இந்தியா (National)

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் தாக்குதல்- ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

Published On 2024-10-19 14:04 GMT   |   Update On 2024-10-19 14:04 GMT
  • இந்தோ- திபெத்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்களில் 2 பேர் உயிரிழந்தனர்.
  • மகாராஷ்டிரா மற்றும் ஆந்திராவை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

சத்தீஸ்கரில் எல்லை பாதுகாப்புப் படை, இந்தோ- திபெத்திய எல்லை பாதுகாப்புப் படை மற்றும் போலீஸ் அடங்கிய குழுவானது மாநிலத்தின் துபேடா பகுதியில் இருந்து நாராயணன்பூருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.

அப்போது, அபுஜ்மத் பகுதியில் உள்ள கொட்லியார் கிராமத்திற்கு அருகே அவர்கள் வந்துகொண்டிருந்தபோது மாவோயிஸ்டுகள் புதைத்து வைத்திருந்த வெடிபொருள் திடீரென வெடித்துச்சிதறியது.

இதில், இந்தோ- திபெத்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்களில் 2 பேர் உயிரிழந்தனர். அவர்கள், மகாராஷ்டிரா மற்றும் ஆந்திராவை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

மேலும், 2 பேர் படுகாயமடைந்தனர். தொடர்ந்து, அப்பகுதியில் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News