என் மலர்
சத்தீஸ்கர்
- ரூ.33,700 கோடி மதிப்புள்ள பல வளர்ச்சித் திட்டங்களுக்கான பணிகளை தொடங்கிவைத்தார்.
- முந்தைய அரசாங்கங்களின் அலட்சியம், எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல இருந்தது
சத்தீஸ்கர் பயணப்பட்டுள்ள பிரதமர் மோடி பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள மொஹபத்தா கிராமத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்றார்.
இந்த நிகழ்வில் ரூ.33,700 கோடி மதிப்புள்ள பல வளர்ச்சித் திட்டங்களுக்கான பணிகளை தொடங்கிவைத்தார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், காங்கிரசின் கொள்கைகளால், சத்தீஸ்கர் உட்பட பல மாநிலங்களில் பல தசாப்தங்களாக நக்சலிசம் ஊக்கம் பெற்றது. வளர்ச்சியில் பின்தங்கிய பகுதிகளில் நக்சலிசம் செழித்தது, ஆனால் 60 ஆண்டுகளாக ஆட்சி செய்த கட்சி என்ன செய்தது? அத்தகைய மாவட்டங்களை பின்தங்கியதாக அறிவித்து அதன் பொறுப்பிலிருந்து விலகிச் சென்றது.
மாவோயிஸ்ட் வன்முறையில் பல தாய்மார்கள் தங்கள் அன்புக்குரிய மகன்களை இழந்தனர், பல சகோதரிகள் தங்கள் சகோதரர்களை இழந்தனர்.
முந்தைய அரசாங்கங்களின் அலட்சியம், எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல இருந்தது. முந்தைய காங்கிரஸ் அரசாங்கம் ஏழை பழங்குடியினரின் வசதிகளை ஒருபோதும் கவனித்துக் கொள்ளவில்லை என்று குற்றம்சாட்டினார்.
மேலும் பேசிய அவர், பாஜக அரசின் வளர்ச்சி மற்றும் நலத்திட்ட முயற்சிகள் காரணமாக நக்சல் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் அமைதியின் புதிய சகாப்தம் காணப்படுகிறது. காங்கிரஸின் கொள்கைகளால் நக்சலிசம் அதிகரித்தது. ஆனால் பாஜக அரசு மக்களுக்கு வீடுகளை கட்டுவது மட்டுமல்லாமல், மக்களின் வாழ்க்கையையும் வளப்படுத்துகிறது என்று தெரிவித்தார்.
- பாதுகாப்புப் படையினருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே அவ்வப்போது என்கவுன்டர் நடைபெறுகிறது.
- இந்த தாக்குதலில் 2 ராணுவ வீரர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது.
6இந்தியாவில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் மிகுந்த மாநிலங்களில் சத்தீஸ்கரும் ஒன்று. இங்கு நக்சலைட்டுகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் சிறப்பு அதிரடிப் படைவீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
நக்சலைட்டுகளுக்கு எதிரான இந்தத் தேடுதல் நடவடிக்கையின்போது அவ்வப்போது பாதுகாப்புப் படையினருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே என்கவுன்டர் நடைபெறுகிறது.
சத்தீஸ்கரில் உள்ள சுக்மா மாவட்டத்தில் உள்ள கேர்லாபால் பகுதியில் இன்று அதிகாலை பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுண்டர் தாக்குதலில் 16 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் 2 ராணுவ வீரர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது.
- சோதனை குறித்து அதிகாரிகள் எந்த தகவலையும் வெளியிடவில்லை.
- பாகேலுக்கு நெருக்கமான போலீஸ் அதிகாரி வீட்டிலும் சோதனை.
சத்தீஸ்கர் மாநில முன்னாள் முதல் மந்திரியும் காங்கிரஸ் தலைவருமான பூபேஷ் பாகேல் வீட்டில் இன்று சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடியாக புகுந்து சோதனையில் ஈடுபட்டனர்.
ராய்ப்பூர் மற்றும் பிலாயில் உள்ள அவரது வீடுகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும் பாகேலுக்கு மிக நெருக்கமான ஒரு மூத்த போலீஸ் அதிகாரியின் வீட்டிலும் சோதனை நடந்தது. இந்த சோதனை குறித்து அதிகாரிகள் எந்த தகவலையும் வெளியிடவில்லை.
