search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Stampede-like chaos"

    • நேர்காணல் 10 இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
    • நேர்காணலில்அதிக எண்ணிக்கையில் இளைஞர்கள் குவிந்ததால், கட்டுப்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

    குஜராத் மாநிலம், அங்கலேஷ்வரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கான நேர்காணலுக்காக 500-க்கும் மேற்பட்டோர் திரண்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    இந்த நேர்காணல் 10 இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அங்கலேஷ்வர் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நேர்காணலில்அதிக எண்ணிக்கையில் இளைஞர்கள் குவிந்ததால், கட்டுப்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

    அங்கலேஷ்வரில் உள்ள ஒரு ஓட்டலில், ரசாயனத் துறையில் பணியிடங்களை நிரப்புவதை நோக்கமாகக் கொண்டு, நிறுவனம் வாக்-இன் நேர்காணலை ஏற்பாடு செய்தது.

    பி.இ உட்பட பல்வேறு தகுதிகள் கொண்ட விண்ணப்பதாரர்கள், கெமிக்கல் இன்ஜினியரிங் மற்றும் ஐடிஐ சான்றிதழ்களில், ஷிப்ட் இன்சார்ஜ், பிளாண்ட் ஆபரேட்டர், சூப்பர்வைசர், மெக்கானிக்கல் ஃபில்டர் மற்றும் எக்ஸிகியூட்டிவ் பதவிகள் போன்ற பதவிகளுக்கு கோரப்பட்டது.

    இந்த நெரிசலான கூட்டத்தின்போது, ஓட்டலின் வாயிலில் தடுப்புக்காக அமைக்கப்பட்டிருந்த பிடி கம்பி அழுத்தம் தாங்காமல் உடைய, அங்கிருந்த இளைஞர்கள் கீழே விழுந்தனர். இதனால் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

    சம்பவம் நடந்த போதிலும், நிறுவனத்தை அணுகுவதற்கான முயற்சிகள் பலனளிக்கவில்லை. இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    மேலும், இந்த கூட்டம் வேலையில்லா திண்டாட்டத்தை காட்டுவதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

    ×