வழிபாடு

முருகனின் அறுபடை வீடுகளும்.. விளக்கமும்...

Published On 2022-10-26 08:33 GMT   |   Update On 2022-10-26 08:33 GMT
  • தெய்வானையை திருமணம் செய்த இடம் திருப்பரங்குன்றம்.
  • பழத்திற்காக சண்டை போட்ட இடம் பழனி.

புலவர் நக்கீரர் தமிழகத்தில் உள்ள முருகனின் தலை சிறந்த 6 கோவில்களை தேர்வு செய்து அதற்க்கு பெயர் திருமுருகாற்றுப்படை என்று சூட்டினார். பிற்காலத்தில் ஆற்றுப்படை ஆறு படை( அறுபடை வீடு ) என்று அழைக்கப்பட்டது.

திருப்பரங்குன்றம்: சூரபத்மனை போரில் வென்ற பின் இந்திரன் மகளான தெய்வானையை மணந்த திருத்தலமிது.

திருச்செந்தூர்: அசுரன் சூரபத்மனோடு முருகன் போரிட்டு வென்று வெற்றி வாகைச் சூடிய திருத்தலமிது.

பழனி: மாங்கனிக்காக தமையன் விநாயகரோடு போட்டியிட்டு தோற்ற கோபத்தில் தண்டாயுதபாணி நின்ற திருத்தலமிது.

சுவாமிமலை : தன் தந்தை சிவனுக்கே பிரணவ மந்திரத்தை ஓதி தகப்பன் சுவாமியாக காட்சி தரும் திருத்தலமிது.

திருத்தணி: சூரனை வதம் செய்த பின் சினம் தணிந்து, குறவர் மகள் வள்ளியை மணந்த திருத்தலமிது.

பழமுதிர்சோலை: அவ்வைக்கு பழம் உதிர்த்து, வள்ளி தெய்வானையோடு காட்சி தரும் திருத்தலமிது.

Tags:    

Similar News