உள்ளூர் செய்திகள்

காந்திநகர் ஏ.வி.பி., பள்ளி ஆண்டு விழா

Published On 2023-01-31 10:17 GMT   |   Update On 2023-01-31 10:17 GMT
  • பொதுத்தேர்வில் நல்ல தேர்ச்சி பெற காரணமாக இருந்த ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
  • பள்ளியின் மாணவர் மன்றத்துடன் இணைந்து பள்ளியின் கலை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் நித்யா மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

திருப்பூர் :

திருப்பூர் காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள ஏ.வி.பி டிரஸ்ட் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில் 12-ம் ஆண்டு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

பள்ளியின் கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஷியாமளா ரமேஷ்பாபு மற்றும் கவிஞர் பா.விஜய் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். மாணவர்களின் பல்சுவைக் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் கல்வியிலும் விளையாட்டிலும் சிறந்து விளங்கிய மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும், பொதுத்தேர்வில் நல்ல தேர்ச்சி பெற காரணமாக இருந்த ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

ஏ.வி.பி.கல்வி குழுமங்களின் தாளாளர் கார்த்திகேயன்அருள்ஜோதி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏ.வி.பி.கல்வி குழுமங்களின் பொருளாளர் லதா கார்த்திகேயன் வரவேற்றார். பள்ளி முதல்வர் பிரமோதினி ஆண்டறிக்கை வாசித்தார். காலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர் சியாமளா ரமேஷ்பாபு குழந்தை வளர்ப்பு ஒரு கலை என்னும்தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திரைப்பட பாடல் ஆசிரியர் கவிஞர் பா. விஜய் வருங்கால சமூகத்தின் சிற்பியாக இருக்கும் குழந்தை களைக்கொண்டாடுவோம் என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். முடிவில் பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் மோகனா நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளியின் மாணவர் மன்றத்துடன் இணைந்து பள்ளியின் கலை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் நித்யா மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர். 

Tags:    

Similar News