search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mental illnesses"

    • நோயாளிகளும், உறவினர்களும் பயந்து ஓடியிருக்கிறார்கள்.
    • காளையார்கோவில் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    வலைத்தள வாசிகளின் சேட்டை சில நேரங்களில் எல்லை மீறி செல்வதும் தொல்லை கொடுப்பதாக மாறுவதும் உண்டு.

    ஆனால் ஒரு உண்மையை பொய்யாக்கி திசை திருப்பும் மோசமான செயல்களில் ஈடுபடுவதுதான் சிலருக்கு வாடிக்கையாகி விட்டது. அது எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அவர்கள் உணர்வதில்லை.

    கடந்த 2 நாட்களாக சிவகங்கை பகுதியில் ஒருவரை குரங்கு கடித்ததால் அவர் குரங்கு போலவே மாறி விட்டார். குரங்கு போல் முகத்தை வைத்து கொண்டு கிரில் கதவுகளில் தாவுகிறார். அருகே செல்பவர்களை பார்த்து உருமுகிறார் என்றெல்லாம் வீடியோ பதிவுடன் பரப்புகிறார்கள். அதை யார் பார்த்தாலும் நம்பத்தான் செய்வார்கள்.

    ஆனால் உண்மை அது வல்ல. இது தொடர்பாக சிவகங்கை மாவட்டத்தில் விசாரித்த போது கிடைத்த தகவல் அதிர்ச்சி அடைய வைத்தது.

    காளையார்கோவிலை சேர்ந்தவர் சரவணன். மனநல சிகிச்சை பெற்று வரும் இவர் காளையார்கோவில் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    நோய் முற்றிய நிலையில் அவரை காளையார்கோவில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றுள்ளார்கள். அங்கு டாக்டர்கள் இல்லாததால் 108 ஆம்புலன்ஸ் மூலம் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றுள்ளார்கள். ஆம்புலன்சில் இருந்து இறங்க மறுத்த சரவணன் அங்கிருந்த கிரில் கதவில் தாவி குதித்து ஏறியிருக்கிறார். அருகில் நெருங்கியவர்களை விரட்டியிருக்கிறார்.

    இதனால் நோயாளிகளும், உறவினர்களும் பயந்து ஓடியிருக்கிறார்கள். பின்னர் பாதுகாவலர்கள் சூழ்ந்து அவரை பிடித்து கைகளை பின்னால் கட்டி சிகிச்சைக்கு அழைத்து சென்றுள்ளார்கள். இந்த சம்பவத்தை வீடியோ பதிவு செய்தவர் சமூக வலைதளத்தளங்களில் திசை திருப்பி விட்டிருக்கிறார். இதை பார்த்து உறவினர்கள் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தார்கள்.

    இப்போது நெட்டிசன்கள் பலர் அடப்பாவிகளா? இப்படியெல்லாமா பண்வீங்க? என்று பதிலுக்கு பதிவிட்டு வறுத்து எடுக்கிறாார்கள்.

    ×