search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kudavayil Thalam"

    • இருப்பினும் பூர்வஜன்ம வினையின் காரணமாக அவரை தொழு நோய் பற்றியிருந்தது.
    • அவர் இத்தலத்து இறைவரை மனம் உருகி பூஜித்து வந்தார்.

    குடவாயில் என்னும் தலம் திருத்தலையாலங்காட்டிற்கு மேற்கே அமைந்துள்ளது.

    இங்கு எழுந்தருளியிருக்கும் இறைவரின் பெயர் கோணேசுவரர். இறைவியின் பெயர் பெரிய நாயகி.

    திருணபிந்து என்னும் முனிவர் சிவபக்தி நிறைந்தவர்.

    இருப்பினும் பூர்வஜன்ம வினையின் காரணமாக அவரை தொழு நோய் பற்றியிருந்தது.

    அவர் இத்தலத்து இறைவரை மனம் உருகி பூஜித்து வந்தார்.

    அந்த அன்பரின் துன்பத்தினைப் போக்க திருவுளம் கொண்ட எம்பெருமான் அங்கிருந்த குடத்திலிருந்து வெளிப்பட்டு அவருடைய தொழு நோயை நீக்கி அருளினார்.

    இறைவனின் பெருங்கருணையைக் கொண்டு அம்முனிவர் இறைவனின் திருப்பாதங்களில் வீழ்ந்து பணிந்தார்.

    எத்தகைய கொடிய நோய்கள் பீடித்தவராக இருந்தாலும் இத்தலத்தில் அமைந்திருக்கும் அமிர்த தீர்த்தத்தில் மூழ்கி இறைவன் கோணேஸ்வரரையும் இறைவி பெரிய நாயகியம்மையையும் மனம் உருகி பூரண நம்பிக்கையுடன் வழிபட்டால் அனைத்து நோய்களும் விலகும்.

    குறிப்பாக தொழு நோய் மற்றும் சரும வியாதிகள் அனைத்தும் விலகும்.

    ×