இந்தியா

சுங்கச்சாவடி ஊழியருக்கு கன்னத்தில் அறை? போலீசார் விசாரணை

Published On 2024-09-18 01:44 GMT   |   Update On 2024-09-18 01:44 GMT
  • வீடியோ எக்ஸ் வலைத்தளத்தில் வெளியாகி ஒரே நாளில் சுமார் 8 லட்சம் பேரின் பார்வைகளைப் பெற்றதுடன், பரபரப்பையும் பற்ற வைத்தது.
  • சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கர்நாடகா- மகாராஷ்டிரா எல்லையில் அமைந்துள்ளது அந்த சுங்கச்சாவடி. அந்த வழியாக சென்ற கர்நாடகாவை சேர்ந்த ஒரு டிரைவரின் வாகனத்தை சுங்கச்சாவடி ஊழியர்கள் நிறுத்தி கட்டணம் வசூலித்தனர்.

அப்போது சுங்கச்சாவடி ஊழியர்கள் இந்தியில் பேசி உள்ளனர். இதற்கு கர்நாடக டிரைவர் எதிர்ப்பு தெரிவித்தார். 'நீங்கள் ஏன் கன்னடத்தில் பேசவில்லை?' என்று கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த சுங்கச்சாவடி ஊழியர், தனது செல்போனை எடுத்து வீடியோவாக பதிவு செய்து கொண்டே டிரைவருடன் வாக்குவாதம் செய்தார். 'இந்தியா முழுவதும் இந்தி பேசப்படுகிறது' என்று வாதம் செய்கிறார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் மேலும் வளர்ந்தது.

இதுபற்றிய வீடியோ எக்ஸ் வலைத்தளத்தில் வெளியாகி ஒரே நாளில் சுமார் 8 லட்சம் பேரின் பார்வைகளைப் பெற்றதுடன், பரபரப்பையும் பற்ற வைத்தது. விவாத முடிவில் டிரைவர், சுங்கச்சாவடி ஊழியரின் கன்னத்தில் அறைந்ததாகவும் சர்ச்சை கிளம்பி உள்ளது. சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News