மதுபான ஊழல் தொடர்பான வழக்கில் இந்த சோதனை மேற்கொள்ளப்படுவதாகத் தெரிகிறது. மதுபான வழக்கு தொடர்பாக பாகேல் மற்றும் அவரது மகன் சைதன்யாவின் வீட்டில் அமலாக்க இயக்குனரக அதிகாரிகள் சமீபத்தில் சோதனை நடத்தினர். அந்த சோதனைகளின் போது ரூ.30 லட்சம் ரூபாய் ரொக்கமும் பல ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.
இன்று சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது சத்தீஸ்கர் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது சோதனை நடந்து வரும் இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் குவிந்துள்ளனர். அந்த பகுதி பதட்டமாக காணப்பட்டது.
- சத்தீஸ்கரில் நடந்த என்கவுன்டரில் 18 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்.
- இந்த சண்டையில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் உயிரிழந்தார்.
ராய்ப்பூர்:
இந்தியாவில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் மிகுந்த மாநிலங்களில் சத்தீஸ்கரும் ஒன்று. இங்கு நக்சலைட்டுகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் சிறப்பு அதிரடிப் படைவீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
நக்சலைட்டுகளுக்கு எதிரான இந்தத் தேடுதல் நடவடிக்கையின்போது அவ்வப்போது பாதுகாப்புப் படையினருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே என்கவுன்டர் நடைபெறுகிறது.
இந்நிலையில், இன்று காலை 7 மணியளவில் பீஜப்பூர் மற்றும் தண்டேவாடா மாவட்டங்களின் எல்லையில் கங்கலூர் காவல் நிலையப் பகுதியில் உள்ள ஒரு காட்டில் பாதுகாப்புப் படையின் கூட்டுப்படையினர் நக்சலைட் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் 2 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. இதில் 18 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்களும் வெடிபொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், இந்த சண்டையின்போது மாவட்ட ரிசர்வ் காவல்படை (டிஆர்ஜி) வீரர் ஒருவர் உயிரிழந்தார். தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 148 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய இந்தியா 149 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
ராய்ப்பூர்:
முதலாவது சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றது.
மொத்தம் 6 அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
இந்நிலையில், ராய்ப்பூரில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 148 ரன்கள் எடுத்தது.
தொடக்க ஆட்டக்காரர் டுவைன் சுமித் 45 ரன்களில் ஆட்டமிழந்தார். ஓரளவு நிலைத்து விளையாடி அரை சதம் கடந்த சிம்மன்ஸ் 57 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இந்தியா சார்பில் வினய் குமார் 3 விக்கெட்டும், ஷபாஸ் நதீம் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 149 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்தியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அம்பதி ராயுடு அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார். அவர் 50 பந்தில் 74 ரன்கள் எடுத்து அவுட்டானார். சச்சின் 25 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், இந்தியா 17.1 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 149 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. ஆட்ட நாயகன் விருது அம்பதி ராயுடுவுக்கு வழங்கப்பட்டது.
- முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 179 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய இலங்கை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 173 ரன்கள் மட்டுமே எடுத்தது.
ராய்ப்பூர்:
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடரில் ராய்பூரில் நேற்று நடந்த முதல் அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 94 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா இறுதிபோட்டிக்கு முன்னேறியது.
இந்நிலையில், இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கைபந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி ராம்தின் அதிரடி அரைசதத்தின் உதவியுடன் 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 179 ரன்கள் எடுத்தது.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் பிரையன் லாரா 41 ரன்னும், சாட்விக் வால்டன் 31 ரன்னும் எடுத்தனர்.
இதையடுத்து, 180 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இலங்கை களமிறங்கியது. இறுதியில், இலங்கை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 173 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் 2வது அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் டினோ பெஸ்ட் 4 விக்கெட்டும், டுவெயின் ஸ்மித் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இறுதி ஆட்டத்தில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
- சத்தீஸ்கரில் இன்று மொத்தம் 15 இடங்களில் ஒரே நேரத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
- சோதனையின் மூலம் மதுபான ஊழல் குற்றச்சாட்டில் முன்னாள் முதல்-மந்திரி பூபேஷ் பாகல் மீதான பிடி இறுகியுள்ளது.
ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் முதல்-மந்திரியாக பூபேஷ் பாகல் இருந்தபோது கடந்த 2019 முதல் 2022-ம் ஆண்டு வரை மதுபான கொள்கையில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மதுபானங்களை சட்ட விரோதமாக விற்று சுமார் ரூ.2,100 கோடி அளவுக்கு மோசடி நடந்ததாக புகார் எழுந்துள்ளது.
