search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீட் விவகாரம்"

    • இருஅவைகளிலும் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார்.
    • எதிர்க்கட்சகள் தங்களது பிரச்சினை குறித்து பேசலாம்.

    இந்தியாவில் மூன்றாவது முறையாக பிரதமர் பதவியேற்றுள்ள நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முதல் பாராளுமன்ற கூட்டத் தொடர் கடந்த மாதம் 27 ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடரின் முதல் நாளில் இருஅவைகளிலும் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார்.

    இதைத் தொடர்ந்து ஜனாதபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெற இருந்தது. ஆனால் நீட் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டது. எனினும், ஜனாதிபதி உரை மீதான விவாதத்தின் போது எதிர்க்கட்சகள் தங்களது பிரச்சினை குறித்து பேசலாம் என்று தெரிவித்தார்.

    இதை ஏற்க மறுத்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், ஜனாதிபதி உரை மீதான விவாதம் இரு அவைகளிலும் தொடங்க இருந்தது.

    இதனிடையே பாராளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசினார்.

    அப்போது, "நாடாளுமன்றத்திற்கு நீட் முறைகேடு விவகாரம் முக்கியத்துவம் வாய்ந்தது என்ற செய்தியை மாணவர்களுக்கு அனுப்ப விரும்புகிறோம். எனவே இந்த செய்தியை அனுப்ப நாடாளுமன்றம் இதனை விவாதிக்க வேண்டும், என்று தெரிவித்தார்.

    இதற்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் எழுந்து பதில் அளிக்கையில், "மக்களவை கூட்டம் சட்டத்துக்கும் விதி முறைகளுக்கும் உட்பட்டே செயல்படுகிறது" என்றார். எனினும் ராகுல் அந்த பதிலால் திருப்தி அடைய வில்லை. மீண்டும் நீட் விவாதம் குறித்து கேள்வி எழுப்பினார்.

    நீட் விவகாரம் தொடர்பாக நாள் முழுக்க இந்த சபையில் நாம் விவாதிக்க வேண்டும் என்று ராகுல்காந்தி கோரிக்கை விடுத்தார். அதற்கு அரசு தரப்பில் நீட் குறித்து உரிய முறையில் விவாதிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் நாள் முழுக்க விவாதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை சபாநாயகர் ஏற்க வில்லை.

    இதையடுத்து இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக பாராளுமன்ற மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். ஜனாதிபதி உரை மீதான விவாதத்துக்கு பாராளுமன்றத்தில் நாளையும் (செவ்வாய்க்கிழமை), மாநிலங்களவையில் நாளை மறுநாளும் (புதன்கிழமை) பிரதமா் மோடி பதில் அளிப்பாா் என எதிர்பாா்க்கப்படுகிறது.

    • நீட் குறித்து விவாதம் நடத்த கவன ஈர்ப்பு மசோதா தாக்கல்.
    • முறையாக விவாதிக்க பிரதமர் மோடியிடம் கேட்டுக் கொள்கிறேன்.

    இந்தியாவில் மருத்துவப்படிப்பில் சேர்வதற்காக நடத்தப்படும் நீட் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதாக பெரும் சர்ச்சை கிளம்பியது. இதையடுத்து நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமையின் தலைவர் நீக்கப்பட்டு, புதிய தலைவர் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்து, மறுதேர்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

    இது தொடர்பாக நாடு முழுக்க போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே 18-வது பாராளுமன்ற கூட்டத்தில் நீட் தேர்வு குறித்து விவாதம் நடத்த எதிர்கட்சிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் எம்.பி. மாணிக்கம் தாகூர் பாராளுமன்றத்தில் நீட் குறித்து விவாதம் நடத்த கவன ஈர்ப்பு மசோதாவை தாக்கல் செய்துள்ளர்.

    அந்த வகையில், மக்களவைக்கு செல்லும் போது பேசிய பாராளுமன்ற எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி, "எதிர்கட்சிகளை சேர்ந்த அனைத்து கட்சி தலைவர்களும் நேற்று கூட்டம் நடத்தினோம். அந்த கூட்டத்தில் நீட் விவகாரம் பற்றி ஆலோசனை நடத்தினோம். பாராளுமன்றத்தில் நீட் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் நாட்டின் இளைஞர்கள் தொடர்பான ஒன்று என்பதால் இதனை முறையாக விவாதிக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் கேட்டுக் கொள்கிறேன்."

    "இளைஞர்கள் சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால் நீங்களும் இதில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்திய அரசாங்கமும், எதிர்கட்சிகளும் மாணவர்கள் குறித்த விவகாரத்தை பற்றி ஒன்றாக பேசுகிறார்கள் என்ற தகவல் பாராளுமன்றத்தில் இருந்து செல்ல வேண்டும்," என்று தெரிவித்தார்.

