சினிமா செய்திகள்

பன்றி மேய்ப்பவரை வில்லனாக காட்டியதற்கு மன்னிப்புக் கேட்கிறேன் - வசந்தபாலன்

Published On 2025-04-07 12:37 IST   |   Update On 2025-04-07 12:37:00 IST
  • தமிழ் சினிமாவில் பா. ரஞ்சித் வருகைக்கு முன்பு சாதி, தலித் மக்களை பற்றிய பார்வை வேறாக இருந்தது.
  • வெயில் திரைப்படத்தின் வாயிலாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

தமிழ் சினிமாவில் வெயில், அங்காடித் தெரு, காவியத் தலைவன், ஜெயில் போன்ற படங்களை இயக்கி தனக்கான இடத்தை பிடித்தவர் இயக்குனர் வசந்த பாலன்.

அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய வசந்தபாலன், "தமிழ் சினிமாவில் பா. ரஞ்சித் வருகைக்கு முன்பு சாதி, தலித் மக்களை பற்றிய பார்வை வேறாக இருந்தது. வெயில் படத்தில் பன்றி மேய்ப்பவரை வில்லனாக காட்டியதற்கு பகிரங்கமாக மன்னிப்புக் கேட்கிறேன். சிறுபான்மையினரை, மூன்றாம் பாலினத்தவரை நாம் தவறாக காட்டிவிட கூடாது என்று பா. ரஞ்சித் அவரது படங்களின் வாயிலாக நமக்கு கடத்தியுள்ளார்" என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News