என் மலர்tooltip icon

    வேலூர்

    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படும்.
    • தோட்டப்பாளையம், பழைய பஸ் நிலையம், வேலூர் டவுன் பஜார்,

    வேலூர்:

    வேலூர் மின் பகிர்மான வட்டம் வேலூர் மற்றும் இறைவன்காடு துணை மின்நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வேலூர் புதிய பஸ் நிலையம், பைபாஸ் ரோடு, தோட்டப்பாளையம், பழைய பஸ் நிலையம், வேலூர் டவுன் பஜார், சலவன்பேட்டை, ஆபீசர்ஸ் லைன், அப்துல்லாபுரம், கிருஷ்ணாநகர்,

    பிஷப்ரோடு, கொசப்பேட்டை, ஓல்டுடவுன், சார்பனாமேடு, பி.டி.சி.ரோடு மற்றும் வல்லாண்டராமம், விரிஞ்சிபுரம், இறைவன்காடு, செதுவாலை, கந்தனேரி, மருதவல்லிபாளையம், அன்பூண்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும். இந்த தகவலை மின்வாரிய அதிகாரி ஆரோக்கியஅற்புதராஜ் தெரிவித்துள்ளார்.

    • சீனிவாசா பெருமாள் சன்னதியில் தரிசனம் செய்த பின்னர் சொர்ண லட்சுமிக்கு அபிஷேகம் செய்தார்.
    • ஜனாதிபதி வருகையையொட்டி வேலூரில் டிடோரன்கள் பறக்க தடை செய்யப்பட்டது.

    ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று முதல் கர்நாடகா, தமிழ்நாடு, தெலுங்கானா மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

    இந்தநிலையில் இன்று காலை திருப்பதி ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு வந்தார். அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் வேலூர் ஸ்ரீபுரம் தங்க கோவிலுக்கு வருகை தந்தார்.

    அவரை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, வேலூர் கலெக்டர் சுப்புலெட்சுமி, போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன், மேயர் சுஜாதா ஆகியோர் வரவேற்றனர்.

    கோவில் வளாகத்தில் அமைந்துள்ள 1,700 கிலோ வெள்ளியால் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் விநாயகரையும், 70 கிலோ தங்கத்தால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள மகாலட்சுமியையும் தரிசனம் செய்தார்.

    சீனிவாசா பெருமாள் சன்னதியில் தரிசனம் செய்த பின்னர் சொர்ண லட்சுமிக்கு அபிஷேகம் செய்தார்.

    பின்னர் கோவில் வளாகத்தில் மரக்கன்று நட்டார். சக்தி அம்மாவிடம் ஆசி பெற்றார். தங்க கோவிலை பார்வையிட்டு சாமி தரிசனம் செய்தார்.

    ஜனாதிபதி வருகையையொட்டி வேலூரில் டிடோரன்கள் பறக்க தடை செய்யப்பட்டது. வேலூர், அணைக்கட்டு சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    தரிசனம் முடிந்ததும் ஜனாதிபதி மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் திருப்பதிக்கு புறப்பட்டு சென்றார்.

    • ஜனாதிபதி வருகையையொட்டி கோவில் பகுதியில் 2 அடுக்கு பாதுகாப்பு போடப்படுகிறது.
    • தங்கக்கோவிலில் ஜனாதிபதி தியான மண்டபத்தை திறந்து வைத்து, சாமி தரிசனம் செய்கிறார்.

    வேலூர்:

    ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை வேலூர் ஸ்ரீபுரம் தங்கக்கோவில் வளாகத்தில் கட்டப்பட்டுள்ள தியான மண்டபத்தை திறந்து வைப்பதற்காக வருகை தர உள்ளார். இதையொட்டி வேலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    இதன் காரணமாக வேலூர் நகரம் மற்றும் குறிப்பாக தங்கக்கோவில் சுற்றியுள்ள வளாகப் பகுதி முழுவதும் 1,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபட உள்ளனர். கோவில் சுற்றியுள்ள அரியூர் பகுதிகளில் அமைந்துள்ள தங்கும் விடுதிகளில் வெளி மாநிலத்தவர்கள், வெளிநாட்டினர் யாரேனும் தங்கி உள்ளார்களா? சந்தேகப்படும் நபர்கள் தங்கி உள்ளார்களா? என்பது குறித்து போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே, பாதுகாப்பு தொடர்பாக தமிழ்நாடு சிறப்பு பாதுகாப்புப்படை போலீசாரும் வேலூரில் முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். சிறப்பு பாதுகாப்புப்படையைச் சேர்ந்த 3 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் தலைமையிலான குழுவினர் கோவில் சுற்று வட்டாரப் பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளனர்.