இது தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் மதுபான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக முன்னாள் முதல்-மந்திரியும், காங்கிரஸ் தலைவருமான பூபேஷ் பாகல் மகன் சைதன்யா பாகல் வீட்டில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
இதற்காக இன்று அதிகாலையே அமலாக்கத்துறை அதிகாரிகள் பிலாய், பத்மநகரில் உள்ள சைதன்யா பாகல் வீட்டுக்கு வந்தனர். உடனடியாக அவரது வீட்டில் சோதனை நடத்த தொடங்கினார்கள். சோதனை நடந்த போது வீட்டில் இருந்த யாரையும் வெளியே செல்ல அவர்கள் அனுமதிக்கவில்லை.
இதேபோல் சத்தீஸ்கரில் இன்று மொத்தம் 15 இடங்களில் ஒரே நேரத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். மதுபான ஊழல் தொடர்பான குற்றச்சாட்டில் பணமோசடி செய்யப்பட்டதாக எழுந்த புகாரின் பேரின் 15 இடங்களிலும் இந்த சோதனை நடத்தப்படுகிறது.
சைதன்யா பாகல் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். மேலும் அவருக்கு விவசாயத்திலும் ஆர்வம் உள்ளது. அவருக்கு 3 வருடங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. அவரது மனைவி கியாதியும் ஒரு விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார்.
இந்த சோதனையின் மூலம் மதுபான ஊழல் குற்றச்சாட்டில் முன்னாள் முதல்-மந்திரி பூபேஷ் பாகல் மீதான பிடி இறுகியுள்ளது.
- சத்தீஸ்கர் உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றது.
- அங்கு மொத்தம் உள்ள 10 மேயர் தொகுதிகளையும் பா.ஜ.க. கைப்பற்றியது.
ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் உள்ள 10 மேயர் தொகுதிகளையும் கைப்பற்றி பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தல்களில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றது. இதைத்
தொடர்ந்து, கடந்த 11-ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதன் முடிவுகள் சமீபத்தில் வெளியாகின.
இங்கு மொத்தமுள்ள 49 நகராட்சி கவுன்சில் தலைவர் பதவிகளில் 35 இடங்களில் பா.ஜ.க.வும், காங்கிரஸ் 8 இடங்களிலும் வென்றது. 114 நகர பஞ்சாயத்துகளில் பா.ஜ.க. 81 இடங்களிலும், காங்கிரஸ் 22 இடங்களிலும் வென்றது. நகராட்சி வார்டுக்கு நடந்த தேர்தலில் பெரும்பாலான இடங்களை பா.ஜ.க. கைப்பற்றியது.
இதற்கிடையே, சத்தீஸ்கரின் பரஸ்வாரா கிராமத்தில் தேர்வு செய்யப்பட்ட 11 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் நேற்று பதவியேற்றனர். இதில் தேர்வான 6 பெண் உறுப்பினர்களுக்கு பதிலாக அவர்களது கணவர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானதை தொடர்ந்து பல்வேறு புகார்கள் எழுந்தது.
இந்நிலையில், பெண் உறுப்பினர்களுக்கு பதிலாக அவர்களது கணவர்கள் பதவியேற்றது குறித்து விசாரணை நடத்துப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
- சத்தீஸ்கரில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது.
- பாஜகவின் பூஜா விதானியின் மேயர் பதவியேற்பு விழாவில் சத்தீஸ்கர் துணை முதல்வர் கலந்து கொண்டார்
சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாநகரட்சி மேயராக பதவியேற்ற பாஜகவின் பூஜா விதானி பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டபோது, 'நாட்டின் இறையான்மையைக் காப்பேன்' என்பதற்குப் பதிலாக 'வகுப்புவாதத்தைக் காப்பேன்' என படித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சத்தீஸ்கரில் சமீபத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சியான பாஜக அமோக வெற்றி பெற்றது.
பாஜகவின் பூஜா விதானியின் மேயர் பதவியேற்பு விழாவில் சத்தீஸ்கர் மாநில துணை முதல்வர் அருண் சாவோ, மத்திய அமைச்சர் டோகன் சாஹு ஆகியோர் கலந்து கொண்டனர்.
