என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
ஆன்மிக களஞ்சியம்
![கோடி பாவங்கள் தீரும் சிவராத்திரி விரதம் கோடி பாவங்கள் தீரும் சிவராத்திரி விரதம்](https://media.maalaimalar.com/h-upload/2024/06/14/2649646-11.webp)
X
கோடி பாவங்கள் தீரும் சிவராத்திரி விரதம்
By
மாலை மலர்14 Jun 2024 5:30 PM IST (Updated: 14 Jun 2024 5:30 PM IST)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- “சிவராத்திரி என்ற உடனே இது ஆண்களுக்கான விரதம் என்ற முடிவுக்கு வந்து விடக்கூடாது.
- பார்வதியே, சிவனை நினைத்து 4 ஜாமங்களிலும் பூஜை செய்த தினம். அதனால் பெண்கள் அவசியம் விரதம் இருந்து பூஜை செய்ய வேண்டும்.
"சிவராத்திரி என்ற உடனே இது ஆண்களுக்கான விரதம் என்ற முடிவுக்கு வந்து விடக்கூடாது.
பார்வதியே, சிவனை நினைத்து 4 ஜாமங்களிலும் பூஜை செய்த தினம். அதனால் பெண்கள் அவசியம் விரதம் இருந்து பூஜை செய்ய வேண்டும்.
திருமணமான பெண்கள் தன்னோட கணவன் மற்றும் பிள்ளைகள் நலனுக்காகவும் திருமணமாகாத பெண்கள் நல்ல கணவன் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும்.
சிவராத்திரியன்று விரதமிருந் தால் புத்தி முக்தி கிடைக்கும், அஸ்வமேத யாகம் செய்த பலன் கிட்டும்.
கோடி பாவங்களும் தீரும், நினைத்த காரியங்கள் நிறைவேறும்.
சிவராத்திரியன்று விரதம் இருந்து தான் பிரம்மா சரஸ்வதியைப் பெற்றதுடன் உலக உயிர்களைப் படைக்கும் பதவியை அடைந்தார்.
மகாவிஷ்ணு விரதமிருந்து சக்ராயுதம் பெற்றதுடன் மகாலட்சுமியையும் உலக உயிர்களைக் காக்கும் உன்னதப் பதவியையும் அடைந்தார்.
Next Story
×
X