என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
ஆன்மிக களஞ்சியம்
![நாழிகைக்கு ஒருமுறை சந்திரன் இறைவன் மீது நீரை சொட்டும் அதிசயம் நாழிகைக்கு ஒருமுறை சந்திரன் இறைவன் மீது நீரை சொட்டும் அதிசயம்](https://media.maalaimalar.com/h-upload/2024/04/25/2108657-07.webp)
நாழிகைக்கு ஒருமுறை சந்திரன் இறைவன் மீது நீரை சொட்டும் அதிசயம்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- 24 நிமிடங்களுக்கு (ஒரு நாழிகை) ஒரு முறை இறைவன் மீது ஒரு சொட்டு நீர் விழுவதை இன்றும் காணலாம்.
- உலகில் வேறு எந்த சிவாலயத்திலும் காண முடியாத அற்புதம் இது.
நமசிவாய என்பது ஐந்தெழுத்து மந்திரம்.
அந்த ஐந்து எழுத்தை மனதில் நிறுத்தும் அற்புத வடிவம் லிங்க உருவம்.
திட்டையில் லிங்க வடிவமாக எழுந்தருளியிருக்கும் மூலவர் வசிஷ்டேஸ்வரர் விமானத்தில், சந்திர காந்தக்கல் வைத்துக் கட்டப்பட்டுள்ளது.
அதற்கும் ஒரு வரலாறு உண்டு.
தன் மாமனார் தட்சனால் தினம் ஒரு கலையாக தேய்ந்து அழியும் சாபம் பெற்றார் சந்திர பகவான்.
தினமும் தேய்ந்து கொண்டே வந்த அவர் திங்களூர் வந்து கயிலாயநாதரை, வணங்கி தவம் இருந்தார்.
கயிலாயநாதரும் சந்திரனின் சாபத்தை நீக்கி, மூன்றாம் பிறையாக தனது தலையில் சந்திரனை அணிந்து கொண்டார்.
திங்களூரில் தன் சாபத்தை போக்கிய சிவ பெருமானுக்கு திட்டையிலே தன் நன்றிக் கடன் செலுத்துகிறார் சந்திரன்.
இறைவனுக்கு மேலே சந்திரக்காந்தக் கல்லாக அமர்ந்து காற்றிலிருந்து ஈரப் பதத்தை ஈர்த்து ஒரு நாழிகைக்கு ஒரு சொட்டாக இறைவனுக்கு நித்யாபிஷேகம் செய்கிறார்.
24 நிமிடங்களுக்கு (ஒரு நாழிகை) ஒரு முறை இறைவன் மீது ஒரு சொட்டு நீர் விழுவதை இன்றும் காணலாம்.
உலகில் வேறு எந்த சிவாலயத்திலும் காண முடியாத அற்புதம் இது.