    ஸ்ரீபுரத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக மாவட்ட கலெக்டர் சுப்புலெட்சுமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன், சிறப்பு பாதுகாப்புப்படையைச் சேர்ந்த போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் ஆகியோர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.

    ஜனாதிபதி வருகையையொட்டி கோவில் பகுதியில் 2 அடுக்கு பாதுகாப்பு போடப்படுகிறது. ஜனாதிபதி நாளை காலை 11.05 மணிக்கு திருப்பதியில் இருந்து ஸ்ரீபுரத்துக்கு வருகிறார். அவர் ஹெலிகாப்டரில் வர உள்ளதால் அவருடன் கூடுதலாக 2 ஹெலிகாப்டர்களும் பாதுகாப்பு கருதி வர உள்ளது. அந்த 2 ஹெலிகாப்டர்களில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த அதிகாரிகள் பயணம் செய்ய உள்ளனர்.

    தங்கக்கோவிலில் ஜனாதிபதி தியான மண்டபத்தை திறந்து வைத்து, சாமி தரிசனம் செய்கிறார். தொடர்ந்து மதியம் 12.30 மணி அளவில் மீண்டும் ஹெலிகாப்டரில் திருப்பதிக்கு புறப்பட்டுச் செல்கிறார்.

    அவர் வருகை தரும் நேரத்தில் ஸ்ரீபுரம் -ஊசூர் சாலையில் போக்குவரத்துத் தடை செய்யப்பட உள்ளது.

    அவரது வருகையை ஒட்டி தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியும் சாலை மார்க்கமாக சென்னையில் இருந்து ஸ்ரீபுரத்துக்கு நாளை காலை வருகை தர உள்ளார்.

    இந்த நிலையில் நேற்று ஜனாதிபதி வருகையை முன்னிட்டு ஹெலிகாப்டர் சோதனை ஓட்டமும், பாதுகாப்பு ஒத்திகையும் நடந்தது.

    • வனவிலங்குகளுக்கு அமைக்கப்பட்டு இருந்த மின்வேலியில் சிக்கி ஜானகிராமன் அலறி துடித்தார்.
    • படுகாயமடைந்த லோகேசை சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    ஒடுகத்தூர்:

    வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அருகே உள்ள ராமநாயினி குப்பத்தை சேர்ந்தவர் ஜானகிராமன் (வயது55), விவசாயி. இவரது மனைவி மல்லிகா(50). இவரது மகன்கள் விகாஷ் (25), லோகேஷ் (23), ஜீவா (22).

    லோகேஷ் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்து இருந்தார். விகாஷ், ஜீவா ஆகியோர் சொந்த ஊரிலேயே ஜானகிராமனுக்கு உதவியாக நர்சரி கார்டன் வைத்து விற்பனை செய்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்றிரவு ஜானகிராமன் மற்றும் அவரது மகன்கள் விவசாய நிலத்திற்கு சென்றனர். அப்போது வனவிலங்குகளுக்கு அமைக்கப்பட்டு இருந்த மின்வேலியில் சிக்கி ஜானகிராமன் அலறி துடித்தார். இதனை பார்த்த 3 மகன்களும் தந்தையை காப்பாற்ற முயற்சி செய்தனர். அப்போது 3 மகன்களும் மின் வேலியில் சிக்கி கொண்டனர்.

    சிறிது நேரத்தில் ஜானகிராமன், விகாஷ், ஜீவா ஆகிய 3 பேர் மீதும் மின்சாரம் பாய்ந்து உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். லோகேஷ் படுகாயமடைந்தார்.

    இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்து மின்சாரத்தை துண்டித்தனர். பின்னர், 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் படுகாயமடைந்த லோகேசை சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு நிலத்தில் சட்டத்திற்கு புறம்பாக மின்வேலி அமைத்த பக்கத்து நிலத்தை சேர்ந்த சங்கர் (52), விவசாயி என்பவரை தேடி வந்தனர். இந்த நிலையில் இன்று காலை குப்பம்பட்டு கிராமத்தில் இருந்த அவரை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தில் வடமாநில தொழிலாளர்கள் சேர்க்கப்படுவார்கள் என்ற கருத்து உள்ளது.
    • வாக்காளர்கள் சிறப்பு திருத்தத்தில் அச்சம் உள்ளது.

