search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Public anxiety"

    கூடலூர் பகுதியில் அறிவிக்கப்படாத மின் தடையால் வியாபாரிகள், பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

    கூடலூர்:

    கூடலூர் பகுதியில் அறிவிக்கப்படாத மின் தடையால் வியாபாரிகள், பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

    துணை மின் நிலையங்களில் மாதத்திற்கு ஒரு நாள் மின் வினியோகம் நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது. பழுதான வயர்களை சரி செய்வது, மரங்கள், விளம்பர பலகைகள் போன்றவை மின் வயர்கள் செல்ல இடையூறாக இருந்தால் அவற்றை அகற்றுவது மிக முக்கியமான பணியாகும்.

    மேலும் இந்த பராமரிப்பு பணியின் போது அனைத்து மின் கம்பங்கள் மற்றும் வயர்கள் சோதனை செய்யப்படுகிறது. தேனி மாவட்டம் கூடலூர் பகுதியில் கடந்த சில நாட்களாக அறிவிக்கப்படாத மின் வெட்டு நிலவி வருகிறது.

    நேற்று முன் தினம் இரவு முழுவதும் மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் கடும் தவிப்புக்கு உள்ளாகினர். கொசுக்கடியில் இரவு முழுவதும் தூக்கமின்றி தவித்தனர். மேலும் பகல் பொழுதிலும் அவ்வப்போது மின்சாரம் வருவதும் தடை படுவதும் என இருந்ததால் வெப்பத்தின் தாக்கம் காரணமாக வீட்டுக்குள் இருக்க முடியவில்லை.

    நேற்றும் இந்த நிலை தொடர்ந்தது. இதனால் சிறுவர்கள், முதியவர்கள் சிரமத்துக்கு உள்ளானார்கள். கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் மின் விசிறி ஓடிய போதும் வெப்பம் தாங்காமல் பொதுமக்கள் அவதியடைந்து வரும் நிலையில் மின் தடை மேலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

    சிறு வியாபாரிகள், கடை உரிமையாளர்கள் மின் தடையால் பாதிக்கப்படுகின்றனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், கடந்த 2 வருடங்களாக தடையற்ற மின்சாரம் வினியோகம் இருந்தது. ஆனால் தற்போது எந்தவித அறிவிப்பும் இன்றி திடீரென மின் வினியோகம் நிறுத்தப்படுவதால் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறது.

    குறிப்பாக அரசு உதவித் தொகைக்கு சான்றிதழ்களை ஜெராக்ஸ் எடுக்க செல்லும் போது மின் வினியோகம தடைபடுவதால் அந்த பணிகள் பாதிக்கப்படுகிறது.

    மேலும் பொதுமக்களின் நேரம் விரயமாகிறது. விடுமுறை எடுத்து இந்த பணிகளை மேற்கொள்பவர்கள் இதனால் கடுமையாக சிரமம் அடைந்து வருகிறார்கள். ஆனால் மின் வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இதைப்பற்றி கவலை படாமல் அலட்சியமாக உள்ளனர். அவர்களிடம் கேட்டால் முறையான பதில் அளிப்பது இல்லை. எனவே உயர் அதிகாரிகள் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றனர்.

    ×