search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    நாராயணனை போற்றியதால் தன் குழந்தையை அழிக்க நினைத்த இரணியன்
    X

    நாராயணனை போற்றியதால் தன் குழந்தையை அழிக்க நினைத்த இரணியன்

    • இரணியனுக்குக் கோபம் உச்சமடைந்தது. என்னிலும் வலிமையான இறைவன் எங்கிருக்கிறான் என்றான்.
    • பிரகலாதனும் ““எங்கும் இருக்கிறார், தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்றான்.

    குருகுலத்தில் இருந்து வந்த செய்து கேட்டு இரணியன் கொதித்துப் போனான். தன்னை மூவுலக வாசிகளும் தலைவனாக ஏற்றுக் கொண்ட நிலையில் தன் மைந்தனே தன்னுடைய கருத்துக்கு மாறுபடுவதா என்று பொங்கினான்.

    பிரகலாதனை நயமாக அழைத்து தானே இறைவன் என்பதை ஒப்புக் கொள்ளும்படிச் சொன்னான்.

    ஆனாலும் பிரகலாதன் சர்வ வல்லமை படைத்த கடவுள் எங்கே, இந்த நாட்டுக்கு மட்டுமே அதிபதி யான நீங்கள் எங்கே, என்று மறுமொழி கூறினான்.

    இரணியனுக்குக் கோபம் உச்சமடைந்தது. என்னிலும் வலிமையான இறைவன் எங்கிருக்கிறான் என்றான்.

    பிரகலாதனும் ""எங்கும் இருக்கிறார், தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார். அவர் இல்லாத பொருளே இல்லை"" என்றான்.

    "அப்படியானால் நீ சர்வ வல்லமை பொருந்தி யவராக நினைக்கும் உன் நாராயணன் இந்தத் தூணில் இருக்கிறானா?"" என்று இரணியன் கோபமாகக் கேட்டான்.

    நிச்சயமாக என்றான் பிரகலாதன்.

    Next Story
    ×