    வேலூர்:

    தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகிற 3-ந்தேதி வேலூர் மாவட்டத்துக்கு வருகை தர உள்ளார். இதையொட்டி பல்வேறு ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகம் சார்பிலும், கட்சியினர் சார்பிலும் செய்யப்பட்டு வருகிறது.

    அவர் 4-ந் தேதி வேலூர் கோட்டை மைதானத்தில் சுமார் 15 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார். இதற்காக அங்கு விழா மேடை அமைப்பது தொடர்பாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மழைக்காலங்களில் அதிகப்படியான நீர் கடலுக்கு செல்கிறது. எனவே தமிழகத்தில் உள்ள ஆறுகளை புனரமைக்க பூகோலப்படி, சாத்தியமா என ஆய்வு செய்கிறோம். அவ்வாறு ஆய்வுக்கு பின்னர் நிதி வசதி இருந்தால் செய்யலாம்.

    வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தில் வடமாநில தொழிலாளர்கள் சேர்க்கப்படுவார்கள் என்ற கருத்து உள்ளது. இது ஆபத்து தான்.

    ஒரே இடத்தில் 700 இஸ்லாமியர்கள் இருப்பார்கள் என்றால், அவர்களை வாக்காளர் சிறப்பு திருத்தத்தில் நீக்கிவிட்டு அவர்களின் பெயரை சேர்த்து விடுவார்கள்.

    வாக்காளர்கள் சிறப்பு திருத்தத்தில் அச்சம் உள்ளது. அதுதான் பிரச்சனையே. ஆண்டாண்டு காலமாக இங்கிருந்து வாக்களிப்பவர்களை இல்லையென்று ஆக்கிவிடுவார்கள்.

    எந்த ரூபத்தில் வந்தாலும் அதனை எதிர்கொள்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கரூர் விவகாரத்துக்கு தி.மு.க காரணம் என யாரும் சொல்லவில்லை.
    • கள்ளக்குறிச்சி சம்பவத்தின் போது அன்றைய சூழல் வேறு, இன்றைய சூழல் வேறு.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் சேர்க்காடு பகுதியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் முகாமில் அமைச்சர் துரைமுருகன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நீர் நிலைகளை தூர்வாருதல், கரைகளை, பலப்படுத்துதல் கால்வாய்களை தூர்வாருதல் உள்ளிட்ட பணிகள் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் எவ்வளவு மழை வந்தாலும் தாங்கக்கூடிய அளவிற்கு வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக உள்ளோம்.

    கரூர் விவகாரத்தில் நீதிபதிகள் சொல்வது தான் மெயின், நீதிபதிகள் உண்மையை சொல்லி உள்ளார்கள்.

    கரூர் விவகாரத்துக்கு தி.மு.க காரணம் என யாரும் சொல்லவில்லை.

    கள்ளக்குறிச்சி சம்பவத்தின் போது அன்றைய சூழல் வேறு, இன்றைய சூழல் வேறு. 41 பேர் உயிரிழந்தது மிக சாதாரணமானது அல்ல.

    விஜயை கைது செய்யும் நிலை வந்தால் கைது பண்ணுவோம். தேவையில்லாத சூழலில் பண்ண மோட்டோம். அனாவசியமாக நாங்க யாரையும் கைது செய்ய மாட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • என்னைப் பொறுத்தவரையில் இந்தியா கூட்டணி தமிழகத்தில் வலிமையாக இருக்கிறது.
    • திமுக கூட்டணி உடையும் என்ற எடப்பாடி பழனிசாமிதான் உடைந்து கொண்டிருக்கிறார்.

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை இன்று வேலூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், ஆட்சியில் பங்கு குறித்து காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளதே,உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.

    அதற்கு செல்வப் பெருந்தகை பதில் அளித்ததாவது:-

    எல்லோருக்கும் எழுத்துரிமை, கருத்துரிமை, பேச்சு உரிமை உள்ளது. அவரவர் கருத்துகனை தெரிவிக்கின்றனர். எந்த கருத்து சொன்னாலும் காங்கிரஸ் மேலிடத்தில் அதை சொல்லி விடுகிறேன். இது தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மட்டும்தான் முடிவு எடுக்கும்.

