search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிரண்பேடி"

    • கவர்னர் தேநீர் விருந்தை தொடர்ந்து நாங்கள் புறக்கணிக்கவில்லை.
    • என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை வைத்துக்கொண்டு அவரால் மாநில அந்தஸ்து கண்டிப்பாக பெற முடியாது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதன் அளித்த தேநீர் விருந்தில் பங்கேற்ற முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    கவர்னர் தேநீர் விருந்தை தொடர்ந்து நாங்கள் புறக்கணிக்கவில்லை. முன்பு இருந்த கவர்னர்கள் கிரண்பேடி, தமிழிசை ஆகியோர் அரசியல் செய்தனர். அதற்குத்தான் நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். அதிகாரியாக இருந்த கைலாஷ்நாதன், பா.ஜனதா முதலமைச்சர்களிடம் வேலை செய்திருந்தாலும், தற்போது அவர் கவர்னர்.

    அவர் நடுநிலையோடு செயல்படுவார் என நம்புகிறோம். அப்படி செயல்பட்டால் அவருடன் சேர்ந்து செயல்படுவோம். காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆளும் மாநிலங்களில் கவர்னர்கள் அரசியல் செய்து அந்த மாநிலங்களின் வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்கின்றனர்.

    புதுவை கவர்னர் அரசியல் செய்தால் அதையும் எதிர்ப்போம்.

    புதுவைக்கு ரூ.10 ஆயிரம் கோடி வருமானம் வருகிறது. மத்திய அரசிடம் வாங்குவது ரூ.2 ஆயிரத்து 300 கோடிதான். புதுவைக்கு ரூ.5 ஆயிரம் கோடி வரை கிடைக்க வேண்டும்.

    எனவே மாநில அந்தஸ்து பெற வேண்டியது அவசியம். புதுவைக்கு மாநில அந்தஸ்து கொடுத்தால் டெல்லிக்கும் கொடுக்க வேண்டும். அரவிந்த் கெஜ்ரிவால் இதை கேட்பார் என்பதால் மத்திய அரசு புதுவையை புறக்கணித்து வருகிறது.

    முதலமைச்சராக ரங்கசாமி இருக்கும் வரை அவரால் மாநில அந்தஸ்து வாங்க முடியாது. அவர் புதுவை எல்லையை தாண்டி டெல்லி செல்லாதவர். நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காதவர். முதலமைச்சர் மாநாட்டில் பங்கேற்காதவர். அவர் பா.ஜனதாவில் சேர்ந்தால் மட்டுமே புதுவைக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும்.

    என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை வைத்துக்கொண்டு அவரால் மாநில அந்தஸ்து கண்டிப்பாக பெற முடியாது. பா.ஜனதா தனியாக ஆட்சி அமைக்கும் சூழல் வந்தால் அப்போது வழங்குவார்கள். மத்திய மோடி அரசு புதுவையில் அரசியல் விளையாட்டு செய்கிறது. ரங்கசாமியை ஏமாற்றுகின்றனர். மாநில அந்தஸ்து பெற பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்த ரங்கசாமி, ஏன் எந்த கூட்டணியை விட்டு வெளியேறவில்லை?

    அவருக்கு முதலமைச்சர் நாற்காலி வேண்டும். அதற்காக அவர் கட்சியை, எம்.எல்.ஏ.க்களை தியாகம் செய்வார். மாநில அந்தஸ்து பெற ராகுல்காந்தி, எதிர்கட்சி எம்.பிக்கள், பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பார்கள்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • புதுச்சேரி பா.ஜ.க.வினர் டெல்லியில் முகாமிட்டு புகார் கொடுத்த வண்ணம் இருந்தனர்.
    • தெலங்கானா கவர்னராக இருந்த தமிழிசை கூடுதலாக புதுவையின் கவர்னராக 16-ந் தேதி பொறுப்பேற்றார்.

    2016-ம் ஆண்டு மே 29-ந் தேதி புதுச்சேரி மாநில கவர்னராக முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியாக கிரண்பேடி நியமிக்கப்பட்டார். ஹெல்மெட் கட்டாயம், 2 சக்கர வானங்களில் 2 பேர் தான் செல்ல வேண்டும். சிறுவர்களை ஏற்றி சென்றாலும் இறக்கி விட வேண்டும். மக்கள் நல திட்டங்கள் முடக்கம் என்பது உள்பட பல்வேறு புகார்கள் மத்திய அரசுக்கு சென்றது.

