search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pregnant wife"

    நடத்தையில் சந்தேகப்பட்டு கர்ப்பிணி மனைவியை கத்தியால் குத்திய இந்திய வம்சாவளி கணவருக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. #Indianoriginman #7yearsjailed #stabbingpregnantwife #stabbingwife
    சிங்கப்பூர்:

    சிங்கப்பூரில் வாழும் இந்திய வம்சாவளி நபரான ஜெயசீலன் சந்திரசேகர்(30) என்பவர் விலைமாதாக முன்னர் தொழில் செய்துவந்த மயூரி(27) என்பவரை விரும்பி கடந்த 2013-ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார்.

    திருமணத்துக்கு பின்னர் கணவருக்கு ஒழுக்கமான மனைவியாக வாழ்ந்துவந்த மயூரி, கடந்த ஆண்டில் தனது முன்னாள் காதலரும், விபச்சார தரகருமான ஒருவருடன் மீண்டும் நட்பை புதுப்பித்து வந்ததாக நம்பிய ஜெயசீலன் சந்திரசேகர், தனது மனைவி வீட்டைவிட்டு வெளியே செல்ல தடை விதித்தார்.

    மேலும், சந்தேக கண்ணோட்டத்துடன் மயூரியை பார்க்க தொடங்கியதால் இருவருக்கும் இடையில் அடிக்கடி சண்டை, சச்சரவு வலுத்து வந்தது. இதற்கிடையில், மயூரி கருத்தரித்தார். அவரது வயிற்றில் வளரும் குழந்தைக்கு தந்தை யார்? என்பது தொடர்பாக மேலும் தகராறு அதிகரித்தது.

    கணவரின் கொடுமையை தாங்க முடியாத மயூரி, வீட்டைவிட்டு வெளியேறினார். முன்னர், தன்னுடன் விபசார தொழிலில் ஈடுபட்டிருந்த தோழிகள் வீட்டில் தஞ்சமடைந்தார்.

    இதனால், ஆத்திரமடைந்த ஜெயசீலன் சந்திரசேகர், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 30-ம் தேதி மயூரியை சரமாரியாக கத்தியால் குத்திக் கொல்ல முயன்றார். வயிறு மற்றும் கழுத்து பகுதியில் பலத்த கத்திக்குத்து காயங்களுடன் கிடந்த மயூரியின் வயிற்றில் வளரும் குழந்தை இந்த தாக்குதலில் காயமடையாமல் தப்பியது.

    இந்த சம்பவம் தொடர்பாக ஜெயசீலன் சந்திரசேகர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் 6 பிரம்படிகளும் தண்டனையாக விதித்து தீர்ப்பாளித்தார். #Indianoriginman #7yearsjailed  #stabbingpregnantwife  #stabbingwife
    உத்தரபிரதேசம் மாநிலம் கன்னாஜ் என்ற இடத்தில் மனைவியின் பிரசவ செலவுக்காக, பெற்ற குழந்தையை, தந்தை விற்பனை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #pregnantwife #Kannauj
    கன்னாஜ்:

    உத்தரபிரதேச மாநிலம் கன்னாஜ் பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த் பஞ்சாரா. சாதாரண கூலித் தொழிலாளி. இவரது மனைவி சுக்தேவி. இவர்களுக்கு 4 வயதில் ரோஷ்னி என்ற மகளும், 1 வயதில் ஜானு என்ற மகனும் உள்ளனர்.

    இந்த நிலையில் சுக்தேவி மீண்டும் கர்ப்பமானாள். 7 மாத கர்ப்பிணியாக இருந்த சுக்தேவிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பல தனியார் ஆஸ்பத்திரிகளில் சென்று சேர்க்க முயன்றார். கட்டணம் அதிகம் கேட்டதால் சேர்க்காமல் கடைசியில் மாவட்ட மருத்துவமனையில் சேர்த்தார்.

    அங்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது சுக்தேவிக்கு ரத்தம் செலுத்த வேண்டும், ரத்தம் செலுத்தினால்தான் உயிர் பிழைப்பாள், வெளியில் ரத்த வங்கியில் போய் வாங்கி வாருங்கள் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

    ரத்த வங்கிக்கு வந்த அரவிந்த் டாக்டர்கள் குறிப்பிட்ட ரத்தத்தை கேட்ட போது அதற்கு கட்டணமாக ஆயிரக்கணக்கில் பணம் கேட்டனர். அந்த அளவுக்கு பணம் இல்லை.



    இதனால் தவித்த அவர் மனைவி உயிரை காப்பாற்ற தனது 4 வயது சிறுமி ரோஷ்னியை விற்க முடிவு செய்தார். அங்குள்ள ஒருவரிடம் விற்று அந்தப் பணத்தின் மூலம் ரத்தம் வாங்கி ஆஸ்பத்திரிக்கு ஓடினார். அதன் பிறகு ரத்தம் செலுத்தப்பட்டு சுக்தேவி உயிர் பிழைத்தார்.

    இதுபற்றி அரவிந்த் கூறுகையில், மனைவி உயிரை காப்பாற்ற எனக்கு வேறு வழி தெரியவில்லை என்றார். தாய் சுக்தேவி கூறும் போது, குழந்தையை விற்க மனம் இல்லை. எங்களுக்கு வேறு வழியில்லை, பல ஆஸ்பத்திரிகளுக்கு சென்றும் பணம் இல்லாமல் சிகிச்சை அளிக்க மறுத்துவிட்டனர் என்றார். #pregnantwife #Kannauj
    ×