    என்னைப் பொறுத்தவரையில் இந்தியா கூட்டணி தமிழகத்தில் வலிமையாக இருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கும். இது குறித்து பேசுவார்கள். இதை பெரிது படுத்த வேண்டாம். திமுக கூட்டணி உடையும் என்ற எடப்பாடி பழனிசாமிதான் உடைந்து கொண்டிருக்கிறார். அவரிடம் இருந்து டிடிவி தினகரன், ஓபிஎஸ், சசிகலா போய்ட்டாங்க. தற்போது செங்கோட்டையன் போய்க்கொண்டிருக்கிறார். அதிமுக மூழ்கும் கப்பல். அதில் ஏற பயந்து கொண்டு போய்க்கொண்டிருக்கிறார்கள். இன்னும் யார் யார் போவார்கள் என்று தெரியாது. பயத்தில் அச்சத்தில் அங்கு இருக்கிறார்கள். 5 தேர்தல்களில் தொடர் தோல்வி.. 6-வது தேர்தலில் இன்னும் அதைவிட மோசமான தோல்வியை அதிமுக தழுவப் போறாங்க.

    தமிழகத்தில் காங்கிரஸ் தேய்ந்து கொண்டிருக்கிறது என்று யார் சொன்னது. உங்களுக்கு ஏன் இந்த பேராசை, நப்பாசை. 20 ஆயிரம் கமிட்டிகளை போட்டிருக்கோம். அதற்கான Database (தரவுகள்) மேலிடத்தில் உள்ளது. ஆயிரம் பொறுப்பாளர்களை நியமித்து கமிட்டிகளை போட்டிருக்கோம்.

    வேலூர் மாவட்டத்தில் கிராம கமிட்டி உள்ளது. கூட்டத்தில் கிராம கமிட்டி தலைவர் என ஒருவரை அறிமுகம் செய்துள்ளேன். காங்கிரசை பற்றி குறைத்த மதிப்பிடாதீர்கள். இது யானை மாதிரி. எந்திச்சி நின்னுன்னு வச்சிங்கோங்க, என்ன நடக்கும்..,

    விஜய் பற்றி கேள்வி கேட்காதீர்கள்.

    இவ்வாறு செல்லப்பெருந்தகை பதில் அளித்தார்.

    • வீடு புகுந்து பள்ளி சிறுவன் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • இது தொடர்பான சிசிடிவி வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் வீடு புகுந்து பள்ளி சிறுவன் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான சிசிடிவி வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த விவகாரம் தொடர்பாக 6 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் பகுதியில் சிறுவனை போலீசார் மீட்டனர். கடத்திய கும்பல் சிறுவனை அங்கு விட்டு சென்றுள்ளனர்.

    கடத்தப்பட்ட சிறுவன் தற்போது நலமுடன் உள்ளதாகவும் கடத்தல் கும்பலை தீவிரமாக தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    • காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
    • சிஎம்சி காலனி, எல்ஐசி காலனி, காகிதப்பட்டறை, ஈ.பி.நகர்,

    வேலூர்:

    வேலூர் மின் கோட்டத்துக்கு உட்பட்ட சத்துவாச்சாரி துணை மின் நிலையத்தில் மாதாந்திர அத்தியாவசிய மின் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது.

    இதனால், நாளை (16-ந் தேதி) செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி, சத்துவாச்சாரி பகுதி 1 முதல் 5 வரை, அன்பு நகர்,ஸ்ரீராம் நகர், டபுள்ரோடு, வள்ளலார், ரங்காபுரம், அலமேலுரங்காபுரம், சைதாப்பேட்டை, சிஎம்சி காலனி, எல்ஐசி காலனி, காகிதப்பட்டறை, ஈ.பி.நகர், வசந்தம் நகர் விரிவு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என மின்கோட்ட அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சென்னையை சேர்ந்த சி.பி.சி.ஐ.டி போலீசார் காரில் இன்று காலை கிறிஸ்டியான் பேட்டை வந்தனர்.
    • வீட்டிக்கு வெளிப்பகுதியில் வேலூர் மாவட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், காட்பாடி கிறிஸ்டியான் பேட்டையை சேர்ந்தவர் ஜெயகரன் என்கிற ஜெயராஜ். அரசு மற்றும் தனியார் ஒப்பந்த தொழில் செய்து வருவகிறார். இவர் இரிடியம் விற்பனை செய்வதாக புகார் வந்தது. புகாரைத் தொடர்ந்து சென்னையை சேர்ந்த சி.பி.சி.ஐ.டி போலீசார் காரில் இன்று காலை கிறிஸ்டியான் பேட்டை வந்தனர். அப்பகுதியில் ஜெயராஜுக்கு சொந்தமான சொகுசு பங்களாவில் திடீரென்று சோதனை நடத்தினர்.

