search icon
என் மலர்tooltip icon

    கேரளா

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 11 மாவட்டங்களில் மழையுடன் காற்றின் வேகமும் அதிகமாக இருக்கும். மணிக்கு 30 முதல் 40 கி.மீட்டர் வேகத்தில் இது இருக்கும்.
    • பொதுமக்கள் நீர் நிலைகள் பகுதிக்கு செல்ல வேண்டாம். வீட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கடந்த சில மாதங்களாக கடும் வெப்பம் நிலவி வருகிறது. வெயிலின் தாக்கம் அதிகமானதால் மின் நுகர்வும் அதிகரித்தது. இதனால் மின் நுகர்வுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் குறைந்து வருகிறது. வரும் நாட்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக இந்திய வானிலை மையம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், வருகிற 13-ந்தேதி வரை கேரளாவில் ஓரிரு இடங்களில் இடி-மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

    திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம் திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம் மற்றும் வயநாடு ஆகிய 11 மாவட்டங்களில் மழையுடன் காற்றின் வேகமும் அதிகமாக இருக்கும். மணிக்கு 30 முதல் 40 கி.மீட்டர் வேகத்தில் இது இருக்கும்.

    எனவே பொதுமக்கள் நீர் நிலைகள் பகுதிக்கு செல்ல வேண்டாம். வீட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    • கேரள சைபர் கிரைம் போலீசார், ரகசியமாக கண்காணித்து மோசடி ஆசாமியை கைது செய்தனர்.
    • குற்றத்தில் ஈடுபட்டவர்கள், பெரிய நெட்வொர்க் அமைத்து செயல்பட்டுள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    நாடு முழுவதும் ஆன்லைன் மோசடி சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதில் ஏராளமானோர் பணத்தை இழந்து தவித்து வருகின்றனர். இந்த மோசடிக்கு செல்போன்கள், சிம்கார்டுகள் தான் முக்கிய பங்காற்றி வருகின்றன.

    கேரள மாநிலம் வெங்கரையைச் சேர்ந்த ஒருவர் ஆன்லைன் ஷேர்மார்க்கெட் தளத்தில் முதலீடு செய்துள்ளார். இதில் ரூ. 1 கோடியே 8 லட்சத்தை இழந்த அவர், இது குறித்து போலீசில் புகார் செய்தார். அதன்பே ரில் மலப்புரம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதில் கர்நாடக மாநிலம் ஹரனபள்ளியில் வசிக்கும் ஒருவர் தான் ஆன்லைன் மோசடியில் முக்கிய குற்றவாளி என தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அங்கு சென்ற கேரள சைபர் கிரைம் போலீசார், ரகசியமாக கண்காணித்து மோசடி ஆசாமியை கைது செய்தனர். அவரிடம் இருந்து 40 ஆயிரம் சிம்கார்டுகள், 180 செல்போன்கள் மற்றும் 6 பயோ மெட்ரிக் ரீடர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

    விசாரணையில் அவரது பெயர் அப்துல் ரோஷன் (வயது 46) என்பதும், டெல்லியைச் சேர்ந்த இவர், கர்நாடகாவின் மடிக்கேரியில் வாடகை வீடு எடுத்து வசித்து வந்து இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளார் என தெரியவந்தது. தனியார் மொபைல் நிறுவனத்தின் சிம் விநியோகஸ்தரான இவர், வாடிக்கையாளர் புதிய சிம் கேட்டு வரும்போது, அவர்களது கைரேகைகளை, 2 அல்லது 3 முறை பதிவு செய்து அவர்களுக்கு தெரியாமல் அதனை சேகரித்து விடு வாராம். பின்னர் அதனை வைத்து புதிய சிம்கார்டுகள் ஒவ்வொன்றும் ரூ.50-க்கு வாங்கி ஆன்லைன் மோசடி செய்பவர்களுக்கும் விற்றுள்ளார்.

    இந்த சைபர் குற்றம் குறித்து கைதான ரோஷனிடம் போலீசார் தொட ர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த குற்றத்தில் ஈடுபட்டவர்கள், பெரிய நெட்வொர்க் அமைத்து செயல்பட்டுள்ளனர், அவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் செயல்படுவதாக மலப்புரம் மாவட்ட போலீஸ் அதிகாரி சசிதரன் தெரிவித்துள்ளார். அவர்களையும் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். 

    • பெண்கள் உள்பட 9 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.
    • கடித்துவிட்டு ஓடிய தெருநாயை மாநகராட்சி ஊழியர்கள் தேடி வருகின்றனர்.

