இந்தியா

டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்

Published On 2024-06-02 01:42 GMT   |   Update On 2024-06-02 05:53 GMT
  • குடிநீரை வீணாக்கினால் 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது.
  • கார் கழுவுதல், வீடுகளில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் விடுதல் போன்றவற்றிற்கு குடிநீரை பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது.

தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. அரியானா மாநிலம் டெல்லிக்கு திறந்து விடும் தண்ணீரை நிறுத்தியுள்ளது நிலைமையை மேலும் மோசமாகியுள்ளது.

டெல்லியில் ஒரு நாளைக்கு இரண்டு முறை குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்த நிலையில், இனி ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்படும் என மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் முன்னதாக அறிவித்திருந்தார். இதையடுத்து மக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதனிடையே குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில் குடிநீரை வீணாக்காமல் இருக்க அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக குடிநீரை வீணாக்கினால் 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது.

கார் கழுவுதல், வீடுகளில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் விடுதல் போன்றவற்றிற்கு குடிநீரை பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது.

இந்த நிலையில், பொதுமக்களுக்கு டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தண்ணீர் பற்றாக்குறையால், தேசிய தலைநகரின் பல பகுதிகளில் மக்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.



Tags:    

Similar News