    வீட்டிக்கு வெளிப்பகுதியில் வேலூர் மாவட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். உள்ளூர் கிராம நிர்வாக அலுவலர் உட்பட வருவாய்த்துறை மற்றும் சி.பி.சி.ஐ.டி போலீசார் சோதனை நடத்தி வருவதாக தெரிவித்தனர். 

    • அதிமுக கட்சி விவகாரத்தில் தலையிட நான் தயாராக இல்லை.
    • விஜய் சுற்றுப்பயணத்தை சனிக்கிழமை வைத்தால் என்ன?, வெள்ளிக்கிழமை வைத்தால் நமக்கென்ன?.

    வேலூர்:

    வேலூர், காட்பாடி காந்திநகரில் தி.மு.க. பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி: தமிழரான சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதி ஆனது குறித்து...

    பதில்: தமிழர் என்பது மட்டும் அல்ல, அவர் எனக்கு வேண்டிய நண்பர். அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    கேள்வி: எம்.ஜி.ஆர். காலத்தில் அ.தி.மு.க.வை பார்த்தவர் நீங்கள். அ.தி.மு.க.வின் தற்போதைய நிலை குறித்து...

    பதில்: அ.தி.மு.க. நிலை குறித்து நான் என்ன சொல்வது. அது அவர்கள் கட்சி. அந்த கட்சி விவகாரத்தில் தலையிட நான் தயாராக இல்லை.

    கேள்வி: தாமிரபரணி ஆற்றை தி.மு.க. தலைமுழுகி விட்டதாக நயினார் நாகேந்திரன் பேசி இருக்கிறாரே?.

    பதில்: நயினார் பாவம். புது பதவிக்கு வந்து வேகமாக இருக்கிறார். அவர் சட்டசபையில் எப்படி செயல்படுகிறார் என எங்களுக்கு தெரியும்.

    கேள்வி: த.வெ.க. தலைவர் நடிகர் விஜய் சுற்றுப்பயணம் குறித்து...

    பதில்: நடிகர் விஜய் முதலில் வெளியே வரட்டும் பார்க்கலாம். அவர் சுற்றுப்பயணத்தை சனிக்கிழமை வைத்தால் என்ன?, வெள்ளிக்கிழமை வைத்தால் நமக்கென்ன?.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அதோடு 2026 தேர்தலில் உங்கள் சொந்தத் தொகுதியில் எடப்பாடி பழனிசாமி தோற்கடிக்கப்படுவார் என்கிறார் முத்தரசன்.
    • உங்க அப்பாவே வந்தாலும் முடியாது. 2021 ஆண்டிலேயே சேலம் மாவட்டத்தில் 10 தொகுதிகளை நாங்கள் வென்று காட்டினோம்.

    மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் எழுச்சிப் பயணம் மேற்கொள்ளும் அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று காட்பாடி, வேலூர், ஆற்காடு ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் மக்களை சந்தித்தார்.

    காட்பாடி தொகுதி சித்தூர் பேருந்து நிலையம் அருகே புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகத்துடன் இணைந்து மக்கள் மத்தியில் பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    காட்பாடி தொகுதி பாதி நகரம், பாதி கிராமம், விவசாயிகளுக்காக குடிமராமத்து திட்டம் கொண்டுவரப்பட்டது. மும்முனை மின்சாரம் 24 மணிநேரம் கொடுத்தோம், பயிர்க்கடன் இரண்டு முறை தள்ளுபடி செய்தோம், பேரிடர் நேரத்தில் பயிர்க்காப்பீடு மூலம் இழப்பீடு பெற்றுக்கொடுத்தோம். வறட்சி நிவாரணம் கொடுக்கப்பட்டது.

