search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "puducherry youth congress election"

    புதுவை மாநில இளைஞர் காங்கிரசுக்கு புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஆகஸ்டு 11, 12 ஆகிய தேதிகளில் நடக்கிறது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. #congress

    புதுச்சேரி:

    புதுவை மாநில இளைஞர் காங்கிரசுக்கு புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஆகஸ்டு 11, 12 ஆகிய தேதிகளில் நடக்கிறது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. இதற்காக காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் தனியாக அறை ஒதுக்கப்பட்டிருந்தது. தேர்தல் அதிகாரியாக ரித்திஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இன்று முதல் வருகிற ஆகஸ்டு 2-ந்தேதி வரை வேட்புமனுவை தாக்கல் செய்யலாம். காலை 10 மணி முதல் 5 மணி வரை வேட்புமனுக்கள் பெறப்படுகிறது.

    இளைஞர் காங்கிரசின் தலைவர், பொதுச் செயலாளர் ஆகிய பதவிகளுக்கு வேட்பு மனுவோடு ரூ.7 ஆயிரத்து 500 வரைவோலையும் இணைக்கப்பட வேண்டும். பெண்களுக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும் ரூ.4 ஆயிரம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    தொகுதியளவில் தலைவர், துணைத்தலைவர், 13 செயலாளர்கள் என தொகுதிக்கு 15 பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர். இவர்களுக்கு ரூ.ஆயிரத்து 500 வரைவோலை இணைக்க வேண்டும். பெண்கள், தாழ்த்தப்பட்டோர் ரூ.ஆயிரம் வரைவோலை இணைக்க வேண்டும்.

    மாநில தலைவர் பதவிக்கு அகில இந்திய தலைமை நேர்முக தேர்வு நடத்தினர். இதில் 13 பேர் பங்கேற்றனர். அவர்கள் அனைவரும் போட்டியிட அகில இந்திய தலைமை அனுமதி வழங்கியுள்ளது. இதில் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெறுபவர் தலைவராகவும், அடுத்தடுத்த 4 பேர் துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்படுவர். பொதுச் செயலாளர் பதவிக்கு தனியாக வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும்.

    தலைவர் பதவிக்கு போட்டியிட கட்சித் தலைமை அனுமதி அளித்துள்ளவர்களின் பட்டியல் வருமாறு: 1.அசோக்ராஜா, 2.வசந்தராஜா, 3.லட்சுமி காந்தன், 4.ரமேஷ், 5.வேல் முருகன், 6.ஜெயராமன், 7.ரகுபதி, 8.ஜெய்னா, 9.கார்த்திக், 10.ஜெயதீபன், 11.பிரியா, 12.ஆனந்தபாபு, 13.காளிமுத்து. #congress

    புதுவை மாநில இளைஞர் காங்கிரசுக்கு புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் 11, 12-ந்தேதி களில் நடக்கிறது. #congress

    புதுச்சேரி:

    புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவராக இளையராஜா தலைமையிலான நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிந்து 3 ஆண்டாகிவிட்டது. இதனால் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய கட்சித்தலைமை தேர்தலை அறிவித்துள்ளது.

    தேர்தலுக்கு முன்னதாக உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடந்தது. இதில் மாநிலம் முழுவதும் 30 ஆயிரம் தீவிர உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஒரு தீவிர உறுப்பினர் தனக்கு கீழ் 4 உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். அதனடிப்படையில் தற்போது 1½ லட்சம் பேர் இளைஞர் காங்கிரசில் உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளனர். சேர்க்கப்பட்ட உறுப்பினர்களின் மனு பரிசீலனை நடந்து வருகிறது.

    இறுதி பரிசீலனை வருகிற 30-ந்தேதி தொடங்கி 1-ந்தேதி முடிவடைகிறது. இதையடுத்து வேட்பு மனுதாக்கல் 30-ந்தேதி முதல் ஆகஸ்டு 2-ந்தேதி வரை நடக்கிறது. வேட்பு மனு பரிசீலனை ஆகஸ்டு 3-ந்தேதி நடக்கிறது. சின்னம் ஒதுக்கீடு 4-ந்தேதி நடக்கிறது.

    இதைத்தொடர்ந்து தேர்தல் ஆகஸ்டு 11 மற்றும் 12-ந்தேதிகளில் நடக்கிறது. 14-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. முன்னதாக தலைவர் பதவிக்கு போட்டியிட விருப்பம் உள்ளவர்களை கண்டறிந்து அவர்களில் 16 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    இவர்களுக்கு நேர்முகத் தேர்வு டெல்லியில் இன்று நடக்கிறது. இதில் தகுதியுள்ளவர்களை தேர்வு செய்து அவர்கள் மட்டுமே தலைவர் பதவிக்கு போட்டியிட அனுமதிக்கப்படுகின்றனர்.  #congress

    ×