search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    ஹரதத்தரிடம் திருவிளையாடல் புரிந்த அக்னீஸ்வரர் கற்பகாம்பிகை
    X

    ஹரதத்தரிடம் திருவிளையாடல் புரிந்த அக்னீஸ்வரர் கற்பகாம்பிகை

    • நீ இதில் இறங்கினால் இதிலுள்ள எத்தனையோ லிங்கங்களை மிதிக்க நேரிடும்.
    • இந்தத் தெய்வீக ஆற்றை இங்கிருந்தபடியே தரிசனம் செய்து உனது பாவங்கள் நீங்குவதைக் காண்பாய் என்றான்.

    ஒரு நாள் காவிரிக்கு நீராடச் சென்ற ஹரதத்தர் அங்கு ஓர் புலையனும் புலைச்சியும் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டார்.

    தான் செய்த பாவத்தால் புலைச்சியானதாகக் கூறி, அப்பாவம் நீங்க வேண்டி காவிரியில் நீராட போவதாக கூறினாள்.

    அவளை புலையன் தடுத்து நிறுத்தி விட்டு, இக்காவிரியாற்றிலுள்ள மணல் ஒவ்வொன்றும் சிவலிங்கம் என்பதை அறிவாய்.

    நீ இதில் இறங்கினால் இதிலுள்ள எத்தனையோ லிங்கங்களை மிதிக்க நேரிடும்.

    இந்தத் தெய்வீக ஆற்றை இங்கிருந்தபடியே தரிசனம் செய்து உனது பாவங்கள் நீங்குவதைக் காண்பாய் என்றான்.

    இதனைக் கண்ட ஹரதத்தர், பார்க்கும் யாவும் சிவமயமாகக் காணும் இவனன்றோ சிவஞானி என்று எண்ணி அப்புலையனை நமஸ்கரித்து அவனது மிதியடியை தலை மீது வைத்துக்கொண்டார்.

    அப்புலைய வடிவில் வந்தவர்கள் அக்னீசுவரரும், கற்பகாம்பிகையும் ஆவர்.

    ஹரதத்தா, உனக்குத் திருவடி தீட்சை செய்யவே இப்படித் திரு விளையாடல் செய்தோம் என திருவாய் மலர்ந்து அருளினார் பெருமான்.

    Next Story
    ×