல்லையெனில் என்னால் நிறைய சொல்ல முடியும்.
சுதந்திரமான பாகிஸ்தானைப் பார்க்க விரும்புவதாகவும், அதற்கு சக்திவாய்ந்த ராணுவம் தேவை. நாங்கள் பாதுகாப்பு நிறுவனங்களை விமர்சிக்கும்போது, அது ஆக்கப்பூர்வமாகவும் உங்கள் முன்னேற்றத்திற்காகவும் இருக்கிறது. நான் இதை மீண்டும் சொல்கிறேன், என்னால் நிறைய சொல்ல முடியும் மற்றும் உங்களுக்கு பதிலளிக்க முடியும். ஆனால் பாதுகாப்பு நிறுவனங்கள் பலவீனமடைவதை நான் விரும்பவில்லை.
எனக்கு சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் வேண்டும். யார் நாட்டை வழிநடத்துவது என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என தெரிவித்தார்.
இம்ரான்கான் ஏற்கனவே நடத்திய பேரணிகளின் போது வன்முறை வெடித்ததால் பாதுகாப்பிற்காக லாகூர் முதல் இஸ்லாமாபாத் வரை போலீசார் குவிக்கப்பட்டனர்.
- இம்ரான்கானை எம்.பி. பதவியில் இருந்து தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்தது.
- இம்ரான்கான் பிரமாண்ட பேரணியை நடத்தி வருகிறார்.
இஸ்லாமாபாத் :
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி, தடைசெய்யப்பட்ட நாடுகளிடம் இருந்து நிதி பெற்றதாக எழுந்த புகார் குறித்து அந்த நாட்டு தேர்தல் ஆணையம் விசாரித்து வந்தது. இதில் அக்கட்சி முறைகேடாக நிதி பெற்றதை உறுதி செய்த தேர்தல் ஆணையம் அக்கட்சியின் தலைவரான இம்ரான்கானை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்தது.
இந்த நிலையில் பாகிஸ்தானில் முன்கூட்டியே பொதுத்தேர்தலை நடத்த வலியுறுத்தி தலைநகர் இஸ்லாமாபாத் நோக்கி இம்ரான்கான் பிரமாண்ட பேரணியை நடத்தி வருகிறார். நேற்று 4-வது நாளாக பஞ்சாப் மாகாணத்தில் நடந்த பேரணியில் பங்கேற்று பேசிய இம்ரான்கான் தன்னை தகுதி நீக்கம் செய்ததன் மூலம் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தின் தலைவர் சிக்கந்தர் சுல்தான் ராஜாவுக்கு ரூ.100 கோடி கேட்டு அவதூறு வழக்கு தொடரப்போவதாக கூறினார்.
- துப்பாக்கி சூட்டில் பிடிஐ கட்சியினர் சிலருக்கும் காயம் ஏற்பட்டது.
- இம்ரான் கான் பாதுகாப்பாக குண்டு துளைக்காத வாகனத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
வசிராபாத்:
பாகிஸ்தானின் வசிராபாத்தில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் அரசுக்கு எதிராக பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணியின்போது இம்ரான் கான் திறந்த வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். சபராலி கான் சவுக் என்ற இடத்தில் பேரணி சென்றபோது அவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் இம்ரான்கானின் காலில் காயம் ஏற்பட்டது. அவரது கட்சியினர் (பிடிஐ) சிலரும் காயமடைந்தனர்.
துப்பாக்கி சூடு சம்பவத்தைத் தொடர்ந்து இம்ரான் கான் பாதுகாப்பாக குண்டு துளைக்காத வாகனத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
- துப்பாக்கி சூடு நடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
- AK-47 துப்பாக்கியுடன் மற்றொரு நபர் இருந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் முன்னாள் பிரதமரும், பிடிஐ கட்சி தலைவருமான இம்ரான் கான் இன்று பஞ்சாப் மாகாணத்தின் வசிராபாத்தில் அரசுக்கு எதிராக பேரணி நடத்தினார். திறந்த வாகனத்தில் ஆதரவாளர்களுடன் அவர் சென்றபோது ஒரு நபர் திடீரென அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் இம்ரான் கானின் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் லாகூரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். துப்பாக்கி சூடு நடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ 2007-ல் ஒரு பேரணியின் போது எப்படி படுகொலை செய்யப்பட்டார்? என்பதை இன்றைய தாக்குதல் நினைவுபடுத்தியது.
