இந்தியா

நடைபயிற்சிக்கு சென்ற பெண் டாக்டரிடம் சில்மிஷம்- மந்திரி செயலாளரின் கார் டிரைவர் கைது

Published On 2022-11-02 13:30 IST   |   Update On 2022-11-02 13:30:00 IST
  • கேரள நீர்பாசன துறை மந்திரியின் முதன்மை செயலாளரின் கார் டிரைவர் சந்தோஷ் என்பவர் தான் சில்மிஷத்தில் ஈடுபட்டவர் என தெரியவந்தது.
  • பெண் டாக்டர் அடையாளம் காட்டியதை தொடர்ந்து போலீசார் கைது செய்தனர்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள மியூசியம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் டாக்டர் ஒருவர் அதிகாலை நேரத்தில் நடைபயிற்சிக்கு சென்றார். அப்போது வாலிபர் ஒருவர் அவரை வழிமறித்து செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டார்.

இதுபற்றி அந்த பெண் டாக்டர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் கேரள நீர்பாசன துறை மந்திரியின் முதன்மை செயலாளரின் கார் டிரைவர் சந்தோஷ் என்பவர் தான் சில்மிஷத்தில் ஈடுபட்டவர் என தெரியவந்தது. அவரை பெண் டாக்டர் அடையாளம் காட்டியதை தொடர்ந்து போலீசார் கைது செய்தனர். அவர் மீது வேறு சில வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இது தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News