    குறிப்பாக புதுச்சேரி பா.ஜ.க.வினர் டெல்லியில் முகாமிட்டு புகார் கொடுத்த வண்ணம் இருந்தனர். இதனால் இவரை மத்திய அரசு, கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி 14-ந் தேதி நீக்கியது. தொடர்ந்து தெலங்கானா கவர்னராக இருந்த தமிழிசை கூடுதலாக புதுவையின் கவர்னராக 16-ந் தேதி பொறுப்பேற்றார்.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு வசதியாக கவர்னர் பதவியை கடந்த மார்ச் 18-ந் தேதி தமிழிசை சவுந்தரராஜன் ராஜினாமா செய்தார். மார்ச் 23-ந் தேதி புதுச்சேரி மாநிலத்தின் கவர்னராக சி.பி.ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்றார். கிரண்பேடிக்கு பிறகு கிட்டத்திட்ட 3 ஆண்டுகள் 5 மாதத்துக்கு பிறகு தற்போது 'தான் முழுநேர கவர்னர் புதுச்சேரிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

    • பிரதமராக இருந்த மார்க் ரூட் தனது பதவிக்காலம் முடிந்தது.
    • வீடியோவானது சமூகவலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

    14 ஆண்டுகளாக நெதர்லாந்து பிரதமராக இருந்த மார்க் ரூட் தனது பதவிக்காலம் முடிந்ததும், புதிய பிரதமர் டிக் ஸ்கூஃப் இடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு சைக்கிளில் புறப்பட்டது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

    இது குறித்து கிரண்பேடி தனது எக்ஸ் தளபக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது,

    14 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பின், நெதர்லாந்து முன்னாள் பிரதமர் மார்க் ரூட்டே தனது வாரிசான டிக் ஸ்கூஃப்க்கு அதிகாரபூர்வமாக அதிகாரம் வழங்கும் விழாவை முடித்துக் கொண்டு பிரதமர் அலுவலகத்தை விட்டு வெளியேறினார் என்று கூறி மார்க் ரூட் பதிவியேற்பு விழாவில் கலந்து கொண்டு சைக்கிலில் மகிழ்ச்சியுடன் வெளியேறிய வீடியோவை பதிவு செய்துள்ளார்.

    இந்த வீடியோவானது சமூகவலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

    • 1989-ம் ஆண்டு கவிதா சௌத்ரி எழுதி இயக்கி, நடித்த ‘உடான்' எனும் தூர்தர்ஷன் தொலைக்காட்சித் தொடர் பெரும் வரவேற்பை பெற்றது.
    • 1989-ம் ஆண்டு கவிதா சௌத்ரி எழுதி இயக்கி, நடித்த ‘உடான்' எனும் தூர்தர்ஷன் தொலைக்காட்சித் தொடர் பெரும் வரவேற்பை பெற்றது.

    பிரபல இந்தி நடிகை கவிதா சௌத்ரி மாரடைப்பால் உயிரிழந்துள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக புற்றுநோயுடன் கவிதா சௌத்ரி போராடி வந்த நிலையில், தற்போது தன் 67ஆவது வயதில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

    1989-ம் ஆண்டு கவிதா சௌத்ரி எழுதி இயக்கி, நடித்த 'உடான்' எனும் தூர்தர்ஷன் தொலைக்காட்சித் தொடர் பெரும் வரவேற்பை பெற்றது. கிரண்பேடிக்கு பிறகு இரண்டாவது பெண் ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வான அவரது கஞ்சன் சௌத்ரியின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு இத்தொடர் எடுக்கப்பட்டது.

    இந்த சீரியலில், கல்யாண் சிங் எனும் கதாபாத்திரத்தில் போலீசாக நடித்த கவிதா, அக்கதாபாத்திரமாக வாழ்ந்து ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தார். மேலும் 90களின் பிரபலமான 'சர்ஃப் எக்ஸல்' விளம்பரங்களில் 'லலிதா ஜி' எனும் கதாபாத்திரத்திலும் தோன்றி, அன்றைய தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார்.

    இந்நிலையில், கவிதா நேற்று பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸில் உள்ள பார்வதி தேவி மருத்துவமனையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இணையத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    யூனியன் பிரதேசங்களில் அதிகாரம் யாருக்கு என்ற வழக்கில் சுப்ரீம் கோர்ட் நேற்று வழங்கிய தீர்ப்பு டெல்லிக்கு பொருந்தாது என துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார். #KiranBedi
    புதுச்சேரி:

    நாட்டில் 7 யூனியன் பிரதேசங்கள் இருந்தாலும், புதுவை-டெல்லி ஆகிய மாநிலங்களில் மட்டுமே சட்டசபை செயல்படுகிறது. ஆனால், இவை யூனியன் பிரதேசம் என்பதால் கவர்னருக்குத்தான் அதிகாரம் என்று கூறி புதுவை கவர்னர் கிரண்பேடி, டெல்லி கவர்னர் அனில் பைஜால் ஆகியோர் செயல்பட்டு வந்தனர்.