    கேரளா மாநிலம் கொச்சி அருகே மூவாட்டுப்புழாவில் 9 பேரை துரத்தி துரத்தி தெருநாய் கடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

    இதில், சிறுவன், பெண்கள் உள்பட 9 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், அவர்களை மருத்துவர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    9 பேரை கடித்துவிட்டு ஓடிய தெருநாயை மாநகராட்சி ஊழியர்கள் தேடி வருகின்றனர்.

    மேலும், கோழிக்கோடு அருகே ராதாபுரத்தில் முதியவர்கள் இருவரை கடித்துவிட்டு தெருநாய் ஓடியுள்ளது.

    • சில நாட்களுக்கு முன்பு அரளி பூக்களை சாப்பிட்ட கால்நடைகள் இறந்தன.
    • அரளிப்பூவின் இதழ்களை சாப்பிட்ட சூர்யா சுரேந்திரன் என்பவர் இறப்பு.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் சபரிமலை அய்யப்பன் கோவில், குருவாயூர் கிருஷ்ணன் கோவில், பத்ம நாபபுரம் பத்மநாத சுவாமி கோவில் உள்ளிட்ட ஏராள மான பிரசித்தி பெற்ற கோவில்கள் இருக்கின்றன. இந்த கோவில்களுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் ஆண்டு தோறும் வருகின்றனர்.

    கேரளாவில் சபரிமலை அய்யப்பன் கோவில் உள்ளிட்ட 1,200-க்கும் மேற்பட்ட கோவில்களை திருவிதாங்கூர் தேவ சம்போர்டு நிர்வகித்து வரு கிறது. அவற்றின் வழி காட்டுதலின் படியே அந்த கோவில்கள் அனைத்தும் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் திருவிதாங்கூர் தேவசம்போர்டு கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் மல்லி, செம்பருத்தி, துளசி உள்ளிட்ட 5 மலர்களை மட்டுமே பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

    கேரள மாநிலத்தில கடந்த சில நாட்களுக்கு முன்பு அரளி பூக்களை சாப்பிட்ட கால்நடைகள் இறந்தன. மேலும் அரளிப்பூவின் இதழ்களை சாப்பிட்ட சூர்யா சுரேந்திரன் என்பவர் இறந்துவிட்டதாக தகவல் வெளியாகின. இந்த சம்பவங்கள் கேரள மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதையடுத்தே திரு விதாங்கூர் தேவசம்போர்டு தனது கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் 5 வித மலர்களை மட்டும் பயன்படுத்த அறிவுரை வழங்கி ஆணை பிறப்பித்திருக்கிறது. இறந்த நபரின் உடல் பரிசோதனையில் அவரது மரணத்துக்கு அரளியின் நச்சுத்தன்மை தான் காரணம் என்பது உறுதி செய்யப்ட்டால் இந்த பூக்களின் பயன்பாடு முற்றிலுமாக நீக்கப்படும் என்று திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பிரசாந்த் தெரவித்தார்.

    மேலும் அவர் கூறுகையில், கோவில்களில் பயன்படுத்தப்படும் 5 வகை மலர் செடிகளை நடும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அது தவிர தென்னை, பாக்கு மரங்களும் நடவு செய்யப்பட உள்ளது என்றார்.

    • ஜப்பானிய காய்ச்சல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாதிக்கும். ‘நைல் காய்ச்சல்’ பெரியவர்களை தாக்கும்.
    • ‘நைல் காய்ச்சல்’ அறிகுறிகள் இருப்பவர்கள் உடனடியாக மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு காய்ச்சல்கள் பரவி வருகின்றன. இதன் காரணமாக அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் ஏராளமானோர் சிகிச்சை பெற்றனர். இந்நிலையில் அங்கு 'நைல் காய்ச்சல்' பரவி வருகிறது.

    கேரள மாநிலம் திருச்சூர், கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களை சேர்ந்த சில சிறுவர்கள் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து அந்த சிறுவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், அவர்களுக்கு 'நைல் காய்ச்சல்' பாதிப்பு இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    'நைல் காய்ச்சல்' எனபது கியூலக்ஸ் கொசுக்களால் பரவும் தொற்று நோய் ஆகும். தலைவலி, காய்ச்சல், தசைவலி, தலை சுற்றல், ஞாபக மறதி உள்ளிட்டவை நைல் காய்ச்சல் பாதிப்பின் அறிகுறிகளாகும். சிலருக்கு காய்ச்சல், தலைவலி, வாந்தி மற்றும் அரிப்பு போன்ற அறிகுறிகளும் இருக்கும்.

