search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    சுதர்சனனுக்கு காட்சி கொடுத்து ஹரதத்தன் என்ற நாமத்தை அருளிய சிவபெருமான்
    X

    சுதர்சனனுக்கு காட்சி கொடுத்து ஹரதத்தன் என்ற நாமத்தை அருளிய சிவபெருமான்

    • குழந்தையும் பகவானுடைய திருவடிகளை விட்டு பிரியாத வரம் கேட்டான்.
    • சகல வேதங்களையும் சாஸ்திரங்களையும் அருளினார் பெருமான்.

    சிவபெருமானை துதித்தான். தன் மீது கருணை காட்டி அருள்புரிய வேண்டினான்.

    இறுதியில் சோர்ந்து விழுந்து விட்டான். பார்வதி தேவியுடன் ரிஷபாரூடராய் சிவபெருமான் காட்சியளித்தார்

    சிவபெருமான் சுதர்சனரிடம் "அப்பா, உனக்கு வேண்டிய வரத்தைக் கேள்" என்று சொன்னார்.

    குழந்தையும் பகவானுடைய திருவடிகளை விட்டு பிரியாத வரம் கேட்டான்.

    சகல வேதங்களையும் சாஸ்திரங்களையும் அருளினார் பெருமான்.

    அவனுக்கு எல்லா கலைகளும் வருமாறு வரமருளினார்.

    பின்னர் அவனை கருணையினால் நோக்கி, நீ உனது உடல் பொருள், ஆவி மூன்றையும் ஹரனாகிய எனக்குத் தத்தம் செய்து விட்டபடியால் உனக்கு ஹரதத்தன் என்ற தீட்சா நாமம் தந்தோம்.

    உனக்கு எல்லாக் கலைகளையும் யாமே உபதேசிப்போம் என்று அருளினார்.

    Next Story
    ×