    இதை எதிர்த்து டெல்லியில் ஆம் ஆத்மி அரசு தொடர்ந்த வழக்கில் கவர்னருக்கு அதிகாரம் இல்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் அதிகாரம் இருக்கிறது என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறி உள்ளது.

    இந்த தீர்ப்பு 100-க்கு 110 சதவீதம் புதுவைக்கும் பொருந்தும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார். மேலும் கவர்னர் கிரண்பேடி இனிமேலும் இதை மீறும் வகையில் செயல்பட்டால் அவர் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொட ரப்படும் என்றும் கூறினார்.

    இது சம்பந்தமாக கவர்னர் கிரண்பேடி நேரடியாக இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில் நேற்று கூறப்பட்ட தீர்ப்பில், புதுவை உள்ளிட்ட மற்ற யூனியன் பிரதேசங்களுக்கு டெல்லி தீர்ப்பு பொருந்தாது என்று சுப்ரீம் கோர்ட்டே கூறி இருக்கிறது. 

    அதாவது டெல்லி மாநிலம் அரசியல் சாசன சட்டம் 239 ஏ.ஏ. பிரிவின் கீழ் செயல்படுகிறது. புதுவை உள்ளிட்ட மற்ற யூனியன் பிரதேசங்கள் 239 ஏ. பிரிவின் கீழ் செயல்படுகிறது. எனவே, இப்போதைய தீர்ப்பு 239 ஏ.ஏ. பிரிவின் அடிப்படையில்  கூறப்பட்டுள்ளது. இதனால் புதுவை உள்ளிட்ட மற்ற யூனியன் பிரதேசங்களுக்கு பொருந்தாது என்று அந்த தீர்ப்பில் நீதிபதிகள் கூறி இருந்தனர்.

    இந்நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களை இன்று சந்தித்த கிரண்பேடி, சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை வாசித்து காட்டி, டெல்லியின் தீர்ப்பு புதுச்சேரிக்கு பொருந்தாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.
    மத்திய அரசின் நம்பிக்கையை இழந்ததால் கிரண்பேடி கவர்னர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று முதல்வர் நாராணயசாமி கூறியுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவை கவர்னருக்கு என தனியாக அதிகாரம் கிடையாது. அவர் தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாது. அமைச்சரவையின் பரிந்துரைகளையே அவர் ஏற்க வேண்டும் என நான் பலமுறை கூறியுள்ளேன்.

    இதுதொடர்பாக கவர்னருக்கு கடிதமும் அனுப்பி உள்ளேன். இருப்பினும் கவர்னர் கிரண்பேடி தொடர்ந்து அதிகாரிகளை அழைத்து பேசுவது, அவர்களுக்கு நேரிடையாக உத்தரவிடுவதும், தன்னுடைய முடிவை செயல்படுத்தும்படி வலியுறுத்தியும் வருகிறார்.

    வாரிய தலைவர்களை மாநில அரசு நியமனம் செய்ய பரிந்துரை செய்த போது அதற்கு தடை ஏற்படுத்தினார். அப்போது மத்திய உள்துறை அமைச்சகம் தலையிட்டு வாரிய தலைவர்களை நியமிக்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என கூறியது. இதையடுத்து வாரிய தலைவர்களுக்கு சில நிபந்தனைகளை கவர்னர் விதித்தார். நிபந்தனைகளை விதிக்க கவர்னருக்கு அதிகாரம் கிடையாது. இது சம்பந்தமாகவும் மத்திய உள்துறைக்கு கடிதம் அனுப்பினேன்.

    தற்போது மத்திய உள்துறை வாரிய தலைவர்கள் தங்களுடைய வாரிய விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என்றும் வாரிய தலைவர்களை நியமிக்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்றும் விளக்கமளித்துள்ளது.

    ஏற்கனவே விவசாயிகள் கடன் ரத்து கோப்புக்கு அனுமதி அளிக்காமல் கவர்னர் அலைகழித்தார். இது தொடர்பாகவும் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பினோம். இதனையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் விவசாயிகள் கடனை ரத்து செய்வதற்கு அனுமதி அளித்துள்ளது. ஆக இதுவரை 3 முறை கவர்னரின் முடிவுக்கு எதிராக மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இதன் பிறகும் கவர்னராக கிரண்பேடி பதவியில் தொடர்வதா? என்பது குறித்து கிரண்பேடிதான் முடிவு செய்ய வேண்டும். மத்திய அரசின் நம்பிக்கையை இழந்த பிறகு கவர்னராக கிரண்பேடி தொடர்வதா?.

    சமீபத்தில் கூட டெல்லி கவர்னர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதேபோல் கிரண்பேடி தார்மீக பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×