search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    ஆடி செவ்வாய்
    X

    ஆடி செவ்வாய்

    • செவ்வாய்க்கிழமைகளில் ராகுகாலப் பூஜைகளில் பங்குபற்றுதல் நல்லது என்ற கருத்தும் உண்டு.
    • முருகப்பெருமானை வேண்டி விரதம் கடைப்பிடிப்பதும் உண்டு.

    ஆடி செவ்வாய் விரதம் துர்க்கை, முருகனுக்குரிய விரதமாகும். முருகப் பெருமானின் அவதாரமே செவ்வாய்கிரகம் என்று சோதிட நூல்கள் கூறுகின்றன. செவ்வாய்க் கிழமைகளில் ராகு காலத்தில் மாலை 3 மணிக்கு தொடங்கி 4.30 மணி வரை உள்ள காலத்தில் துர்க்கையை பூஜிப்பது விசேஷமானது என்று இந்துக்கள் கருதுகிறார்கள். பத்திரகாளி ராகுவாக அவதாரம் செய்தார் என்பர்.

    செவ்வாய் தோஷத்தாலும், நாகதோஷத்தாலும் திருமண தடைப்பட்டவர்கள், குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்கள் செவ்வாய்க்கிழமைகளில் ராகுகாலப் பூஜைகளில் பங்குபற்றுதல் நல்லது என்ற கருத்தும் உண்டு. ஆடிச்செவ்வாயில் மட்டுமின்றி பொதுவாக செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானை வேண்டி விரதம் கடைப்பிடிப்பதும் உண்டு.

    Next Story
    ×