search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    தீபாவளி திருநாளில் நடந்த புராண நிகழ்வுகள்
    X

    தீபாவளி திருநாளில் நடந்த புராண நிகழ்வுகள்

    • பாற்கடலைக் கடைந்தபோது திருமகள் தோன்றியதும் அவளை, திருமால் மணந்து கொண்டதும் தீபாவளித் திருநாளில்தான்.
    • பகீரதன் தவம் செய்து கங்கையை வரவழைத்த திருநாளாக தீபாவளியைப் போற்றும் கதைகளும் உண்டு.

    * வாமன அவதாரம் எடுத்த பகவான், மகாபலியை காலால் பூமியில் அழுத்திய நாள் தீபாவளி என்று சொல்கிறார்கள்.

    * வனவாசம் முடிந்து ஸ்ரீராமபிரான் அயோத்தி திரும்பிய நாளை தீபாவளித் திருநாளாகச் சொல்வோரும் உண்டு.

    * பாற்கடலைக் கடைந்தபோது திருமகள் தோன்றியதும் அவளை, திருமால் மணந்து கொண்டதும் தீபாவளித் திருநாளில்தான்.

    * பகீரதன் தவம் செய்து கங்கையை வரவழைத்த திருநாளாக தீபாவளியைப் போற்றும் கதைகளும் உண்டு.

    * சிவபெருமான், தன் மேனியின் இடபாகத்தை பார்வதி தேவிக்கு அளித்து, ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரராக காட்சி தந்த திருநாள் & தீபாவளி என்போரும் உண்டு.

    * தமிழகத்தில் சோழர்களது காலம் வரை தீபாவளி கொண்டாடப்படவில்லை. மதுரை & திருமலை நாயக்கர் ஆட்சி காலத்தில்தான் தமிழகத்தில் தீபாவளித் திருநாள் அறிமுகமானது.

    * சிங்கப்பூரிலுள்ள மாரியம்மன் கோவிலில் தீபாவளியன்று பூக்குழித் திருவிழா நடைபெறும்.

    * நரகாசுரனின் மகனான பகதத்தனே, தீபாவளியை முதன் முதலாகக் கொண்டாடியவன்.

    * ஒரு தீபாவளித் திருநாளில்தான் ஆதிசங்கரர் ஞான பீடத்தை நிறுவினார்.

    * பிரகலாதனின் பேரன் மகாபலி அரியணை ஏறியது இந்த நாளில்தான். சந்திரகுப்த விக்ரமாதித்தன் அரியணையில் அமர்ந்ததும் இந்தத் திருநாளில்தான்.

    * சீக்கிய மதகுரு குருநானக், தீபாவளியன்றுதான் அமரரானார். ஆரிய சமாஜத்தின் நிறுவனர் தயானந்த சரஸ்வதி அமரர் ஆனதும் இந்த நாளில்தான்.

    Next Story
    ×