வழிபாடு

ஸ்ரீகாளஹஸ்தியில் ராகு, கேது பூஜை வழக்கம்போல் நடைபெறும்

Published On 2024-03-05 05:07 GMT   |   Update On 2024-03-05 05:07 GMT
  • ஸ்ரீகாளஹஸ்தியில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவம் நடந்து வருகிறது.
  • நேற்று முதல் ஆர்ஜித சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

திருப்பதி:

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவம் நடந்து வருகிறது. நேற்று முதல் ஆர்ஜித சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் மிகுந்த பக்தியுடன் ஈடுபடும் ராகு, கேது சர்ப்பதோஷ நிவர்த்தி பூஜைகள் இந்த ஆண்டு தடை செய்யப்படவில்லை வழக்கம் போல் நடைபெறும்.

ராகு, கேது பூஜை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை குறிப்பிட்ட நேரத்தில் செய்யப்படும் என காளஹஸ்தி கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News