search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Samsung mobile factory"

    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த செப்டம்பர் 9ம் தேதி முதல் சிஐடியு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.
    • சிஐடியு தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை வாபஸ் செய்தனர்.

    சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வரும் சாம்சங் நிறுவனத்தில் ஊதிய உயர்வு, புதிய தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த செப்டம்பர் 9ம் தேதி முதல் சிஐடியு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.

    பலதரப்பட்ட பேச்சுவார்த்தையை தொடர்ந்து, சிஐடியு தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை வாபஸ் செய்தனர். சிஐடியுவின் முடிவிற்கு சாம்சங் இந்தியா வரவேற்றது.

    இதற்கிடையே, சாம்சங் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள், தங்களது சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தை பதிவு செய்ய கோரி தொழிற்சங்கங்கள் பதிவாளருக்கும், தொழிலாளர் நலத்துறை துணை ஆணையருக்கும் விண்ணப்பம் செய்தனர். ஆனால், இந்த கோரிக்கையை ஏற்கப்படவில்லை.

    இதையடுத்து, தங்களது சங்கத்தை பதிவு செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு கடந்த செப்டம்பர் மாதம் 30-ந்தேதி நீதிபதி மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது, இந்த வழக்கிற்கு தமிழ்நாடு அரசும், தொழிற்சங்கங்கள் பதிவாளர், தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர் ஆகியோர் பதிலளிக்கும்படி உத்தரவிட்டு இருந்தார்.

    இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவில், தங்கள் விண்ணப்பத்தை பரிசீலித்து தொழிற்சங்கத்தை பதிவு செய்து சான்று வழங்கும்படி சிஐடியு மனு தாக்கல் செய்திருந்தது.

    இந்நிலையில், சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தை பதிவு செய்யக்கோரும் மனு மீது 6 வாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என்று பதிவுத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    நொய்டாவில் உலகின் மிகப்பெரிய செல்போன் தொழிற்சாலையை இன்று திறந்து வைத்த பிரதமர் மோடி கொரியா தயாரிப்பு இல்லாத நடுத்தர இந்திய வீடுகள் கிடையாது என குறிப்பிட்டார்.
    புதுடெல்லி:

    புதுடெல்லி அருகே உள்ள தொழில் நகரமான நொய்டாவில் தென்கொரியா நாட்டு பிரபல மின்னணு பொருட்கள் உற்பத்தி நிறுவனமான சாம்சங் 35 ஏக்கர் பரப்பளவில் அமைத்துள்ள உலகின் மிகப்பெரிய செல்போன் தொழிற்சாலையை இன்று மாலை தென்கொரியா அதிபர் மூன் ஜே இங் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இன்று திறந்து வைத்தனர்.

    இந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி, தற்கால டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் மனிதர்களின் வாழ்க்கை முறைகள் மிகவும் சுலபமாகி விட்டதாக குறிப்பிட்டார்.


    இந்தியாவில் சுமார் 40 கோடி மக்கள் ஸ்மார்ட் போன்களையும், 32 கோடி பேர் இண்டர்நெட் வசதியையும் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவில் கடந்த 4 ஆண்டுகளில் 120 செல்போன் தொழிற்சாலைகள் உருவாகியுள்ளன.

    இவற்றில் 50 சதவீதம் தொழிற்சாலை நொய்டா நகரில் அமைந்துள்ளது. இதன் மூலம் சுமார் 4 லட்சம் மக்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

    இந்திய ஸ்மார்ட் போன் சந்தையில் கொரியா நிறுவனமான சாம்சங் தனி இடத்தை பிடித்துள்ளது என்பதில் சந்தேகமே இல்லை.

    நான் சில தொழிலதிபர்களை சந்திக்கும்போது நடுத்தர இந்திய மக்களின் வீடுகளில் கொரியா நாட்டு பொருட்கள் இல்லாத வீடுகளே இருக்க முடியாது என குறிப்பிட்டுள்ளேன் எனவும் பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார். #NoidaSamsungmobilefactory #MoonJae-inModi
    ×