பூஜா விதானி மேயர் பதவியேற்பு விழாவில் 'இறையான்மை' என்பதை 'வகுப்புவாதம்' என்று தவறாக வாசித்ததை கவனித்த மாவட்ட ஆட்சியர் உடனே சுட்டிக்காட்டிய நிலையில் பூஜா விதானி மீண்டும் சரியாக வாசித்தார்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், இந்த விவகாரத்தை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது
- வனப்பகுதியில் பாதுகாப்பு படையினர் நக்சல்களை தேடி ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
சத்தீஷ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் உள்ள கிஸ்தாராம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் பாதுகாப்புப்படையினர் நக்சல்களை தேடி ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த பகுதியில் பதுங்கியிருந்த நக்சல்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 2 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அங்கு தொடர்ந்து, தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டில் மட்டும் இதுவரை மாநிலத்தில் ஏற்பட்ட தனித்தனி மோதல்களில் 83 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
- சத்தீஸ்கரில் இயற்கைக்கு மாறான உடலுறவு கொண்டதால் மனைவி உடல் நலம் பாதிக்கப்பட்டார்.
- ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி மனைவி உயிரிழந்தார்.
சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் கடந்த 2017-ம் ஆண்டு அவருடைய மனைவியுடன் இயற்கைக்கு மாறான உடலுறவு கொண்டதாக கூறப்படுகிறது.
இதில் அவருடைய மனைவி கடுமையான உடல் நலம் பாதிக்கப்பட்டார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இயற்கைக்கு மாறான உடலுறவு கொண்டதாக அவருடைய கணவரை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் ஜக்தல்பூர் கூடுதல் அமர்வு நீதிமன்றம் அந்த நபருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்தது.
இது குறித்து கணவன் சத்தீஸ்கர் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கின் விசாரணை முடிந்து நேற்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
அதில் 2013-ம் ஆண்டு ஐ.பி.சி. பிரிவு 375-ல் செய்யப்பட்ட திருத்தத்தின்படி குற்றம் சாட்டப்பட்டவரின் செயலை குற்றமாக கருத முடியாது. மனைவி குறிப்பிட்ட வயதுக்கு மேல் இருக்கும் போது கணவன் செய்யும் எந்த ஒரு பாலியல் செயலும் பாலியல் வன்கொடுமையின் கீழ் வராது. சம்மதம் இனி முக்கியமில்லை.
மனைவியுடன் இயற்கைக்கு மாறான உடலுறவு குற்றமில்லை.இது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என தீர்ப்பளித்தார்.
- இரு தரப்புக்கும் கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.
- துப்பாக்கி சண்டையில் 2 பாதுகாப்பு படை வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
பிஜப்பூர்:
சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் இருந்து வருகிறது. இதையடுத்து நக்சலைட்டுகள் நடமாட்டம் அதிகம் உள்ள காட்டுப்பகுதிகளில் சிறப்பு அதிரடிப்படையினர் தேடுதல் வேட்டை நடத்தி கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் துப்பாக்கி சண்டையில் நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில் சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் இந்திராவதி தேசிய பூங்கா பகுதியில் உள்ள ஒரு வனப்பகுதியில் இன்று காலை பாதுகாப்புப் படையினர் நக்சலைட் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நக்சலைட்டுகள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து பாதுகாப்பு படையினர் எதிர்தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கும் கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 12 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த துப்பாக்கி சண்டையில் 2 பாதுகாப்பு படை வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறும்போது, இந்திராவதி தேசிய பூங்கா பகுதியில் உள்ள வனப்பகுதியில் பல்வேறு பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த வீரர்கள் நக்சலைட்டுகளை தேடும் பணியில் ஈடுபட்டி ருந்தபோது துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் 12 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். அவர்கள் அனைவரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன.
துப்பாக்கிச் சண்டையில் மாநில காவல்துறையின் மாவட்ட ரிசர்வ் காவல்படையைச் சேர்ந்த ஒருவர் மற்றும் சிறப்புப் பணிப் படையைச் சேர்ந்த ஒருவர் என 2 பாதுகாப்புப் படையினர் வீரமரணம் அடைந்தனர். 2 பேர் காயமடைந்தனர் என்றனர்.
அப்பகுதியில் தொடர்ந்து துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.
கடந்த ஜனவரி 16-ந்தேதி தெற்கு பிஜாப்பூர் மாவட்டத்தின் காடுகளில் நடந்த என்கவுண்டரில் 12 நக்சலைட்டுகளும், கடந்த 2-ந்தேதி பிஜாப்பூா் மாவட்டத்தின் கங்களூர் காவல் நிலையத்தின் எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த என்கவுண்டரில் 8 நக்சலைட்டுகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.