search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    சுயம்புலிங்கத்தை தன்னகத்தே வைத்துக்கொள்ள பைரவர் போட்ட திட்டம்
    X

    சுயம்புலிங்கத்தை தன்னகத்தே வைத்துக்கொள்ள பைரவர் போட்ட திட்டம்

    • திட்டத்தின் முதல் கட்டமாக சூரிய பகவானை அணுகினார் கால பைரவர்.
    • “நாளை காலை முதல் மதியம் வரை நீ உனது பரிபூரண சக்தியைப் பிரயோகித்துப் பிரகாசிக்க வேண்டும்” என்று ஆணையிட்டார்.

    திட்டத்தின் முதல் கட்டமாக சூரிய பகவானை அணுகினார் கால பைரவர்.

    "நாளை காலை முதல் மதியம் வரை நீ உனது பரிபூரண சக்தியைப் பிரயோகித்துப் பிரகாசிக்க வேண்டும்" என்று ஆணையிட்டார்.

    அடுத்து கங்கா தேவியிடம் கால பைரவர் சென்றார்.

    "பவானி நாளை சூர்யோதயம் முதல் மதியம் வரை காசியில் இருந்து திருக்காரிக்கரை வரை உள்ள பிரதேசத்தில் நீ ஆஞ்சநேயன் கண்களுக்கு மதியத்திற்கு பிறகே புலப்பட வேண்டும்" என்று உத்தரவிட்டார்.

    பிறகு பைரவர் வாயு பகவானிடம் சென்றார்.

    "வாயு தேவா, நாளை காலை முதல் மதியம் வரை திருக்காரிக்கரையில் இருந்து காசி வரை வடதிசை நோக்கி, உனது முழு பலத்தையும் பிரயோகித்துப் பெரும் புயலாக வீசவேண்டும் என்று பைரவர் கேட்டுக் கொண்டார்.

    அது தன் மைந்தனுக்கு எதிரான சூழ்ச்சி என்பதை அறியாத வாயு பகவானும் அப்படியே செய்கிறேன் என்று ஒப்புக் கொண்டார்.

    இப்படியாக தன்னுடைய திட்டத்திற்கு பலமான அஸ்திவாரத்தை போட்டுக் கொண்ட பைரவர் அன்று இரவே, தன் இருப்பிடமாகிய திருக்காரிக்கரை கிராமவாசிகளின் கனவில் தோன்றி, "நாளை விடியற்காலை முதல் மதியம் வரை யாரும் தங்கள் இல்லங்களை விட்டு வெளியே வர வேண்டாம்" என்று கட்டளையிட்டார்.

    Next Story
    ×