உள்ளூர் செய்திகள்

மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2022-10-28 11:35 IST   |   Update On 2022-10-28 11:35:00 IST
  • மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
  • இந்தி திணிப்பை கண்டித்து நடந்தது

புதுக்கோட்டை

மாநிலங்கள் மீது மத்திய அரசின் இந்தி திணிப்பை கண்டித்து புதுக்கோட்டையில் வாலிபர்கள், மாணவர் சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அண்ணாசிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் மகாதீர் ரூபவ் இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் சந்தோஷ் ஆகியோர் தலைமை வகித்தனர். மாணவர் சங்க மாநில துணை செயலாளர் ஜனார்த்தனன்ரூபவ் வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் குமாரவேல் ஆகியோர் கண்டன உரையாற்றினர். முன்னாள் மாவட்ட செயலாளர் துரை.நாராயணன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News