search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    கமடேஸ்வரர் சந்நிதி
    X

    கமடேஸ்வரர் சந்நிதி

    • எங்கெல்லாம் குடமுழுக்கு விழாக்கள் நிகழ்கின்றனவோ அங்கெல்லாம் சிவாச்சாரியரை காணலாம்.
    • மேற்கு திசை நோக்கி கமடேஸ்வரராக சேவை சாதிக்கிறார்.

    தேவாசுரர் பாற்கடலை கடைந்தபோது மந்திர மலை பாரம் அதிகமாகிக் கடலுக்குள் செல்ல ஆரம்பித்தது. கடலுக்குள் மலை செல்லாத வண்ணம் திருமால் ஆமை உருவெடுத்து மந்திர மலையைத்தன் முதுகில் சுமந்து கடலைக் கடைய உதவியருளினார்.இது தான் (கமடம்) கூர்ம அவதாரம்.

    வருணன் மேற்கு திசைக்கு அதிபதி இதனால் தான் அவனுக்கு காட்சித் தந்த பெருமாளும் மேற்கு திசை நோக்கி கமடேஸ்வரராக சேவை சாதிக்கிறார்.

    தெய்வத்திரு தி.ஷ.சாம்பமூர்த்தி சிவாசாரியார் விஸ்வகர்ம ஜெகத்குருவின் ஆத்ம நண்பரும், அநேக திருக்குட முழுக்கு நன்னீராட்டு விழாவினை செய்தவரும், சிறந்த தேவி உபாசகருமாகிய தெய்வத்திரு தி.ஷ. சாம்பமூர்த்தி சிவாசாரியார் குமாரர்கள் தேவியின் நித்ய பூஜை சிறப்புற நடைபெற உறுதுணையாகத் திகழ்கின்றனர்.

    சுமார் 90 ஆண்டுகளுக்கு முன்பு இத்திருக்கோவிலின் சைவ ஆகம பூஜை விதிப்படி நடத்த திருமழிசை சிவத்திரு ஈ.ஷண்முக சிவாசாரியார் அவர்களை நியமித்தனர் விஸ்வகர்ம பெருமக்கள்.

    அவர் மிகவும் பாடுபட்டு ஸ்ரீகாளிகாம்பாளின் அருளை உலக மக்கள் அறிய வைத்தார். அவர் 1961 செப்டம்பர் 21-ல் தேகவியோகம் ஆன பின் அவருடைய இளைய குமாரர்கள் தேவியின் நித்ய பூஜை சிறப்புற நடைபெற உறுதுணையாகத் திகழ்கின்றனர்.

    இக்கோவிலின் திருப்பணியிலும் இதன் முன்னேற்றத்திலும் சைவத்திரு. டாக்டர். தி.ஷ. சாம்பமூர்த்தி சிவாசாரியார் அவர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது.

    குலபூஷணம் தி.ஷ.சாம்பமூர்த்தி சிவாசாரியார் அவர்கள் இந்து தர்மத்தைக் கட்டி காத்து இந்து மதத்தின் பெருமையை உலகறியச் செய்யும் மகத்தான பணியில் திலகமாக விளங்கினார்.

    எங்கெல்லாம் குடமுழுக்கு விழாக்கள் நிகழ்கின்றனவோ அங்கெல்லாம் சிவாசார்யர் அவர்களைக் காணலாம். உள் நாட்டிலும் வெளிநாடுகளிலும் அவர் செய்து வைக்கும் குட முழுக்கு விழாக்கள் பலப்பல, விழாக்கள் மூலம் வரும் தொகையை காளிகாம்பாள் தேவிக்கே திருப்பணிக்கே அளித்து வந்துள்ளார். இது யாம் அறிந்த உண்மை.

    வெள்ளிக்கிழமைகள் தோறும் கன்னி பூஜை நடத்திடவும் கோ பூஜை, திருவிளக்கு பூஜை நடந்திடவும் ஏற்பாடு செய்ததும் சிவாசாரியாரின் பெரு முயற்சியே திருக்கோவில் வளர்ச்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் சிவத்திரு டாக்டர் தி.ஷ.சாம்பமூர்த்தி சிவாசாரியார் ஆவார்.

    அவர் தேகவியோகம் ஆனபின், அவரது இளைய செல்வராகிய தி.சா.காளிதாஸ் சிவாசாரியார் `தந்தையர் ஒப்பர் மகள்' என்பதற்கிணங்க காளிகாம்பாள் கோவில் வளர்ச்சியில் அறங்காவலர்களும் ஆசார்யர்களும் இணைந்து அற்புதமான மேலைக்கோபுரம் அமைத்து கும்பாபிஷேகம் நடத்தினர்.

    திருக்கோவில் வளர்ச்சிக்கு 1. மூர்த்தம், 2. குருக்கள், 3. அறங்காவலர்கள் மூவரும் இணைவது தான் சக்தி மயம். மூர்த்தம் காளிகாம்பாள், குருக்கள்- குரு வடிவில்- தாயைக் காட்டுவித்தல்.

    அறங்காவலர் அறவழியில் நின்று ஆலயத்திற்கு சேவை நெய்தல், ஆலய பணியே அறப்பணி, அதற்கே தன்னை அற்பணி என்று அருட்பணி செய்தல்.

    இவ்மூவகை அம்சமும் திகழ்வது சென்னை ஸ்ரீகாளிகாம்பாள் கோவிலே ஆகும். உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை...!

    Next Story
    ×