search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    துவாதசி திதி
    X

    துவாதசி திதி

    • அமாவாசை, பூரணையும் அடுத்து வரும் 13-வது திதி திரயோதசி.
    • திரயோதசியை சுக்கில பட்ச திரயோதசி என்றும் அழைப்பர்.

    துவாதசி என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இந்துக் காலக் கணிப்பு முறையில், 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும் ஒரு நாளைக் குறிக்கும்.

    அமாவாசை நாளையும், பூரணை நாளையும் அடுத்து வரும் பன்னிரண்டாவது திதி துவாதசி ஆகும். துவாதச எனும் வடமொழிச் சொல் பன்னிரண்டு எனப் பொருள்படும். 15 நாட்களைக் கொண்ட தொகுதியில் பன்னிரண்டாவது நாளாக வருவதால் இந்த நாள் இப்பெயரால் அழைக்கப்பட்டது.

    30 நாட்களைக் கொண்ட சந்திர மாதமொன்றில் அமாவாசைக்கு அடுத்த நாள் முதல் பூரணை ஈறாக உள்ள சுக்கில பட்சம் எனப்படும் வளர்பிறைக் காலத்தின் பன்னிரண்டாம் நாளும், பூரணையை அடுத்து வரும் நாளில் இருந்து அமாவாசை முடிய உள்ள கிருட்ண பட்சம் எனப்படும் தேய்பிறை காலத்தின் பன்னிரண்டாம் நாளுமாக இரண்டு முறை துவாதசித் திதி வரும்.

    அமாவாசையை அடுத்துவரும் துவாதசியை சுக்கில பட்ச துவாதசி என்றும், பூரணையை அடுத்த துவாதசியை கிருட்ண பட்ச துவாதசி என்றும் அழைக்கின்றனர்.

    திரயோதசிதிதி

    திரயோதசி என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இந்துக் காலக் கணிப்பு முறையில், 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும் ஒரு நாளைக் குறிக்கும். அமாவாசை நாளையும், பூரணை நாளையும் அடுத்து வரும் பதின்மூன்றாவது திதி திரயோதசி ஆகும். திரயோதச எனும் வடமொழி சொல் பன்னிரண்டு எனப் பொருள்படும். 15 நாட்களைக் கொண்ட தொகுதியில் பன்னிரண்டாவது நாளாக வருவதால் இந்த நாள் இப்பெயரால் அழைக்கப்பட்டது.

    30 நாட்களைக் கொண்ட சந்திர மாதமொன்றில் அமாவாசைக்கு அடுத்த நாள் முதல் பூரணை ஈறாக உள்ள சுக்கில பட்சம் எனப்படும் வளர்பிறை காலத்தின் பதின்மூன்றாம் நாளும், பூரணையை அடுத்து வரும் நாளில் இருந்து அமாவாசை முடிய உள்ள கிருட்ண பட்சம் எனப்படும் தேய்பிறை காலத்தின் பதின்மூன்றாம் நாளுமாக இரண்டு முறை திரயோதசி திதி வரும்.

    அமாவாசையை அடுத்துவரும் திரயோதசியைச் சுக்கில பட்ச திரயோதசி என்றும், பூரணையை அடுத்த திரயோதசியைக் கிருட்ண பட்ச திரயோதசி என்றும் அழைக்கின்றனர்.

    Next Story
    ×