search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    எந்த முருகன் கோவிலிலும் இல்லாத அளவிற்கு இங்கு விநாயகருக்கு சன்னிதி
    X

    எந்த முருகன் கோவிலிலும் இல்லாத அளவிற்கு இங்கு விநாயகருக்கு சன்னிதி

    • அந்த மண்டபத்தின் முன்பு இரண்டு யானைகள் நம்மை வரவேற்பது போல் சிலைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
    • மண்டபத்தில் முன்பு இடதுபுறம் தேங்காய் சூறை (விடலை) போடுவதற்கான தொட்டி கட்டப்பட்டு உள்ளது.

    எல்லா முருகன் மலைக்கோவிலிலும் அடிவாரத்தில் விநாயகர் இருப்பார்.

    அதேபோல் தோரண மலையின் அடிவாரத்திலும் விநாயகர் பெருமானுக்கு தனி சன்னதி உள்ளது.

    ஆனால் மற்ற கோவில்களில் எல்லாம் பெயரளவுக்குத்தான் விநாயகர் சன்னதி இருக்கும்.

    அதாவது முருகனை வழிபட செல்லும்முன் அவரது அண்ணனும் முழுமுதற் கடவுளான விநாயகரை வழிபட வேண்டும் என்ற நோக்கத்தில் அந்த விநாயகரை அமைத்து இருப்பார்கள்.

    ஆனால் தோரணமலையை பொறுத்தவரை மலைமேல் உள்ள முருகன் சன்னதிக்கு எந்த விதத்திலும் குறையாத வகையில் விநாயகர் சன்னதி அமைக்கப்பட்டு உள்ளது.

    இன்னும் சொல்லப்போனால் முருகனைவிட அதி முக்கியத்துவம் பெற்று விளங்குகிறார், இங்குள்ள விநாயகர்.

    அவருக்கு வல்லப விநாயகர் என்று பெயர்.

    அமர்ந்த நிலையில் கிழக்கு நோக்கி இவர் அருள்பாலிக்கிறார்.

    அந்த காலத்தில் இங்கு விநாயகர் சன்னதி மட்டுமே இருந்துள்ளது.

    அதன்பின் சன்னதி முன்பு மண்டபம் கட்டப்பட்டு உள்ளது.

    அந்த மண்டபத்தின் முன்பு இரண்டு யானைகள் நம்மை வரவேற்பது போல் சிலைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

    மண்டபத்தில் முன்பு இடதுபுறம் தேங்காய் சூறை (விடலை) போடுவதற்கான தொட்டி கட்டப்பட்டு உள்ளது.

    சன்னதியை சுற்றி பிரகாரம் சிறப்புற அமைக்கப்பட்டு உள்ளது.

    விநாயகர் சன்னதிக்கு தென்கிழக்கு பகுதியில் மடப்பள்ளி கட்டப்பட்டு உள்ளது.

    அந்த விநாயகர் சன்னதியில்தான் வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமான், நடராஜர் உற்சவர்கள் உள்ளனர்.

    Next Story
    ×