    இந்த காய்ச்சல் ஜப்பானிய காய்ச்சலை போன்றதாகும். ஆனால் அந்த காய்ச்சலை போன்று ஆபத்தானது இல்லை. ஜப்பானிய காய்ச்சல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாதிக்கும். 'நைல் காய்ச்சல்' பெரியவர்களை தாக்கும். ஆனால் தற்போது கேரளாவில் சிறுவர்களுக்கு 'நைல் காய்ச்சல்' தொற்று ஏற்பட்டிருக்கிறது.

    'நைல் காய்ச்சல்' வைரஸ் 1937-ம் ஆண்டு முதன் முதலாக உகாண்டாவில் கண்டறியப்பட்டது. 2011-ம் ஆண்டு கேரள மாநிலம் ஆலப்புழாவில் முதன்முதலாக 'நைல் காய்ச்சல்' பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது அந்த காய்ச்சல் பரவி வருகிறது. இதையடுதது மாநில சுகாதாரத்துறை சார்பில் காய்ச்சல் பாதிப்பு உள்ள பகுதிகளில் சுகாதாரப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

    'நைல் காய்ச்சல்' பாதிப்பு உள்ள திருச்சூர், கோழிக்கோடு, மலப்புரம் ஆகிய 3 மாவட்டங்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இந்த மாவட்டங்களில் பருவமழைக்கு முந்தைய துப்புரவு பணிகளை தீவிரப்படுத்த சுகாதாரத்துறை மந்திரி வீனா ஜார்ஜ் அறிவுறுத்தி உள்ளார்.

    இந்த காய்ச்சல் கொசுக்களால் பரவுகிறது என்பதால் திருச்சூர், கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டு இருக்கிறது. சுகாதார நடவடிக்கைகளை தவிரப்படுத்த மாவட்ட மருத்துவ அலவலர்களுக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

    'நைல் காய்ச்சல்' அறிகுறிகள் இருப்பவர்கள் உடனடியாக மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும் என்றும், அனைவரும் தங்களின வீட்டின் சுற்றுப்புறத்தை தண்ணீர் தேங்காமல் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் எனவும் மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தி இருக்கிறது.

    • பயங்கரவாத தடுப்பு படையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
    • துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் சிக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தை சேர்ந்த பிரபல கும்பலின் தலைவன் பெரும்பாவூர் அனஸ். கொச்சி பியூட்டிபார்லர் துப்பாக்கிச்சூடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இவர் மீது மேலும் பல வழக்குகள் இருக்கின்றன. இவருடைய கூட்டாளிகள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் பயங்கரவாத தடுப்பு படையினர் மற்றும் போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

    அனசின் கூட்டாளியான எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா அருகே உள்ள மஞ்சலி கொச்சுகுன்றும்புரம் பகுதியை சேர்ந்த ரியாஸ் என்பவரின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது அவரது வீட்டில் 2 கைத்துப்பாக்கிகள் உள்ளிட்ட 4 துப்பாக்கிகள், 2 கத்திகள், துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 25 குண்டுகள் இருந்தன.

    அவற்றை சோதனையில் ஈடுபட்ட பயங்கரவாத தடுப்பு படையினர் பறிமுதல் செய்தனர். மேலும் ரியாசின் வீட்டில் இருந்து ரூ8.83 லட்சம் ரொக்கப்பணமும் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து ரியாசை போலீசார் கைது செய்தனர். ரியாசின் வீட்டில் கடந்த 8 ஆண்களுக்கு முன்பு இதேபோல் பயங்கர ஆயுதங்களை போலீசார் கைப்பற்றி இருக்கின்றனர்.

    இந்நிலையில் தற்போதும் அவர் துப்பாக்கிகளுடன் சிக்கியிருக்கிறார். அவர் தனது வீட்டில் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பதுக்கிவைத்திருந்தது தொடர்பாக அவரிடம் பயங்கரவாத தடுப்பு படையினர் மற்றும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோன்று அனசின் மற்றொரு கூட்டாளியான அல்தாப் என்பவரின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. அங்கிருந்து ரிவால்வர் கேஸ், கைவிலங்கு மற்றும் சில பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அனசின் நெருங்கிய கூட்டாளியான பெரும்பாவூரை சேர்ந்த ஷாஜி பாப்பன் என்பவரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.

    மேலும் அனசுடன் தொடர்புடையவர்களாக கருதப்படும் கோவை மாவட்டம் ஆனைமலையில் ஒருவரின் வீடு, மேட்டுப்பாளையத்தில் ஒருவரின் வீடு உள்ளிட்ட இடங்களிலும் பயங்கரவாத தடுப்பு படையினர் அந்த மாவட்ட போலீசாரின் உதவியுடன் சோதனை நடத்தி உள்ளனர்.