ஷெபாஸ் ஷெரீப் அரசாங்கத்திற்கு எதிரான நடந்த பேரணியின் மையப்பகுதியில் டிரக்கின் மீது இம்ரான் கான் நின்றபோது, கீழே இருந்து அந்த நபர் துப்பாக்கியால் சுடும்போது பதிவான வீடியோ வெளியாகி உள்ளது.
தாக்குதல் நடத்திய வாலிபர், யாரும் தன்னை தூண்டிவிடவில்லை என்றும், இம்ரான் கான் மக்களை தவறாக வழிநடத்துகிறார் என்ற கோபத்தில் அவரை கொல்ல விரும்பியதாகவும் கூறியுள்ளார். இதுதொடர்பான வீடியோவை பத்திரிகையாளர் ஒருவர் பகிர்ந்துள்ளார். தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் AK-47 துப்பாக்கியுடன் மற்றொரு நபர் இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் அது காவல்துறையால் உறுதி செய்யப்படவில்லை.
- இம்ரான்கான் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் பாகிஸ்தானில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- இம்ரான்கான் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதற்கு பாபர் ஆசம், சோயப் அக்தர் உள்பட பலர் கண்டனம் தெரிவித்தனர்.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான், அந்நாட்டு அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார். அந்த வகையில் வஜிராபாத் நகரில் இம்ரான்கான் தலைமையில் நேற்று பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் இம்ரான்கானின் வலது காலில் குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டது. உடனடியாக இம்ரான்கான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இம்ரான்கான் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் பாகிஸ்தானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் ஆசம், அந்த அணியின் முன்னாள் வீரர் சோயப் அக்தர் உள்பட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக பாபர் ஆசம் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், இம்ரான்கான் மீதான கொடூரமான தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
இதேபோல், சோயப் அக்தர், வாசிம் அக்ரம், முகமது ஹபீஸ் ஆகியோரும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
- சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு இன்ஸ்பெக்டர் ஜெனரல் (ஐஜி) பஞ்சாப் காவல்துறைக்கு எலாஹி உத்தரவிட்டார்.
- காவல் நிலைய ஊழியர்களின் அனைத்து மொபைல் போன்களும் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அவை தடயவியல் தணிக்கைக்கு அனுப்ப உத்தரவு.
பாகிஸ்தானில் முன்னாள் பிரதமரும், பிடிஐ கட்சி தலைவருமான இம்ரான் கான் நேற்று பஞ்சாப் மாகாணத்தின் வசிராபாத்தில் அரசுக்கு எதிராக பேரணி நடத்தினார். திறந்த வாகனத்தில் ஆதரவாளர்களுடன் அவர் சென்றபோது ஒரு நபர் திடீரென அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.
இதில் இம்ரான் கானின் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் லாகூரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இம்ரான்கானை துப்பாக்கியால் சுட்ட நவீத் என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் வசீராபாத் தாலுகாவில் உள்ள ஜோத்ரா என்ற பகுதியை சேர்ந்தவர் ஆவார். நவீத்திடம் இருந்து 9 எம்.எம். ரக கைத்துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.
கைதாகி உள்ள நவீத் போலீசாரிடம் வீடியோ வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்நிலையில், போலீசாரிடம் நவீத் அளித்த ஒப்புதல் வாக்குமூலம் வீடியோ கசிந்துள்ளது. இதனால் வீடியோவை கசியவிட்டதற்காக காவல்துறை அதிகாரிகள் மற்றும் பிற அதிகாரிகளை அம்மாகாண முதல்வர் சவுத்ரி பெர்வைஸ் இலாஹி அதிரடியாக இடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு இன்ஸ்பெக்டர் ஜெனரல் (ஐஜி) பஞ்சாப் காவல்துறைக்கு எலாஹி உத்தரவிட்டார்.
மேலும், காவல் நிலைய ஊழியர்களின் அனைத்து மொபைல் போன்களும் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அவை தடயவியல் தணிக்கைக்கு அனுப்பப்படும் என்றும் முதல்வர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கி சூடுக்கான நோக்கத்தை கண்டறிய விசாரணையைத் தொடங்குமாறு பஞ்சாப் ஐஜிக்கு அவர் உத்தரவிட்டார்.
- துப்பாக்கி சூட்டில் அவருடன் சென்ற அவரது தெஹ்ரீக்- இன்சாப் கட்சியின் உள்ளூர் தலைவரான அகமது சத்தா உள்பட 10 பேர் படுகாயமடைந்தனர்.
- துப்பாக்கி சூட்டின் பின்புலத்தில் பிரதமர் ஷபாஸ்ஷெரீப் உள்பட 3 பேர் மீது இம்ரான்கான் குற்றம் சாட்டியுள்ளார்.
பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் (வயது70), நாட்டில் முன்கூட்டியே தேர்தல் நடத்த வலியுறுத்தியும், அந்நாட்டு அரசுக்கு எதிராகவும் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் நேற்று பஞ்சாப் மாகாணம் வஜிராபாத் நகரில் இம்ரான்கான் தலைமையில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது. இதில் இம்ரான்கான் கலந்து கொண்டு பேச இருந்தார்.
பேரணி அல்லாபாத் சவுக் என்ற இடத்திற்கு அருகே வந்தபோது மர்மநபர் ஒருவர் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து இம்ரான்கான் நோக்கி சுட்டார். இதில் ஒரு குண்டு இம்ரான்கான் காலில் பாய்ந்து அவர் படுகாயமடைந்தார்.
இந்த துப்பாக்கி சூட்டில் அவருடன் சென்ற அவரது தெஹ்ரீக்- இன்சாப் கட்சியின் உள்ளூர் தலைவரான அகமது சத்தா உள்பட 10 பேர் படுகாயமடைந்தனர்.
உடனடியாக இம்ரான்கான் உள்பட படுகாயமடைந்த அனைவரும் லாகூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு இம்ரான்கானுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
துப்பாக்கி சூட்டில் காயமடைந்த ஒருவர் இறந்துவிட்டதாகவும், மற்ற 9 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பிரதமர் ஷபாஸ்ஷெரீப், முன்னாள் பிரதமர் நவாப் ஷெரீப் மற்றும் பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் துப்பாக்கி சூட்டின் பின்புலத்தில் பிரதமர் ஷபாஸ்ஷெரீப் உள்பட 3 பேர் மீது இம்ரான்கான் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக இம்ரான்கானின் தெஹ்ரீக்- இன்சாப் கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகியும், இம்ரான்கானின் நண்பருமான ஆசாத்உமர், மியான் அஸ்லாம் இக்பால் ஆகியோர் கூறுகையில், இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தின் பின்புலத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ்ஷெரீப், உள்துறை மந்திரி ராணா சனாவுல்லா, ராணுவ தளபதி மேஜர் ஜெனரல் பைசல் ஆகிய 3 பேர் இருப்பதாக இம்ரான்கான் நம்புகிறார்.
அவருக்கு கிடைத்த உறுதியான தகவலின் அடிப்படையிலேயே இதனை கூறுவதாக அவர் எங்களிடம் தெரிவித்தார் என்றனர்.
இதற்கிடையே இம்ரான்கான் மருத்துவமனையில் இருந்து வெளியிட்ட அறிக்கையில், "இறைவன் அருளால் எனக்கு இன்னொரு வாழ்க்கை கிடைத்துள்ளது. மீண்டும் வலிமையுடன் போராடுவேன்" என கூறியுள்ளார். ஏற்கனவே பாகிஸ்தானில் மேஜர் ஜெனரல் நியமனம் விவகாரம் தொடர்பாக பிரதமர் ஷெரீப்க்கு எதிராக இம்ரான்கான் தொடர்ந்து அறிக்கைகளை வெளியிட்டு வந்தார்.
இந்தநிலையில் இம்ரான்கான் பேரணியில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதும் அதன் பின்னணியில் பிரதமர் இருப்பதாக அவர் குற்றம்சாட்டி இருப்பதும் அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இம்ரான்கானை துப்பாக்கியால் சுட்ட நவீத் என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் வசீராபாத் தாலுகாவில் உள்ள ஜோத்ரா என்ற பகுதியை சேர்ந்தவர் ஆவார். நவீத்திடம் இருந்து 9 எம்.எம். ரக கைத்துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.
கைதாகி உள்ள நவீத் போலீசாரிடம் வீடியோ வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
இம்ரான்கான் மக்களை தவறான பாதையில் வழிநடத்துகிறார். அதனால்தான் அவரை கொலை செய்ய முயற்சித்தேன். அவர் பேரணியை தொடங்கிய அன்றே கொலை செய்ய திட்டமிட்டேன். அதன்படி நான் இருசக்கர மோட்டார் வாகனம்மூலம் பேரணி நடைபெறும் பகுதிக்கு வந்தேன். அங்குள்ள உறவினரின் கடையில் வாகனத்தை நிறுத்திவிட்டு சம்பவ இடத்திற்கு வந்தேன். என்னுடைய இந்த செயலுக்கு பின்னால் வேறு யாரும் இல்லை. தனியாகவே இதை திட்டமிட்டு செய்தேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். அதே நேரம் இந்த சம்பவத்தில் நவீத்துடன் மேலும் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
அதாவது இம்ரான்கான் மீது துப்பாக்கி சூடு நடத்தியவர்களில் ஒருவர் கைத்துப்பாக்கியுடனும், மற்றொருவர் தானியங்கி வகை துப்பாக்கியையும் வைத்திருந்தாக போலீசார் தெரிவித்தனர்.
