என் மலர்
நீங்கள் தேடியது "Maha Prathyangira Kali Temple"
- நள்ளிரவில் மிளகாய் வத்தல் யாகம் நடத்தினர்.
- வேத மந்திரங்கள் ஓதியவாரு ஜப்பான் நாட்டினர் பூஜையில் கலந்துகொண்டனர்.
புதுச்சேரி:
ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் நடிகைகள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் புதுச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள தமிழக பகுதியில் உள்ள கோவில்களில் ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் உலக நன்மை வேண்டியும், அமை திகாக்கவும் புதுச்சேரியை அடுத்த மொரட்டாண்டி பகுதியில் அமைந்துள்ள உலகிலேயே மிக உயரமான மகா பிரத்தியங்கிரா காளி கோவிலில் நேற்று நள்ளிரவில் மிளகாய் வத்தல் யாகம் நடத்தினர்.
கோவில் பீடா திபதி நடாத்தூர் ஜனார்த்தனன் சாமிகள் தலைமையில் நடைபெற்ற பூஜையில் 108 கிலோ மிளகாய் வத்தல் உட்பட 108 யாக பொருட்களைக்கொண்டு பூஜைகள் நடந்தது. இதில் இந்திய முறைப்படி வேத மந்திரங்கள் ஓதியவாரு ஜப்பான் நாட்டினர் பூஜையில் கலந்துகொண்டனர்.
பின்னர் பய பக்தியுடன் பிரத்தியங்கிரா காளியை வழிபட்டனர். ஜப்பான் நாட்டினர் இந்திய முறைப்படி யாகம் நடத்தி சாமி தரிசனம் செய்ததை கோவிலுக்கு வந்த பக்தர்கள் பார்த்து வியப்படைந்தனர்.