    நேற்றைய தினம் கம்யூனிஸ்ட் தலைவர் முத்தரசன் சேலம் மாநாட்டில் பேசினார். எடப்பாடி பழனிசாமி கம்யூனிஸ்ட் கட்சியை தரம் தாழ்ந்து பேசுவதாகச் சொல்கிறார். நான் என்ன கேட்டேன், கம்யூனிஸ்ட் எதிர்க்கட்சியா அல்லது ஆளும்கட்சியா? எங்க வரிசையில்தான் அவர்கள் அமர்ந்திருக்கிறார்கள் என்றுதான் கேட்டேன்.

    மக்களுக்கு பிரச்சனை வரும்போது, அதை அரசுக்கு எடுத்துச்செல்ல வேண்டும். கூட்டணியாக இருந்தாலும் குரல் கொடுக்க வேண்டும், அதைத்தான் சுட்டிக்காட்டினேன். ஆனால் அவருக்கு கோபம் வந்து ஏதேதோ பேசியிருக்கார். அதுமட்டுமல்ல, கம்யூனிஸ்ட் பணம் வாங்கியதாக நான் சொன்னதாகச் சொல்கிறார். அதை நாங்கள் சொல்லவில்லை. உங்களைக் காட்டிக்கொடுத்ததே திமுகதான். நாங்கள் சொல்லவில்லை. செய்தி வெளியானதா இல்லையா? தேர்தல் நிதி கொடுக்கப்பட்டதா… இல்லையா?.

    பாஜகவுடன் கூட்டணி வைத்ததை தப்பு என்கிறார் முத்தரசன். திமுக கூட பாஜக-வோடு கூட்டணி அமைத்து மத்தியில் அங்கம் வகித்தது எல்லாம் முத்தரசனுக்குத் தெரியவில்லை. அதைப் பேசுவதற்கு முடியாத முத்தரசனுக்கு எங்களைப் பற்றி பேசுவதற்கு எந்தத் தகுதியுமில்லை.

    அதோடு 2026 தேர்தலில் உங்கள் சொந்தத் தொகுதியில் எடப்பாடி பழனிசாமி தோற்கடிக்கப்படுவார் என்கிறார் முத்தரசன்.

    உங்க அப்பாவே வந்தாலும் முடியாது. 2021 ஆண்டிலேயே சேலம் மாவட்டத்தில் 10 தொகுதிகளை நாங்கள் வென்று காட்டினோம், எடப்பாடி தொகுதியில் 94 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றேன். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கூட்டணியும் இல்லாமல் எடப்பாடி தொகுதியில் 45 ஆயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்றிருக்கிறோம். நாங்கள் மக்களுக்காக உழைத்திருக்கிறோம். மக்கள் எங்களுக்கு விசுவாசமாக இருந்து வாக்களிப்பார்கள்.

    உங்களைப் போல காலத்துக்கேற்ப நிறம் மாறுகின்ற கட்சி அதிமுக அல்ல, பஞ்சோந்தி போல் நிறம் மாறுவதில்லை. கொள்கையின் அடிப்படையில்தான் செயல்படும். கூட்டணி என்பது தேர்தல் நேரத்துக்கு மட்டும்தான்.

    நீங்கள் கொள்கை என்கிறீர்கள், திமுகவும் கம்யூனிஸ்ட் கட்சியும் ஒரே கொள்கையா? நேற்றைக்கு முன் தினம் கம்யூனிஸ்ட் மாநாட்டில் ஸ்டாலின் பேசும்போது, 'நான் பாதி கம்யூனிஸ்ட்' என்கிறார். அப்படியென்றால் பாதியை விழுங்கிவிட்டார்.

    கம்யூனிஸ்ட் கட்சிக்கு நான் சொல்வது இதுதான். திமுக தவறுக்கு துணை போகாதீர்கள், உங்களுக்கென தனிச் செல்வாக்கு உள்ளது. அது சரிந்துகொண்டு வருகிறது என்று சொன்னேன். தன்னை பாதி கம்யூனிஸ்ட் என்கிறார் ஸ்டாலின. அதாவது பாதியை விழுங்கிவிட்டார் ஸ்டாலின். இனியும் நீங்கள் விழித்துக்கொள்ளாவிட்டால் உங்களை யாரலும் காப்பாற்ற முடியாது.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

    ×