இதில் ஒருவரான நவீத் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மற்றொருவரை பேரணியில் பங்கேற்றவர்கள் மடக்கி பிடித்து அடித்துக்கொன்றுவிட்டதாக கூறப்படுகிறது.
- இம்ரான்கான் மீதான இந்த கொடூர தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன் என பாபர் அசாம் கூறியுள்ளார்.
- அல்லாவே, பாகிஸ்தானை பாதுகாக்க வேண்டும் என பதிவு செய்துள்ளார்.
இம்ரான்கான் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் பாகிஸ்தானில் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் அவரது கட்சியினர் தொடர்ந்து பல இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இம்ரான்கான் மீதான துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு கிரிக்கெட் வீரர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
உலக கோப்பை டி20 போட்டியில் பங்கேற்றுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர்அசாம் தனது 'டுவிட்டர் பக்கத்தில் இம்ரான்கான் மீதான இந்த கொடூர தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். அல்லாவே, பாகிஸ்தானை பாதுகாக்க வேண்டும்' என பதிவு செய்துள்ளார்.
இதேபோல முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் தனது 'டுவிட்டர் பக்கத்தில், வஜிராபாத்தில் நடந்த நிகழ்வை நினைத்து கவலையடைகிறேன். இம்ரான்பாய் மற்றும் அங்குள்ள அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன். இந்த சமயத்தில் ஒரு நாடாக நாம் ஒன்று பட வேண்டும். நமது தேசிய ஒற்றுமையை சிதைக்க யாரையும் அனுமதிக்க கூடாது' என்று கூறியுள்ளார்.
இதேபோல முஸ்தாக் அகமது, உமர்குல், வகாப் ரியாஸ், சோயப்அக்தர், முகமது ஹபீஸ் உள்ளிட்ட பாகிஸ்தான் வீரர்கள் பலரும் இம்ரான்கான் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
- நாடு முழுவதும் நடந்து வரும் போராட்டங்களால் பாகிஸ்தானில் பதற்றம் நிலவுகிறது.
- இஸ்லாமாபாத்தை நோக்கிய பேரணியை தொடர்வேன் என இம்ரான்கான் சூளுரைத்தார்.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். நாடு முழுவதும் நடந்து வரும் போராட்டங்களால் பாகிஸ்தானில் பதற்றம் நிலவுகிறது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் நாட்டில் முன்கூட்டியே பொதுத் தேர்தலை நடத்த வலியுறுத்தி தன்னுடைய பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் சார்பில் லாகூரில் இருந்து தலைநகர் இஸ்லாமாபாத் நோக்கி பிரமாண்ட பேரணியை கடந்த வாரம் தொடங்கினார்.
இந்தப் பேரணி நேற்று முன்தினம் பஞ்சாப் மாகாணம் வாஜிராபத் நகருக்குச் சென்றது. இம்ரான்கான் கன்டெய்னர் லாரியில் பேரணியாகச் சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இம்ரான்கானை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதில் அவரது வலது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. அதோடு அவருடன் நின்றிருந்த கட்சியின் மூத்த தலைவர்கள் சிலரும் காயமடைந்தனர்.
இதையடுத்து, இம்ரான்கான் உடனடியாக லாகூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு,அறுவை சிகிச்சை மூலம் காலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு அகற்றப்பட்டது. அவர் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இந்த சதித்திட்டத்தின் பின்னணியில் பிரதமர் ஷபாஸ் ஷெரீப், உள்துறை மந்திரி மற்றும் உளவுத்துறை தலைவர் ஆகியோர் இருப்பதாக இம்ரான்கான் குற்றம் சாட்டினார். இஸ்லாமாபாத்தை நோக்கிய பேரணியை தொடர்வேன் என சூளுரைத்தார்.
இந்நிலையில், இம்ரான்கான் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் குதித்தனர். இஸ்லாமாபாத், லாகூர், கராச்சி உள்பட பல்வேறு முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் வீதிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கராச்சியில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தை நடத்தினர். பைசலாபாத் நகரில் உள்துறை மந்திரி ராணா சனாவுல்லா வீட்டுக்கு வெளியே நூற்றுக்கணக்கானோர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர் போராட்டங்களால் பாகிஸ்தானில் பதற்றமான சூழல் நிலவுகிறது.