search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    இறைவன் திருவடிகளில் மலர்களை தூவி இந்த திருப்புகழை பாடுங்கள்!
    X

    இறைவன் திருவடிகளில் மலர்களை தூவி இந்த திருப்புகழை பாடுங்கள்!

    • முதல் பன்னிரண்டு அடிகளில் அர்ச்சனை திருப்புகழில் முருகப் பெருமானின் பராக்கிரமம், அழகு, உறவு கூறப்படுகின்றன.
    • பின் பன்னிரண்டு அடிகளில் சிறுவாபுரியின் செல்வ சிறப்பு அழகு, பெருமை ஆகியவையும் கூறப்படுகின்றன.

    அருணகிரிநாதர் சிறுவாபுரி முருகனைப் போற்றிப் பாடி இருக்கும் நான்கு திருப்புகழையும், அதில் மறை பொருளாகச் சொல்லி இருக்கும் பிரார்த்தனைகளையும் அதன்மூலம் நாம் பயன்பெறும் முறைகளையும் இங்கே காணலாம்.

    சீதள வாரிஜ பாதா! நமோநம

    நாரத கீத விநோதா நமோநம

    சேவல மாமயில் ப்ரீதா! நமோநம - மறைதேடுஞ்

    சேகரமான ப்ரதாபா! நமோநம

    ஆகமசார சொரூப நமோநம

    தேவர்கள் சேனைமகீபா! நமோநம- கதிதோயப்

    பாதக நீவுகுடாரா! நமோநம

    மாவசு ரேசர்கடோரா நமோநம

    பாரினி லேஜய வீரா! நமோநம- மலைமாது

    பார்வதி யாள்தரு பாலா! நமோநம

    நாவல ஞான மனோலா நமோநம

    பால குமார சுவாமி! நமோநம- அருள்தாராய்

    போதக மாமுகன் நேரான சோதர

    நீறணி வேணியர் நேயா! நமோநம

    பூமக ளார்மரு கேசா மகோததி- இகல்சூரா

    ேபாதக மாமறை ஞான! தயாகரா!

    தேனவிழ் நிபநறா வாரு மார்பக

    பூரணி மாமதி போல் ஆறு மாமுக!- முருகேசா

    மாதவர் தேவர்களோடேமுராரியும்

    மாமலர் மீதுறை வேதாயு மேபுகழ்

    மாநிலம் ஏழினும் மேலான நாயக!- வடிவேலா

    வானவர் ஊரினும் வீறாகி வீறள

    காபுரி வாழ்வினு மேலாக வேதிரு

    வாழ்சிறு வாபுரி வாழ்வே! சுராதிபர்- பெருமாளே

    இந்த அர்ச்சனை திருப்புகழை பாடும் போது பொருளை உணர்ந்து நமோ நம என முடியும் போது, மலர்களை சிறுவை பால சுப்பிரமணியனின் திருவடிகளில் சமர்ப்பிக்க வேண்டும்.

    முதல் பன்னிரண்டு அடிகளில் அர்ச்சனை திருப்புகழில் முருகப் பெருமானின் பராக்கிரமம், அழகு, உறவு கூறப்படுகின்றன.

    பின் பன்னிரண்டு அடிகளில் சிறுவாபுரியின் செல்வ சிறப்பு அழகு, பெருமை ஆகியவையும் கூறப்படுகின்றன.

    இந்த வரிகளை பாடும் போது முருகனை உணர்ந்து வேண்டி, அவனருளால் எல்லா செல்வங்களையும் பெற பிரார்த்தனை செய்ய வேண்டும்.

    Next Story
    ×