search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திட்டை குரு பகவான்"

    • இங்கு வியாழ பகவான் தனி சன்னிதியில் சிறப்புற காட்சி தருகிறார்.
    • மற்ற சிவாலயங்களில் குருதோஷம் நீங்க தட்சிணா மூர்த்தியே குருவாக வணங்கப்படுகிறார்.

    குடந்தையிலிருந்து தஞ்சை செல்லும் சாலையில் 20 கி.மீ. தூரத்தில் உள்ளது.

    இங்கு வியாழ பகவான் தனி சன்னிதியில் சிறப்புற காட்சி தருகிறார்.

    மற்ற சிவாலயங்களில் குருதோஷம் நீங்க தட்சிணா மூர்த்தியே குருவாக வணங்கப்படுகிறார்.

    திட்டையில் மட்டும் நவக்கிரக பிரகஸ்பதி தனியான அந்தஸ்தும் செல்வாக்கும் பெற்று தனி சன்னிதியில் விளங்குகிறார்.

    இவருக்கு இந்தத் தலத்தில் ஆண்டுதோறும் குரு பெயர்ச்சி விழாவும், அதனையொட்டி லட்சார்ச்சனையும் குருபரிகார ஹோமங்களும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

    இங்குள்ள குரு பகவானை வேண்டினால் கல்விச் செல்வம், பொருட்செல்வம், குழந்தைச் செல்வம் உள்பட யோகம் தரும் அனைத்து செல்வங்களும் எளிதில் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    • ஒருவரின் வாழ்வில், குருவின் கடாட்சம் இருந்துவிட்டால், செய்யும் தொழில் சிறக்கும்.
    • பதவி உயர்வு இருக்கும். நல்ல குழந்தைகள் கிடைப்பார்கள்.

    குருவின் பார்வை இருந்தால்தான் எல்லா நல்ல விஷயங்களும் நம்மைத் தேடி வரும் என்பது ஐதீகம்.

    உமையவளுக்கே குருவின் பார்வை கிடைத்ததும்தான் திருமணம் நடந்தேறியது என்கிறது புராணம்.

    நவக்கிரகங்களில் சுபகிரகம் வியாழ பகவான்.

    அந்த வியாழ பகவான் தான், தேவர்களின் குரு.

    அவரை பிரகஸ்பதி என்பார்கள். இவர்தான் குரு பகவான். குருப்பெயர்ச்சி என்பது இவருக்குத்தான்.

    இவரை வைத்துத்தான் குருப்பெயர்ச்சி.

    ஒருவரின் வாழ்வில், குருவின் கடாட்சம் இருந்துவிட்டால், செய்யும் தொழில் சிறக்கும்.

    பதவி உயர்வு இருக்கும். நல்ல குழந்தைகள் கிடைப்பார்கள். குருவருளுடன் இறையருளும் கிடைக்கப்பெறுவார்கள்.

    நவக்கிரகத்தில் உள்ள வியாழ பகவான், தேவர்களின் குரு! குருவுக்கெல்லாம் குரு! ராஜகுரு

    இந்த ராஜகுருவுக்கு அதிதேவதையாகத் திகழ்பவர் தட்சிணாமூர்த்தி.

    அதனால்தான் குருப்பெயர்ச்சி முதலான தருணங்களில், தட்சிணாமூர்த்திக்கு விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன.

    ராஜ குரு என்று போற்றப்படும் வியாழ பகவான், தனிச்சந்நிதியில் இருந்து அருள்பாலிக்கும் திருத்தலம் தென்குடித்திட்டை.

    வேதங்கள் நான்கும் சிவனாரை வணங்கி வழிபட்ட திருத்தலம் என்று திட்டை ஸ்தல புராணம் தெரிவிக்கிறது.

    திருஞான சம்பந்தர், இந்தத் தலத்து இறைவனை, வசிஷ்டேஸ்வரரை மனமுருகிப் பாடியுள்ளார்.

    தலத்தின் பெருமையைச் சிலாகித்துப் போற்றியுள்ளார்.

    ×