    பயங்கரவாத தடுப்பு படையினரின் அதிரடி சோதனையில துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் சிக்கியிருப்பது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மலையாளத்தில் 280-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
    • தமிழில் 12 படங்களில் நடத்துள்ளார்.

    திருவனந்தபுரம்:

    பார்கின்சன் மற்றும் அல்சைமர் என்ற நரம்பியல் சிதைவு நோயால் அவதிப்பட்டு வந்த பிரபல மலையாள நடிகை கனகலதா காலமானார். அவருக்கு வயது 63.

    கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்தவர் நடிகை கனகலதா. 1960-ம் ஆண்டு பிறந்த இவர், தனது சிறு வயதில் நாடகங்களில் நடித்து வந்தார். அதன் மூலமாக திரைப்படத்து றைக்கு வந்த அவர், ஏராளமான மலையாள படங்களில் நடித்திருக்கிறார்.

    மலையாளத்தில் 280-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் அவர், தமிழில் 12 படங்களில் நடத்துள்ளார்.

    அது மட்டுமின்றி ஏராளமான தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துவந்தார். இந்நிலையில் தான் கடந்த 2021-ம் ஆண்டில் அவர் நரம்பியல் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. அதன்பிறகு அவரால் சினிமா மற்றும் டி.வி. சீரியல்களில் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

    படுத்தபடுக்கையாக வீட்டில் சிகிச்சை பெற்று வந்த அவரை, அவரது சகோதரி விஜயம்மா உடனிருந்து கவனித்தது வந்தார். அவரது மருத்துவ சிகிச்சைக்கு திரைப்பட அகாடமி மற்றும் மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கம் உதவி வந்தது.

    இந்நிலையில் நடிகை கனகலதா நோய் பாதிப்பு காரணமாக திருவனந்தபுரம் மாவட்டம் மலையின்கீழ் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து பரிதாபமாக இறந்தார். அவரது உடலுக்கு மலையாள திரையுலக நடிகர்கள் மற்றும் நடிகைகள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

    • கொல்லம், ஆலப்புழா, திருச்சூரில் 37 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
    • மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு வெயிலின் தாக்கம் தற்போது அதிகமாக உள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். மின் தேவை அதிகமான நிலையில், மின் பகிர்வில் கட்டுப்பாடுகளை கேரள மின்வாரியம் மேற்கொண்டுள்ளது.

    இந்த நிலையில் வெப்பத்தின் தாக்கம் நாளை (7-ந் தேதி) வரை பல மாவட்டங்களில் தொடர்ந்து இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பாலக்காடு மாவட்டத்தில் 39 டிகிரி செல்சியஸ் ஆகவும், கொல்லம், ஆலப்புழா, திருச்சூரில் 37 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையில் பாலக்காடு உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று கோடை மழை பெய்தது. இதனால் அங்கு வெப்பம் சற்று தணிந்தது. எர்ணாகுளம், வயநாடு மாவட்டங்களில் வருகிற புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • திருவனந்தபுரத்திற்கு விமானம் மூலம் வந்த பயணிகளை சுங்க இலாகாவினர் சோதனை செய்தனர்.
    • உள்ளாடைக்குள் தங்கம் மறைத்து வைத்து கடத்தி வருவது தெரியவந்தது.

    திருவனந்தபுரம்:

    திருவனந்தபுரம் விமான நிலையம் வழியாக வெளிநாடுகளில் இருந்து தங்கம், போதைப்பொருட்கள் போன்றவை அடிக்கடி கடத்தி வரப்படுகின்றன. அவற்றை சுங்க இலாகாவினர் அவ்வப்போது மடக்கி பிடித்து வருகின்றனர். ஆனாலும் கடத்தல் சம்பவம் தொடர்ந்தே வருகிறது.

    இந்த நிலையில் நேற்று திருவனந்தபுரத்திற்கு விமானம் மூலம் வந்த பயணிகளை சுங்க இலாகாவினர் சோதனை செய்தனர். அப்போது ஒரு பயணி மீது அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரது உடமைகளை பரிசோதித்தபோது எதுவும் கிடைக்கவில்லை. தொடர்ந்து அவரை தனி அறைக்கு அழைத்துச்சென்று உடல் சோதனை நடத்தினர்.