    • தேர்வை ரத்து செய்து மத்திய கல்வி அமைச்சகம் நடவடிக்கை எடுத்தது.
    • வினாத்தாளை கசிய விட்டால் குறைந்த பட்சம் 3 ஆண்டு சிறை தண்டனையுடன் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படலாம்.

    புதுடெல்லி:

    நாடு முழுவதும் நீட் தேர்வு கடந்த மே மாதம் 5-ந்தேதி நடத்தப்பட்டது. 24 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதினார்கள். ஜூன் 4-ந்தேதி தேர்வு முடிவுகள் வெளியானது.

    இதற்கிடையே நீட் தேர்வில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்தது தெரிய வந்தது. இதுபெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

    பீகார், ராஜஸ்தானில் வினாத்தாள் கசிவு, எப்போதும் இல்லாத வகையில் நாடு முழுவதும் 67 மாணவர்கள் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தது, அரியானாவில் ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய 6 பேர் முதலிடம் பெற்றது ஆகிய சம்பவங்கள் சர்ச்சையை ஏற்படுத்தின.

    இதேபோல சமீபத்தில் பல்வேறு நகரங்களில் நெட் தேர்வு நடத்தப்பட்டது. அந்த தேர்வின் வினாத்தாள் கசிந்து முறைகேடு நடைபெற்றதாக தெரிவித்து, தேர்வை ரத்து செய்து மத்திய கல்வி அமைச்சகம் நடவடிக்கை எடுத்தது.

    இந்த நிலையில் மத்திய அரசு தேர்வுகளில் முறைகேடுகளில் ஈடுபட்டால் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ரூ.1 கோடி அபராதமும் விதிக்கும் புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

    மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.), பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி.), ரெயில்வே தேசிய தேர்வுகள் முகமை உள்ளிட்டவை நடத்தும் தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்க அரசுத் தேர்வுகள் (முறைகேடுகள் தடுப்பு) மசோதா 2024 வழி வகுக்கிறது. இந்த மசோதாவின் படி அந்த தேர்வுகளில் முறைகேடுகளில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ.1 கோடி அபராதமும் விதிக்கப்படும்.

    கடந்த பிப்ரவரியில் இந்த மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து அந்த மசோதா சட்டமானது. தற்போது அந்த சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.

    இதற்கான அறிவிக்கையை மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் நேற்று இரவு பிறப்பித்தது.

    இந்த சட்டத்தின்படி எந்த ஒரு நபரும் வினாத்தாளை கசிய விட்டால் குறைந்த பட்சம் 3 ஆண்டு சிறை தண்டனையுடன் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படலாம். இது 5 ஆண்டுகளாக நீடிக்கப்படலாம்.

    குற்றத்தை பற்றி அறிந்து இருந்தும், புகார் அளிக்காத தேர்வு சேவை வல்லுனர்களுக்கு ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்கப்படும்.

    தேசிய தேர்வு முகமையை சேர்ந்த மூத்த அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டால் அதிகபட்சம் 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்படும். ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்கப்படும். இந்த சட்டத்தின் கீழ் முறை கேட்டில் ஈடுபடுபவர்கள் ஜாமீனில் வெளியே வர முடியாது.

    • நுழைவு தேர்வை அமெரிக்க நிறுவனம் ஏன் நடத்த வேண்டும்.
    • மூக்குத்தியில் பிட் வைக்க முடியும் என்று சொல்வது நீங்க தான்.

    இயக்குநர் அமீர் நடிப்பில் உருவாகி இருக்கும் "உயிர் தமிழுக்கு" திரைப்படம் தொடர்பான நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், நீட் தேர்வு குறித்து காட்டமான கருத்து தெரிவித்தார்.

    இது தொடர்பாக பேசிய அவர், "நீட் தேர்வு போலி மருத்துவர்களை தான் உருவாக்குகிறது. நீட் தேர்வில் முறைகேடு செய்து சமீபத்தில் கூட 50-க்கும் மேற்பட்ட வட மாநிலத்தவர் சிக்கினர். அப்போ நீங்கள் போலி மருத்துவர்களை உருவாக்குகின்றீர்களா? தரமான மருத்துவர்களை உருவாக்குகின்றீர்களா? இந்தியாவில் நடத்தப்படும் மருத்துவ நுழைவு தேர்வை அமெரிக்க நிறுவனம் ஏன் நடத்த வேண்டும்,, இந்தியாவில் நிறுவனங்களே இல்லையா?"

    "வடமாநிலத்தில் எந்த பெண்ணும் தோடு, மூக்குத்தியை கழற்ற வைக்கப்படவில்லை. என் மாநிலத்தில் மட்டுமே தோடு, மூக்குத்தி என எல்லாவற்றையும் கழற்ற வைக்கின்றீர்கள். மூக்குத்தியில் பிட் வைக்க முடியும் என்று சொல்லும் நீங்கள் தான் இ.வி.எம். இயந்திரத்தை எதுவும் செய்ய முடியாது என சொல்கின்றீர்கள்," என்று தெரிவித்தார். 

    ×