சமையல்

உங்களுக்காக சில சமையல் டிப்ஸ்கள் இதோ...

Published On 2025-02-22 08:58 IST   |   Update On 2025-02-22 08:58:00 IST
  • பாகற்காயில் தயிர் ஊற்றி ஊறவிட்டு சிறிது நேரம் கழித்து வதக்கினால் கசப்பு இருக்காது.
  • கீரை சமைக்கும் போது அதனுடன் இளந்தண்டையும் சேர்த்தால் சீக்கிரம் வெந்துவிடும்.

* முட்டையை வேக வைத்த பிறகு அதன் ஓடு லேசாக வெடிக்கும் வரை அடித்து சிறிது நேரம் குளிர்ந்த நீரில் மூழ்கடிக்க வேண்டும். அதன் பிறகு, முட்டையை எளிதில் உடைக்க இயலும். முட்டை கொதிக்கும் போது ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடாவை தண்ணீரில் சேர்த்தால் ஓடு எளிதில் வெளியேற உதவும்.

* கடலை மாவு, அரிசி மாவு, பேக்கிங் சோடா, சிறிது எண்ணெய், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து மாவை நன்றாக கலக்கவும். பின்னர், மாவில் மிளகாயை முக்கி, சூடான எண்ணெய்யில் போட்டு எடுக்கவும். இவ்வாறு செய்தால் பஜ்ஜி மொறுமொறுப்பாக இருக்கும்.

* வெங்காய பஜ்ஜி செய்யும் போது வெங்காயத்தை வட்டமாக வெட்டிய பின், தோலை உரித்தால் வெங்காயம் தனித்தனியாக பிரியாமல் வட்டமாக இருக்கும். பஜ்ஜி செய்யும் போது மாவுடன் மைதா சேர்த்தால் சுவையாகவும், மொறுமொறுப்பாகவும் இருக்கும்.

* பாகற்காயில் தயிர் ஊற்றி ஊறவிட்டு சிறிது நேரம் கழித்து வதக்கினால் கசப்பு இருக்காது.

* பீன்ஸ், பட்டாணி போன்றவைகளில் சிறிதளவு சர்க்கரை சேர்த்து வேக வைத்தால் அதன் நிறம் மாறாது.

* மிளகாய்த்தூள் கெட்டுப்போகாமல் இருக்க அதில் சிறிதளவு பெருங்காய கட்டியை போட்டு வைத்தால் போதும். நீண்ட நாள் காரம் மணம் மாறாமல் இருக்கும்.

* வடைக்கு மாவு தயாரிக்கும்போது அதில் சிறிதளவு நெய் சேர்க்க முறுமுறுப்பாக இருக்கும். எண்ணெய் தேவை குறைவாகும்.

* கீரை சமைக்கும் போது அதனுடன் இளந்தண்டையும் சேர்த்தால் சீக்கிரம் வெந்துவிடும்.

* மீன் குழம்பு தயாரிக்கும் போது வெந்தயம், பெருங்காயம் இரண்டையும் வறுத்து பொடி செய்து குழம்பில் சிறிது போட்டு இறக்கினால் நல்ல மணமாக இருக்கும்.

* உள்ளங்கையில் சமையல் எண்ணெய் சில சொட்டு ஊற்றி தேய்த்து மீனை சுத்தம் செய்தால் கைகளில் மீன் வாடை பிடிக்காது.

* மிளகு ரசத்திற்கு குழைய வைத்து வேக வைத்திருக்கும் பட்டாணி நீரை சேர்த்தால் ரசம் சுவையாக இருக்கும்.

Tags:    

Similar News