    அப்போது அவர் உள்ளாடைக்குள் தங்கம் மறைத்து வைத்து கடத்தி வருவது தெரியவந்தது. அவற்றை சுங்க இலாகாவினர் பறிமுதல் செய்தனர். இதேபோல் மற்றொரு பயணியும் உள்ளாடைக்குள் மறைத்து தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 3 தங்க பிஸ்கட்டுகள், ஒரு தங்க நாணயம் உள்பட ரூ.33 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் சபரிமலையில் காணப்பட்டது.
    • உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படும்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் சபரிமலைக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். இதனால் அங்கு எப்போதும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனை தொடர்ந்து பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு செய்து தரிசனம் செய்ய வரும் முறை அமல்படுத்தப்பட்டது. இதனால் ஏராளமானோர் இந்த முன்பதிவை பயன்படுத்தி வந்தனர். இதற்கிடையில் சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவும் செய்யப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த 2 முறைகளால் கடந்த மண்டல, மகர விளக்கு சீசனில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் சபரிமலையில் காணப்பட்டது.

    இதனால் தரிசனத்திற்கு பக்தர்கள் சுமார் 15 மணி நேரம் வரை வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை நிலவியது. இதுகுறித்து கேரள ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்தது.

    இதனை தொடர்ந்து பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வது தொடர்பாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு உயர்மட்ட ஆலோசனை கூட்டம் தலைவர் பிரசாந்த் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கடந்த சீசனில் உடனடி முன்பதிவு மூலம் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு வந்ததால் தினமும் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் திரண்டனர். இதனால் தான் கூட்ட நெரிசல் ஏற்பட்டது என வெளியான தகவல் குறித்து விவாதிக்கப்பட்டது.

    இதன் அடிப்படையில் உடனடி தரிசன முன்பதிவு முறையை ரத்து செய்ய கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இனி ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சீசன் காலங்களில் ஒரு நாளைக்கு 80 ஆயிரம் பக்தர்களை மட்டும் தரிசனத்திற்கு அனுமதிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

    இதனால் நிலக்கல், பம்பை உள்ளிட்ட 10 இடங்களில் செயல்பட்டு வந்த உடனடி முன்பதிவு கவுண்டர்கள் விரை வில் மூடப்படுகிறது.

    மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்கு 3 மாதங்களுக்கு முன்னதாகவே ஆன்லைன் முன்பதிவு வசதி ஏற்படுத்தவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதன் மூலம் சீசன் தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னதாகவே முன்பதிவை உறுதி செய்து கொள்ளலாம்.

    கூட்டம் முடிந்ததும் தேவஸ்தான தலைவர் பிரசாந்த் கூறுகையில், சபரிமலையில் இனி வரும் காலங்களில் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் மட்டுமே தரிசனத்திற்கு அனு மதிக்கப்படுவார்கள். உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படும்.

    பம்பை முதல் சன்னிதானம் வரை ரோப்கார் அமைப்பது குறித்து ஆய்வு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. இதன் அறிக்கை வருகிற 23-ந் தேதி ஐகோர்ட்டில் சமர்பிக்கப்படும். கோர்ட்டு அனுமதி கிடைத்ததும் ரோப் கார் பணிகள் தொடங்கப்படும். முதல் கட்டமாக அப்பம், அரவணைக்கு தேவையான பொருட்களை கொண்டு செல்லவும்,அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் சேவைக்கும் ரோப் கார் பயன்படுத்தப்படும் என்றார்.

    • மேற்கு வங்க மாநிலத்தில் கவர்னராக இருப்பவர் சி.வி. ஆனந்தபோஸ்.
    • இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருவனந்தபுரம், மே.5-

    மேற்கு வங்க மாநிலத்தில் கவர்னராக இருப்பவர் சி.வி. ஆனந்தபோஸ். இவர் மீது கவர்னர் அலுவலக பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் கூறிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சூழலில் சி.வி. ஆனந்தபோஸ், கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள ஆலுவா வழியாக சென்றார். அப்போது அவருக்கு எதிராக கேரள இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்த தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் எடையூர் பூக்காத்திரியில் உள்ள ஆலப்பட்டப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் குஞ்சீறும்மா, உலகின் வயதான பெண் என அறியப்பட்ட இவர், நேற்று காலமானார். அவருக்கு வயது 121. ஆதார் அட்டையின் படி இவர் 1903-ம் ஆண்டு ஜூன் மாதம் பிறந்ததாக தெரிகிறது.

    அதிக முறை வாக்களித்த வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் வழங்கிய சான்றிதழை குஞ்சிறும்மா பெற்றுள்ளார்.

    ×