என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
ஆன்மிக களஞ்சியம்
![ஸ்ரீ ஹயக்ரிவ பெருமாள் அவதார கதை ஸ்ரீ ஹயக்ரிவ பெருமாள் அவதார கதை](https://media.maalaimalar.com/h-upload/2024/06/19/2749016-10.webp)
ஸ்ரீ ஹயக்ரிவ பெருமாள் அவதார கதை
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- வேதங்கள் இல்லாததால் பிரம்மாவால் தன்னுடைய படைப்புத் தொழிலைத் தொடர முடியவில்லை.
- பிரம்மா பகவானிடம் முறையிட்டார்.
யுகங்கள் ஆரம்பிக்கும் முன்பாக ஸ்ரீமந் நாராயணனின் நாபிக் கமலத்தில் இருந்து பிரம்மா படைக்கப்பட்டார், லகங்களையும், உயிர்களையும் தோற்றுவிக்கவே இவர் படைக்கப்பட்டார்.
அதன்படி வேதங்களின் உதவியுடன் தன் படைப்பு வேலையைச் செய்த வந்தார்.
பிரம்மா நல்லவர்களையும், தீயவர்களையும் தோற்றுவித்தார், நல்ல குணம் உடைய தேவர்கள், தீய குண்ட கொண்ட அசுரர்களுக்குத் தொல்லையாகத் தோன்றினர்.
எனவே பிரம்மா இனி தேவர்களைப் படைக்கக் கூடாது என்பதற்காக மது, கைடபர் என்ற இரண்டு அசுரர்கள் வேதங்களை பிரம்மாவிடம் இருந்து அபகரித்துச் சென்று விட்டனர்.
வேதங்கள் இல்லாததால் பிரம்மாவால் தன்னுடைய படைப்புத் தொழிலைத் தொடர முடியவில்லை.
பிரம்மா பகவானிடம் முறையிட்டார்.
பகவான் விஷ்ணு, ஆவணி மாதம் திருவோண நட்சத்திரத்தில் ஸ்ரீஹயக்ரிவராக அவதாரம் செய்து வேதங்களை அசுரர்களிடம் இருந்து மீட்டு, பிரம்மாவிடம் கொடுத்து படைப்பு தொழிலை தொடரச் செய்தார்.
சகலவல்லியான ஸ்ரீ சரஸ்வதி தேவிக்கு எல்லா வேதங்களையும், வித்தைகளையும், கல்விச் செல்வங்களையும் ஸ்ரீ ஹயக்ரிவரே அளித்து அருளினார்.
கல்வியில் வெற்றி பெற மாணவ-மாணவிகள் ஸ்ரீ ஹயக்ரிவ பகவானை தினமும் வேண்டிக் கொண்டு சுவாமி தேசிகனின் கீழ்க்கண்ட துதியைச் சொல்லி வர வேண்டும்.
"ஞாநாநந்த மயம் தேவம் நிர்மலஸ்படிகாக்ருதிம்
ஆதாரம் சர்வ வித்யானாம் ஹயக்ரிவம் உபாஸ்மஹே"