search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Stamp Engraver"

    சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் முத்திரைக் கொல்லர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
    சென்னை:

    சென்னை கூடுதல் தொழிலாளர் ஆணையர் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய முத்திரை ஆய்வாளர் அலுவலகங்களில் காலியாக உள்ள 16 முத்திரைக் கொல்லர் பணியிடங்கள் இனசுழற்சி அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது.

    தகுதி வாய்ந்த சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த விண்ணப்பதாரர்கள் முத்திரைக் கொல்லர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பங்களை அடுத்த (செப்டம் பர்) 26-ந்தேதி மாலை 5.30 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

    உரிய சான்றிதழ்களின் நகல்கள் சுய சான்றொப்பத்துடன் கூடுதல் தொழிலாளர் ஆணையர் அலுவலகம், தமிழ்நாடு தொழிலாளர் நலவாரிய கட்டிடம், 6-ம் தளம், டி.எம்.எஸ். வளாகம், தேனாம்பேட்டை, சென்னை-6 என்ற முகவரிக்கு தபாலில் அனுப்பலாம், அல்லது நேரில் வந்து கொடுக்கலாம்.
    ×